திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சுட்டெடுத்த அதிரடி சிறு குறு ‘குபீர்’ சிரிப்புக் கதை!

                                                                   நீதிமன்றம்.

அன்று வெள்ளிக் கிழமை. 

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“சரக்கடிச்சேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பொட்டலத்தில் கொஞ்சம் ரொட்டியும் மாமிசமும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். மாமிசத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை, அன்றைக்கு வழக்கமா மாமிசம் சாப்பிடமாட்டேன். ”
**********
***சுட்டுக்கொள்ள அனுமதித்தவர் பெயர், கதை[பழசு] இடம்பெற்ற இதழ் போன்ற விவரங்களைக் குறித்துவைக்கவில்லை. ஹி... ஹி... ஹி!!! 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

இந்தப் ‘புளுகுணி’ தப்பிப் பிழைத்தது[நேபாளப் பேரழிவில்] மிகப் பெரிய தப்பு!

நேபாளப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது.

தங்களின் உயிரிழப்பைப் பொருட்படுத்தாத கருணையுள்ளத்தவர்கள்தான், உயிர் பிழைக்கப் போராடுபவர்களைத் தேடிக் கண்டறிந்து காப்பாற்றப் பாடுபடுகிறார்கள்.

அவர்களில், இவர்களின் உதவியாலோ தற்செயலாகவோ தப்பிப் பிழைத்த மரமண்டையர்களில் சிலர், கற்பனைக் கடவுள்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில்,  சிவபெருமானைக் கண்டதாகச் சொல்லும்[காணொலி> கீழே] ‘புளுகிணி’யும் ஒருத்தி.

மனிதாபிமானத்தை வளர்க்க வேண்டிய நேரத்தில் இப்படிப் பொய் பேசி[சுய விளம்பரம்] அனுமானக் கடவுள்களுக்குப் புகழ் சேர்ப்பவர்கள் கண்டிக்கப்படுதற்கு உரியவர்கள் மட்டுமல்ல, கடும் தண்டனைக்கும் உரியவர்கள்.

இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுமாறு, அல்லாவையும் கர்த்தரையும் இந்துக் கடவுள்களையும் பிரார்த்தனை[பல மூடநம்பிக்கைகளின் வித்து] செய்வோரும் இவர்களில் அடங்குவார்கள்.
கருத்துரைகள்[3 மட்டும்]:
கைலாஷ் சிவன் உங்களை மட்டும் எப்படிக் காப்பாற்றியது? 5000 மேற்பட்ட மக்களை ஏன் காப்பற்றவில்லை?

@jeni-x1j

9 மணிநேரம் முன்ஆனால் நீ போடு போட்டியே உயிரோடு வந்தததும் சிவனை நேரில் பார்த்தேன் என்று. உன்னைத் தூக்கிப் பெருவெள்ளத்தில் போட்டிருந்தால் சிவன் உன்னை காப்பாற்றி இருப்பானா?


@ChellaPandian-cq9vd

சிவரஞ்சனி ...தனது

பெருமை  பற்றிய

விளம்பரத்தைப் பேசுவதுபற்றி.....

ஒருநொடி

மீளவும் சிந்திக்கலாமே

தப்பிவர முடியாதவர்

பலருமே வேதனையில்

துணைவர்

இணையர்கள் நிலைகளை எண்ணினாலே

நீங்கள் செய்யும் சுயபுராணம்....

பார்ப்பவர்களையே

வேதனைப்படுத்தும்

இக்கட்டான நேரத்தில்

எதற்காக இந்த விளம்பரம்

சிவனை நேரில் கண்டதாகவே

கூறுகிற....

வீண்விளம்பரங்கள்

சமயோஜிதம் அறியாது

கணவனையும் உடன்வைத்து

எதைஎதையோ கூறுவது

மூடத்தனம்.


2

சனி, 29 ஆகஸ்ட், 2026

அடிமை அமைச்சருக்கு அமுத முத்தம் தருவாரா முதல்வர் ஜோசப்?!

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாகத் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்[நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்> https://www.maalaimalar.com].

