அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 30 செப்டம்பர், 2019

இவரா கடவுள்? ஹி...ஹி...ஹி!

பல்லாயிரக் கணக்கில் ‘ஹிட்ஸ்’ பெறவேண்டிய பதிவு இது! பெற்றவை மிகச் சில ஆயிரங்கள் மட்டுமே!! படிக்கத் தவறிய  அறிவுஜீவிகளுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!!!
டைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லா உலகங்களையும் [மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது] முதல் தடவையாக எப்போது படைத்தார்?

ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, இல்லை, தொகுதி தொகுதியாகவா?

தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக அவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். அவர் படைத்த உலகங்களுக்கு யாரால் ஊறு விளைவிக்க முடியும்? அப்புறம் எதற்கு ‘காத்தல்’ தொழில்?

உலகங்களைப் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

அதர்மம் தலைவிரித்து ஆடும்போது அழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டாரா? அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் தான் படைத்த உலகங்களை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்ததா? எங்கே?

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகும் அவசியம் ஏன் நிகழ்ந்தது?

கடவுள், தர்மம், அதர்மம் என்று ஊடகங்களில் ‘ஆன்மிகவாதிகள்’ எழுதும் கட்டுக்கதைகளுக்கு அளவே இல்லை. மேடைகளில் செய்யும் பிரச்சாரங்கள் கணக்கிலடங்கா.

நாம் முன்வைத்த மேற்கண்ட கேள்விகளுக்குப் பக்தி நெறி பரப்பும் பெருமகன்களில் எவரேனும் பதில் தருவாரா?

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உலகை ஆண்ட முதல் இனம் தமிழினம்!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆராய்ச்சியாளர் ‘ரோமைன் செமினல்’. மானிட இனத்தின் ‘இனப் பரவல்’ குறித்து உலகளவில் ஆய்வு நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அண்மையில் இவர் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கிறார். தமிழினம் குறித்த தம் ஆய்வு முடிவுகளை அண்மையில் அறிவிக்கவும் செய்திருக்கிறார். 

‘நான் அறிந்தவரையில் உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்ந்துள்ளனர். தமிழகத்திற்கு ஐரோப்பியர் வருகைபுரியாமல் இருந்திருந்தால், உலகையே தமிழர்கள் தங்களின் ஆளுமையின் கீழ் கொண்டுவந்திருப்பார்கள்’ என்று நம் இனத்தைப் புகழ்ந்துரைத்திருப்பது நம்மைப் பெருமிதத்தில் மிதக்கச் செய்கிறது.

உரிய ஆதாரங்களை முன்வைத்து, தமிழருக்கும் எகிப்தியர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்பையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விழுப்புரம் பகுதியில் வசிக்கும் இருளர்களின் மரபணுக்கள், ஆஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, இலங்கை, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்டு மக்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களைத் தமிழர்கள் இஞ்கு அழைத்துவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

ஐரோப்பியரும் கிரேக்கரும் உலக அளவில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்பே தமிழர்கள் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு நம் இனத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் ஆராய்ச்சியாளர் ரோமன் செமினல்.

தமிழினம் இவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.





வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கடவுளே! இவையெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?!?!

பிறப்புறுப்பில் சிறுநீர் கழிப்பதுபோல் அல்லாமல், வலுக்கட்டாயமாக அதைத் தூண்டிவிட்டு இன்பம் பெற்றிட முயற்சிப்பதுதான் சுய இன்பம் ஆகும். இதனை  Masterbation என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 

‘சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்துவை விரயம் செய்வதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படும்’ என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். 

காக்கா வலிப்பு வரும்; மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்; பெண்களைப் பொருத்தவரை மாதவிலக்கு வலி கடுமையா இருக்கும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். இன்றோ.....

தத்தம் உடல் நலத்திற்கேற்ப சுய இன்பம் செய்வதால் நன்மை விளையுமே தவிர, தீமை ஏதும் விளைவதில்லை என்கிறார்கள் உடலியல் ஆய்வாளர்கள்[மாறுபட்ட கருத்துகள் உள்ளன]. 
இது குறித்து விவாதிப்பது இப்பதிவின் நோக்கமல்ல. இளம் வயது ஆண்களும் பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடாமலிருக்க நம் முன்னோர்கள் கையாண்ட அதிர்ச்சியளிக்கும் வழிமுறைகளில் சிலவற்றைப் பதிவு செய்வது மட்டுமே.

