எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மொழிவாரிக் கணக்கெடுப்பு...இந்தி வெறியர்களின் தில்லுமுல்லு!!!

இந்தியாவில்  தமிழ், தெலுங்கு, இந்தி முதலான இந்திய மொழிகளைப் பேசுவோர் பற்றிய புள்ளிவிவரம் தயாரித்ததில் மிகப் பெரும் தில்லுமுல்லு நிகழ்ந்துள்ளது[இந்தி பேசுவோர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது].

இதை, உரிய ஆதாரங்களுடன் அறிவித்திருக்கிறார் 'கணேஷ் நாராயண தேவ்' என்னும் அறிஞர். இது குறித்த விவரங்கள் கீழே இடம்பெற்றுள்ளது.

இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் போக்கை முற்றிலுமாய்த் தவிர்த்து, மற்ற மொழிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு நடுவணரசை வலியுறுத்தி இந்தி பேசாத இந்திய மக்கள் போராட வேண்டிய நேரம் இது.