எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தேவை...தேவை...இந்துக் கடவுள்களுக்கு ஒரு பட்டியல்!!!

''இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்'' என்று, சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று முன்தினம், இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றதாக இன்றைய 'தமிழ் இந்து'[09.04.2019] செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களின் மதநம்பிக்கையைப் பாராட்டுகிறோம்.

இது தொடர்பாக, இந்த அமைப்பைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், ''நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் அரசியல்வாதிகள் இழிவுபடுத்திப் பேசிவருகிறார்கள்[திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தவிர வேறு யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின்கூட இந்து மதத்திற்குத் தான் எதிரியல்ல என்று உறுதி மொழிந்திருக்கிறார்]. இதை ஏற்க முடியாது. எனவேதான் இவ்வாறு உறுதிமொழி ஏற்றிருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்.

மகிழ்ச்சி.

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என்று அறிவிப்புச் செய்யும் இந்து அமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்......

இந்நாள்வரை , இந்துமதக் கடவுள்களின் எண்ணிக்கையை அறிந்தவர் எவருமில்லை. எனவே.....

அதற்கான  பட்டியலை உடனடியாக வெளியிடுங்கள்[பட்டியலைப் பார்ப்பவர்கள், மறந்தும்கூட இந்துக் கடவுள்களை விமர்சிக்க மாட்டார்கள்]. பட்டியல் தயாரிக்க ஆறு மாதங்கள் ஆகுமா?

ஆறு மாதம் என்ன, ஆறு ஆண்டுகள் ஆனாலும் சரியே. இக்கணமே தயாரிப்பில் ஈடுபடுங்கள். ஒரு குட்டிக் கடவுள்கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.

வாழ்க இந்துமதக் கடவுள்கள்!
ஜீயர் பேச்சு க்கான பட முடிவு
===============================================================================