அவை.....

*சிறு அறுவையின் மூலமாக, ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் மெல்லிய வெள்ளிக் கம்பியைச் செருகி வைத்தல். தொட்டால் பயங்கர வலி உண்டாகும். மூட்டை மூட்டையாய்க் காம இச்சையைச் சுமந்துகொண்டிருந்தாலும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பதைத் தவிர, பையன்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது.

*இளங்குமரிகளுக்கு, பெண்ணுறுப்பில் சூடு வைத்துக் காயப்படுத்துதல். புண் ஆறிவிட்டது தெரிந்தால், உறுப்பின் முக்கால் பாகத்தைத்[சிறுநீர் கழிப்பதில் இடைஞ்சல் ஏற்படாத வகையில்] தைத்துவிடுதல்.

*ஜட்டி வடிவில் பெல்ட் வடிவமைத்துப் பூட்டிவிடுதல். சாவி பெற்றோர் வசம். ஒன்னுக்கு ரெண்டுக்கான தேவைகளுக்கு இளசுகள் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.[facebook இல் Rahmath Rajkumar இது குறித்து எழுதியுள்ளார்].

குரங்கு, யானை, பூனை, நாய் என விலங்குகள் பலவற்றிற்கும் சுய இன்பப் பழக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்பழக்கத்திற்கு மனிதகுலம் தொன்றுதொட்டு அடிமையாக இருந்துள்ளது என்பதை வரலாறு சொல்கிறது.

மணம் புரியாதவர்கள் என்றில்லை, மணமானவர்களிலும் துணையுடனான உடலுறவில் போதிய திருப்தி பெறாதவர்கள் இப்பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

வயது முதிர்ந்த கிழங்களும் விதிவிலக்கல்ல.

விதிவிலக்குகளும் இருக்கக்கூடும். 

எது எவ்வாறாயினும் நான் சொல்ல நினைப்பது.....

“இதுவாயினும் வேறு எதுவாயினும் அளவோடு இருத்தலே நன்று!”
==========================================================================


வியாழன், 26 செப்டம்பர், 2019

சுமப்பதிலேதான் சுகம்...சுகம்...சுகம்!!!


கேள்வி: 
சின்னக் குழந்தையை முதுகில் உப்பு மூட்டை தூக்குவதில் ‘கிக்’ அதிகமா, மனைவியை உப்பு மூட்டை தூக்குவதில் அதிகமா?

பதில்:
குழந்தையைத் தூக்குகிற போது ‘கிக்’எங்கிருந்து வரும்?

அது ஒரு சுகமான சுமை. அது முதுகில் சவாரி செய்யும் முயல் குட்டி. ஒரு கூடைப் பூவைச் சுமந்து செல்லும் சுகம். குழந்தையின் தளிர்க்கரம் நம் கழுத்தைச் சுற்றியுள்ள மயிலிறகு. அதைச் சுமக்கும் போது நம் மனம் ஆனந்தத்தில் துள்ளும். ‘கிக்’ இங்கே மிஸ்ஸிங்.

இரண்டாவதோ..........

சற்றே கனமான சுமை. [மனைவியின் ஆரோக்கியத்தையும், அழகையும், கணவன் மீதான பாசத்தையும் பொருத்து அது கூடவும் செய்யும்!]

சுமப்பது சற்றுச் சிரமம் என்றாலும் வலியே தெரியாது.

மனைவியின் இதயம் நம் முதுகின் மீது, ‘படக்...படக்...’ என்று துடிப்பதை நாம் துல்லியமாய் உணர்வோம். அது பேசும் மொழி நமக்குப் பேரின்பத்தை வாரி வழங்கும்.

நம் காதோரம், “போதும் விடுங்க...பிளீஸ்” என்று கெஞ்சுவது போல் கொஞ்சுவாளே, அது ஓர் இன்னிசையாய் நம் நெஞ்சில் தேன் பாய்ச்சும்.

