எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

கூத்தாடிகளைக் கொண்டாடும் தமிழனே உலகின் ‘நம்பர் 1’ முட்டாள்!!!

சில நாட்கள் முன்புவரை, உலகிலேயே தமிழன்தான் அதி புத்திசாலி என்னும் நம்பிக்கையில்[“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாரதி சொன்னதை நினைவுகூர்க] இறுமாப்புடன் ஏறு போல் பீடு நடை போட்டுப் பிற இனத்தவரைப் பொறாமையில் புழுங்கச் செய்துகொண்டிருந்தோம்.

இன்றோ, உலகிலேயே 'நம்பர் 1’ முட்டாள் தமிழன்தான் என்று நிரூபணம் ஆகிவிட்ட நிலையில்[நடிகன் விஜய் நிகழ்வில் பலர் உயிரிழப்பு & படுகாயம்], தலை குனிந்து தள்ளாடி நடந்துகொண்டிருக்கிறோம்.

{பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு. அரசியல் பலத்தைக் காட்ட கூத்தாடி 4 மணி[10?] நேரம் தாமதமாக வந்திருக்கிறான்> ஆதாரம்: ‘தினத்தந்தி’[செய்தி> பகல் 12.30 மணி}
கவர்ச்சி நடிகைகளுடன் கட்டிப்புரண்டு குத்தாட்டம் போடும் ஒரு நடிகனைக் காண்பதற்காக, பல்லாயிரக் கணக்கில் ஒன்றுகூடி, பல மணி நேரங்கள் காத்திருந்து, அவன் வரும்போது முட்டிமோதிக்கொண்டு மூச்சுத் திணறி உயிரழந்தவர்களைத் தமிழினத்தவர் என்பது வெட்கக்கேடு.

நடிகன்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதே இம்மாதிரியான அவலங்கள் நிகழ வேண்டும் என்பதற்காகத்தான்.

மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காக அவன்கள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இது புரியாத செம்மறி ஆடுகளாகத் தமிழர்கள் ஆகிப்போனது தமிழின வரலாற்றில் இடம்பெறாத பேரிழிவு ஆகும்.

இனியேனும் தமிழன் திருந்துவானா? எப்போது?

திருத்துவார் யார்?!