செங்கோட்டையன் ஒரு மனிதன். ஜோசப்பும் மனிதன்தான்{அதிர்ஷ்டத்தால்[?] முதல்வர் ஆன வெகு சாதாரண மனிதன்}. ஒரு மனிதன் இன்னொருவன் பக்கத்தில் அமர்ந்தது சட்டமன்றத்தில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தியது எப்படி?

ஜோசப்பு[சட்டமன்றத்தைக் கிறிஸ்தவப் பிரச்சாரக் களம் ஆக்கியவர்] வெறும் மனிதப் பிறவியல்ல; மானுட இனத்தை உய்விக்கக் கர்த்தரால் அனுப்பப்பட்ட புனிதர் என்பதாலோ?

புனிதர் பக்கத்தில் அமர்ந்ததே உற்சாகப்படுத்தும் என்றால், அவர் செ.ஐயனாரை இறுகக் கட்டியணைத்து, இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அமுத முத்தங்கள் பதித்திருந்தால் அனைவரும் மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்திருப்பார்களோ?

பதவி சுகத்துக்காக, ஜோசப் முன்னிலையில் ஓர் அடிமையாகத் தலை தாழ்த்திக் குனிந்து கைகட்டிப் பணிவு காட்டும் இவர், அவரைத் தனிமையில் சந்திக்கும்போது, அவரின் திருவடிகளைப் புனித நீரால் கழுவி வழிபாடு நிகழ்த்துவாரோ?

திருச்செங்கோடு மலையில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கிற அந்தச் செங்கோட்டையன்[அர்த்தநாரி ஈஸ்வரன்] அல்லாமல் வேறு யார் இதை அறிவார்?

https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale

சமர்ப்பணம்: டமிலன்ஸ்!!!

                                          மனைவியை ஒய்ஃப் என்றோம்.

வாழ்க்கையை லைஃப் என்றோம்.

கத்தியை நைஃப் என்றோம்.

புத்தியைப் புதைத்தே நின்றோம் !

அத்தையை ஆன்ட்டி என்றோம்.

அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.

கடமையை டுயூட்டி என்றோம்.

காதலியைப் பியூட்டி என்றோம்!

காதலை லவ்வென்றோம்.

பசுவைக் கவ்வென்றோம்.

ரசிப்பதை “வாவ்” என்றோம்.

வாய் பிளப்பதை ‘அவ்’ என்றோம்

முத்தத்தைக் கிஸ் என்றோம்.

பேருந்தைப் பஸ் என்றோம்.

அளவைச் சைஸ் என்றோம்.

அழகை நைஸ் என்றோம் !

மன்னிப்பைச் சாரி என்றோம்.

புடவையைச் சேரி என்றோம்.

ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.

தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!

மடையனை லூசு என்றோம்.

வாய்ப்பைச் சான்சு என்றோம்.

மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.

தமிழை அறவே மறந்தோம்!
***********
நன்றி: MAM Media & Marketing
***********

சமர்ப்பணம்> சமஸ்கிருதம்.
தமிழ்?
படையல், காணிக்கை, ஒப்படைப்பு.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

'நேபாளப் பேரழிவு'... ஒரு போலி ஆன்மிகவாதி[ஜக்கி வாசுதேவன்]யின் நீலிக்கண்ணீர்!!!

தனக்குத்தானே ‘சத்குரு’[கடவுளின் குரு]என்று பட்டம் கொடுத்து, உலகை நம்பச் செய்த மோசடிப் பேர்வழி ஜக்கி வாசுதேவன்.

தன்னைத் தேடிவரும் அப்பாவிகளிடம் லட்சங்களில் பணம் வசூலித்துக் கோடிகளில் புரள்பவர் இந்த நபர்.

சொகுசுக் கார்கள் என்றில்லாமல் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் உல்லாசப் பேர்வழியும்கூட.

நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி இந்த ஆசாமியின் சீடர்கள் 80 பேர் காணாமல் போயிருந்தால், ஹெலிகாப்டரில் அங்குச் சென்று, வானத்தில் வட்டமிட்டபடி மந்திரம் ஓதியிருந்தால், வெள்ளம் வடிந்து அத்தனைப் பேரும் மீண்டு வந்திருப்பார்களே, ஏன் செய்யவில்லை?[வெள்ளியங்கிரியிலிருந்தும் இதைச் செய்திருக்கலாம்.]