அவளின் தளிர்க் கரங்களில் பூசிய மஞ்சள் வாசனை நம் தலைக்குள் புகுந்து ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ அடிக்கும்.

அவளின் நீண்ட வெள்ளரிப் பிஞ்சு விரல்கள் நம் கழுத்தில் மாலையாய்ப் பின்ன அந்தப் பிஞ்சுகளைச் செல்லமாய்க் கடிக்கத் தோன்றும். நம் ஒட்டு மொத்த மேனியும் சிலிர்க்கும்.

அகத்துறை இலக்கியத்தில்..........

தலைவி, தலைவனின் முதுகில் இப்படிச் சவாரி செய்யும்போது, தலைவன் சொன்னானாம்..........

“நங்கையே, இன்று வரையில் என் முதுகில் காயம் பட்டதாய்ச் சரித்திரம் இல்லை. இன்றுதான் உன்னால் என் முதுகில் இரு வேல் பாய்ந்து என் நெஞ்சுவரை தாக்கியதால் காதல் போரில் நான் புறமுதுகு காட்டியவன் ஆனேன்” என்று.
========================================================================

நன்றி: மேகலா [ஆகஸ்டு, 1997  இதழில் வெளியான  ‘கேள்வி - பதில்’]

புதன், 25 செப்டம்பர், 2019

'பர்ர்ர்’...‘வைக்கம் முகம்மது பஷீர்’இன் அசத்தல் சிறுகதை!

அவள் என் கனவு தேவதை.

கற்பனையில் அவளுக்கொரு சிம்மாசனம் தயார் செய்து, அதில் அவளைக் குடியமர்த்தித் தினசரி ஆராதனை செய்துகொண்டிருந்தேன்.

அவளுடனான முதல் சந்திப்பின்போது.....

வெண்ணிற ஆடை உடுத்த தேவலோகக் கன்னிகையாக ஒரு பன்னீர்ச் செண்பகச் செடியின் அருகில் அவள் நின்றிருந்தாள். அதிக நீளமில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருந்தாள். அழகு முகம். உருண்டு திரண்ட மார்பகங்கள். தேர்ந்தவொரு சிற்பி செதுக்கியது போன்ற உடல் வாகு.

அவளுக்குப் பத்தொன்பது அல்லது இருபது வயதிருக்கலாம்.

ஒரு பெரிய பன்னீர்ச் செண்பகப் பூவைப் பறித்தெடுத்து அதன் அழகை ரசித்த பின்னர் என்னிடம் தந்தாள். 

நான் என்னையே மறந்தேன். அவளின் ஸ்பரிசம் பட்ட பூ என் கையில். அதன் வாசம் என் நெஞ்சசில் பரவிப் பின்னர் பிரபஞ்ச வெளியெங்கும் ஊடுருவிக் கமகமத்தது.

நாட்கள் நகர்ந்தன.

அவள் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் அவளுடன் அடிக்கடி என்னால் உரையாட முடிந்தது. என் விருப்பப்படி அவளின் அழகை ரசிக்க முடிந்தது.

அந்தத் தேவலோக மங்கைக்கு அகன்ற பெரிய கண்கள். அவ்வப்போது அவளின் மேலுதட்டில் துளிர்க்கும் வேர்வைத் துணுக்குகள் என்னை உன்மத்தம் கொள்ளச் செய்யும். அவளை என்னுடையவள் ஆக்கிக்கொள்ளும் ஆசையை வளர்த்துக்கொண்டேன்.

அந்தை ஆசை நிராசை ஆகவிருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னை அலட்சியப்படுத்தியதிலிருந்து புரிந்துகொண்டேன்.

இருப்பினும் அவள் மீதான என் மயக்கம் தெளியவே இல்லை. அவளை வெறுத்தொதுக்குவதற்கான வழிவகைகளைத் தேடலானேன்.

அந்த நாளும் வந்தது.

ஒரு வெப்பம் மிகுந்த காலை நேரம்.

அவளுக்கு எதிராக ஒரு நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். 

