“சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாகத் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் செங்கோட்டையன்[நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்> https://www.maalaimalar.com].
ஜோசப்பு[சட்டமன்றத்தைக் கிறிஸ்தவப் பிரச்சாரக் களம் ஆக்கியவர்] வெறும் மனிதப் பிறவியல்ல; மானுட இனத்தை உய்விக்கக் கர்த்தரால் அனுப்பப்பட்ட புனிதர் என்பதாலோ?
புனிதர் பக்கத்தில் அமர்ந்ததே உற்சாகப்படுத்தும் என்றால், அவர் செ.ஐயனாரை இறுகக் கட்டியணைத்து, இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அமுத முத்தங்கள் பதித்திருந்தால் அனைவரும் மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்திருப்பார்களோ?
பதவி சுகத்துக்காக, ஜோசப் முன்னிலையில் ஓர் அடிமையாகத் தலை தாழ்த்திக் குனிந்து கைகட்டிப் பணிவு காட்டும் இவர், அவரைத் தனிமையில் சந்திக்கும்போது, அவரின் திருவடிகளைப் புனித நீரால் கழுவி வழிபாடு நிகழ்த்துவாரோ?
திருச்செங்கோடு மலையில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கிற அந்தச் செங்கோட்டையன்[அர்த்தநாரி ஈஸ்வரன்] அல்லாமல் வேறு யார் இதை அறிவார்?
.jpg)