“கடவுளின் குரு என்று சொல்லிக்கொண்டு கண்ணீர் வடிப்பது போல் காணொலி வெளியிட வெட்கமாக இல்லையா ஜக்கி? இப்படியொரு காணொலி[பொய்யான செய்தி?] வெளியிட்டது, காணாமல்போயிருந்த உம்மை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கான உத்தியா சத்துக்குருவே?”

இந்த ஆளின் நீலிக் கன்ணீர் குறித்து ஏராளமான வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துரைகள் அவசியம் வாசிக்கத்தக்கவை. குறிப்பிடத்தக்கனவற்றை மட்டும் இங்கு இணைத்திருக்கிறேன்[திருத்தங்கள் செய்யப்படவில்லை]. வாசியுங்கள்.


ஸ்வாமி நீங்களும் போயிருந்தா நன்னா பேஷா இருந்திருக்கும்..
239
நீ போய் இருந்தால் கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைத்திருக்கும்
212
இவனை இன்னும் கடவுள் அவதாரம் என்று பின்னாடி போறாங்க 😢😢😢😢 பெரும் வேதனை
291
உன்னுடைய சக்தியை பயன்படுத்தி நீரின் வழித்தடத்தை மாற்றி விடலாம்ல
139
ஜக்கி போகாம விட்டதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமா இருக்கு
111
போகாதீங்க போகாதீங்க டான்னு சொன்னா எவன் கேட்கிறான்
39
நீங்க தான் பெரிய ஞானி ஆச்சே நீங்க நினைச்சாலே அங்கே வெள்ளம் காணாம போயிடும்
3
இவன் ஒரு நம்பர் ஒன் நடிகர் நேக வாலிப பிள்ளைகள் வாழ்க்கையை கெடுத்தவன்
27
இவருடைய ஆன்மீக ஆன்மீக வகுப்பில் உள்ளுணர்வு பற்றி அதிகம் கூறப்படுகிறது பறவைகள் விலங்குகள் இந்த உள்ளுணர்வு மூலமாக பேரிடர் காலங்களில் தப்பித்துக் கொள்வதாக கூறுகிறார் மேலும் இவருடைய ஆன்மீக பயிற்சிகள் இந்த உள்ளுணர்வை அதிகப்படுத்துவதாகவும் வெளிப்படுத்துகிறார் ஆனால் இவருடைய சிசியர்கள் இந்த பேரிடரில் சிக்கி இறந்திருக்கிறார்கள் இவருடைய ஆன்மீக பயிற்சி என்ன உதவி செய்தது இறைவன் முன்னால் மனிதன் மிகச் சிறியவன்.

Iyarkai always ultimate....nee thapuchitta!
6
நஷ்ட ஈடு வாங்கி ஆட்டைய போட இந்த கண்ணீர் 😡🙏🙏
11
காட்டை அழித்து இயற்க்கை அழித்து பக்தி பெயரில் பணம் பண்ணுபவன்
16
இயற்கைக்கு எல்லா ......,....ம் ஒன்றுதான்.
5
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் கடவுளே
9
இது ஒரு பெரும் துயரம்.....இது மாதிரி யாருக்கு வேணாலும் எப்பொழுது வேணாலும் நடக்கலாம்.....அதனால் குற்றம் குறை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருங்கள் மக்களே.....
7
ஜக்கி நீ முதலில் ஒரு தமிழன் கூட கிடையாது ஆனால் எப்படி உன்னால் தமிழ்நாட்டில் வந்து ஈஷா யோகா வைக்க முடிந்தது தமிழன் நாம் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறோம் இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
32
உடலை சிவம் ஆகவும் உள் நின்று இயங்கும் உயிரை ஈசன் ஆகவும் உணர முடியாது போகும் தன் ஞானம் கொண்ட அஞ்ஞானம் எல்லாம் இப்படி தான் இயற்கை யே களை எடுக்க துவங்கி உள்ளது மக்களே
6
Don't worry. We are praying for the safe return of all people 🙏
9
இவர் முனி சித்தர் முன் கூட்டியே இப்படி இடர் வரும் என்று தெரிந்து இருக்க வேனுமே
32
இவன் செய்கின்ற பாவம் அவர்களை பலி ஆக்கிவிட்டது,,

13