அவள் தன் தலைமுடியை அவிழ்த்துப் போட்டிருந்தாள். அது அவளின் திணவெடுத்த ஒரு மார்பகத்தை மட்டும் கொஞ்சம் மறைத்திருந்தது. மேசை மீது முழங்கையை ஊன்றி, உள்ளங்கையில் மோவாயைத் தாங்கி ஒய்யாரமாக அமர்ந்த கோலத்தில் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவள் போல் அவள் காட்சியளித்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

‘பர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்ர்’ 

புத்தம்புதுத் துணியைக் கிழித்தால் உருவாவது போன்றதொரு ஓசை அது.

ஆமாம், ‘பர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்ர்’ என்னும் ஓசை. கூடவே ஒருவித நாற்றம்.

தேவலோகக் கன்னியின் குண்டியின் கீழிலிருந்து வெளிப்பட்ட ஓசைதான் அது! நாற்றம் பரவியது அங்கிருந்துதான்!! 

“சே...” என்று முகம் சுழித்த நான், மூக்கைப் பொத்தியடி எழுந்தேன்; சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன்.

என் முன்னாள் கனவு தேவதை காற்றுப்போன பலூன் போல முகம் சுருங்கி வெளிறிய முகத்துடன் காட்சி தந்தாள்.

அதன் பிறகு எந்தவொரு முயற்சியும் இல்லாமலே அவளை நான் மறக்க ஆரம்பித்தேன்.
========================================================================


‘உலகப் புகழ் பெற்ற மூக்கு’ என்னும் [மறைந்த]வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பில்[காலச்சுவடு பதிப்பகம்] இடம்பெற்றது ‘பர்ர்ர்...’ சிறுகதை. பல பக்கங்கள் கொண்ட கதையின் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்தச் சின்னஞ்சிறு கதை.

‘காலச்சுவடு’ பதிப்பகத்தார்க்கு நம் நன்றி.





செவ்வாய், 24 செப்டம்பர், 2019

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது!!!

#ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. 2013 ஆம் ஆண்டு, 16 வயதுச் சிறுமிக்கு வன்கொடுமை புரிந்ததாக இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நிறுத்திவைத்திட வேண்டும் என்று இவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்# -இது இன்றைய[24.09.2019] ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செய்தி.
மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகளுக்குத் தலை வணங்குகிறோம்.

கீழ்க்காணும் இவனின் புகைப்படத்தை உற்று நோக்குங்கள்.

‘களங்கம் சிறிதும் படியாத களையான முகம் கொண்ட இந்தச் சாமியாரா இந்த இழிசெயலைச் செய்தான்?’ என்னும் ஐயம் உங்களுக்குள் எழுகிறதுதானே?

ஆம், மாசு மருவற்ற முகத் தோற்றத்துடன் துறவுக்கோலம் கொண்ட இவன்தான் கள்ளங்கபடமற்ற ஒரு சிறுமியின் கன்னித்தன்மையைச் சூறையாடியிருக்கிறான்.

‘அகத்தின் அழகு[குணம்] முகத்தில் தெரியும்’ என்னும் நம் முன்னோர்களின் அனுபவ மொழி முற்றிலுமாய்ப் பொய்த்துப்போனது. 

அழகான தாடி மீசையுடன், இவனைப் போன்ற கவர்ச்சிமிகு சாமியார்கள் இன்றளவும் இந்த மண்ணில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய இழி பிறவிகள் குறித்து அறிய நேர்ந்தால் தயங்காமல் பரப்புரை செய்யுங்கள்; நம் மக்களை விழிப்படையச் செய்யுங்கள்.

நன்றி.
========================================================================


திங்கள், 23 செப்டம்பர், 2019

தியானமாம் தியானம்!!!

மேற்கண்ட செய்தி அதன் கீழ் இடம்பெற்றுள்ள ‘சகஜ தீபம்’ என்னும் இதழில் வெளியானது.

ஆன்மிகத்துடன் இரண்டறக் கலந்தது தியானம். ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் தியானம் பற்றிக் குறிப்பிடத் தவறுவதே இல்லை.

அதென்ன தியானம்?

தியானம் என்னும் சொல்லை நாம் அறிந்திருக்கிறோமே தவிர, அதைச் செய்யும் முறையை ஆன்மிகர்கள் எவரும் புரியும் வகையில் சொன்னதில்லை என்பதே என் எண்ணம்.

