எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மொழிவாரிக் கணக்கெடுப்பு...இந்தி வெறியர்களின் தில்லுமுல்லு!!!

இந்தியாவில்  தமிழ், தெலுங்கு, இந்தி முதலான இந்திய மொழிகளைப் பேசுவோர் பற்றிய புள்ளிவிவரம் தயாரித்ததில் மிகப் பெரும் தில்லுமுல்லு நிகழ்ந்துள்ளது[இந்தி பேசுவோர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது].

இதை, உரிய ஆதாரங்களுடன் அறிவித்திருக்கிறார் 'கணேஷ் நாராயண தேவ்' என்னும் அறிஞர். இது குறித்த விவரங்கள் கீழே இடம்பெற்றுள்ளது.

இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் போக்கை முற்றிலுமாய்த் தவிர்த்து, மற்ற மொழிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு நடுவணரசை வலியுறுத்தி இந்தி பேசாத இந்திய மக்கள் போராட வேண்டிய நேரம் இது.