சத்குரு[?] ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.....

‘தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல்தான். உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளி[?]யைக் காண்கிறீர்கள்’

‘உடல் நீங்கள் அல்ல’ என்கிறார் வாசுதேவ். மூளையை உள்ளடக்கிய ஒட்டுமொத்த உடம்புதான் நாம். எனவே, உடம்பு வேறு; நாம் வேறல்ல என்பது தெளிவாகிறது. இது அவருக்குப் புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை.

‘மனம்’ என்பது வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல்’ என்கிறார் ஜக்கி. 

மனம் என்பது இன்றளவும் அறிவியல் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மையாகும். நம்மை இயக்குவதும், அதன் மூலம் பெறும் அனுபவங்களைத் தன்னுள் பதிவு செய்வதும் மூளைதான்.

மனம் உங்கள் மனமல்ல என்கிறார் சத்குரு. அதாவது, உங்கள் மூளை உங்களுடையதல்ல என்கிறார். இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளுதல் இயலாது.

இவரைப் போல்தான் ஏனைய ஆன்மிகவாதிகளும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்களே தவிர தெளிவான விளக்கம் தந்தவர் எவருமில்லை.

தான் வழிபடும் கடவுளின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதைச் சிலர் தியானம் என்கிறார்கள். மனதைப் போலவே கடவுளும் வெறும் அனுமானம்தான் என்பதால் அதனாலும் பயன் விளைவது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல..

‘சகஜதீபம்’ காரர்.....

‘உணர்தலைக் கடந்து இருப்பு நிலைக்குத் திரும்புகிறோம்’ என்கிறார். அதென்னய்யா இருப்பு நிலை? அதிலிருந்து பின் அதுவாகவே ஆகிறோமாம். எதுவாக?

ஒரு தடவை படித்தால் புரியாது என்று பலமுறை படித்தால் நம் மண்டை காயும்; கலங்கும்; சிந்திக்கும் திறனை இழப்போம். இந்த ஆன்மிகர்கள் வற்புறுத்தும் தியானத்தின் மூலம் நாம் பெறும் பயன் இது மட்டுமே!

அமைதியான சூழலில்.....

‘இதைச் சாதிப்பேன்...சாதிப்பேன்...சாதிப்பேன்’ என்பது போல, குறிப்பிட்ட கால அவகாசத்தில்  மனத்தளவில் உறுதிமொழி எடுப்பதால் மட்டுமே பயன் விளையக்கூடும் என்பது என் நம்பிக்கை.
=======================================================================

சனி, 21 செப்டம்பர், 2019

'ஆண் புத்தி அரைப்புத்தி’...[பொழுதுபோக்கு]

“பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” -சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” -கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு.”

“அவன் கிடக்கிறான் குடிகாரப்பய. அர்த்தமில்லாம ஏதாவது உளறுவான். நீ போ. அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றான் புவியரசு.

முகத்தில் லேசான வருத்தம் பரவ, தொங்கிய முகத்துடன் அங்கிருந்து அகன்றாள் தாமரை.

அதற்கப்புறம் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு நேரவில்லை. புருசனைப் பிரிந்து அவள் தாய்வீடு சென்றுவிட்டதாகச் சற்று முன்னர் கோயிலுக்குப் போகும்போது சவீதா சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்குறீங்களாம்” என்று தாமரை சொன்னதும் மனதில் உறைத்தது. இதைச் சவீதா இருக்கும்போது சொல்லாமல் அவள் அவனைத் தனியே சந்தித்துச் சொன்னதன் உள்ளர்த்தமும் புரிந்தது.

“பெண் புத்தி பின்புத்தின்னு சொல்வாங்க ஆண்மகனான என் புத்தி அரைப்புத்தி. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டேன். நான் மடையன்... முட்டாள்” என்று முணுமுணுத்தவாறு தலைதலையாய் அடித்துக்கொண்டான் புவியரசு.
=======================================================================================

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அரங்கநாதனின் ‘ஆனந்த நாடி’!

ஸ்ரீரங்கம் கோயில். எங்கும் அமைதி சூழ்ந்த ரம்மியமான ராத்திரி நேரம்.

பக்தர் ஒருவர் பகவானைச் சேவிப்பதற்காக வந்தார்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் க்கான பட முடிவு
அரங்கநாதன் சன்னதியிலிருந்து விவரிப்புக்கு அடங்காத ஒரு பேரொளி  வெளிப்பட்டது. பகவான்தான் தனக்குக் காட்சிதரப் போகிறாரோ என்றெண்ணி இமை கொட்டாமல் அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் பக்தர்.

ஒளியில் மையம் கொண்டிருந்த ஒரு பொருள் ‘விர்ர்ர்ர்’ரென வான் வழியாகப் பறந்து போய் ரங்கநாயகி சன்னநிதிக்குள் நுழைந்தது.

நேரம் கழிந்தது.

பறந்து சென்ற அந்தப் பொருள் வந்த வழியே திரும்பி மீண்டும் அரங்கநாதன் சன்னதிக்குள் புகுந்தது.

அந்தப் பொருள் என்ன?!

அதைத் தன் கண்களால் நோக்கிப் பரவசப்பட்ட பக்தரே[ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர்] சொல்கிறார்.....

‘அது அரங்கநாதனின் ஆனந்த நாடி[கடவுளின் ஆணுறுப்பு!?!?!?]. அதாவது, தேக சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பயன்படும் உறுப்பு. நள்ளிரவிலும் பிராட்டியைச் சேரவேண்டும் என்ற ஆசை அரங்கநாதனுக்கு வந்தது. தன் ஆனந்த நாடியை ரங்கநாயகியிடம் அனுப்பித்[அர்ச்சகர் சன்னதிக் கதவைப் பூட்டிட்டுப் போய்ட்டாராம்] தன் இச்சையைத் தீர்த்துக்கொண்டார் அரங்கநாதன்[எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க!].

இந்நிகழ்வைக் குணரத்ன கோசத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் பராசரபட்டர்.

‘ஆணின் போகத்துக்குதான் பெண். எந்த நேரத்திலும் அவளை எப்படியும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு என்பதை அரங்கநாதனின் இந்தச் செயல் உணர்த்துகிறது’ என்பதாக விளக்கம் தந்திருக்கிறாராம் பட்டர்.

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியரின் ‘இந்துமதம் எங்கே போகிறது?’[ஐந்தாம் பதிப்பு: 2013; நக்கீரன் பப்ளிகேசன்ஸ் - சென்னை] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது.

‘கருமாந்தரக் கடவுள்  கதைகள்’ என்னும் தலைப்பில் ஏற்கனவே ஒரு பதிவு வெளியிட்டிருப்பதால், அதே தலைப்பு இங்கு தவிர்க்கப்பட்டது
=================================================================================
அதிதீவிர இந்துமதப் பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இது போல் ஏராள ‘சீச்சீ...சீச்சீ’... அசிங்கக் கதைகளை உங்களின் முன்னோடிகள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். முதலில் இந்தக் குப்பைகளைத் தீக்கிரையாக்குங்கள். அதற்கப்புறம்.....

இம்மாதிரிக் கதைகளைச் சாடுவோரிடம், “இந்துமதத்தை மட்டும் விமர்சிக்கிறாயே, பிற மதங்களைக் கண்டுகொள்வதில்லையே[நான் பிற மதங்களையும் கண்டித்து எழுதியிருக்கிறேன்...’கடவுளின் கடவுள்’ தளத்தில்], ஏன்?” என்று கேள்வி கேட்கலாம்.

வியாழன், 19 செப்டம்பர், 2019

“குருநாதர் புகைத்தால் நாய் புகைவிடும்”... புளுகன் நித்தியின் ஓயாத பொய்யுரைகள்!!!


தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, அந்த கோவிலைக் கடந்த ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது யூடியூப்பில் கணினி வரைகலை உதவியுடன் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா, சிஷ்யக் கோடிகளுக்குத் தன் சிற்றறிவுக்கு எட்டியதை அருளுரையாக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் புதன்கிழமை வெளியிட்ட அருளுரையில் மேட்டூர் அணையில் நீருக்கு அடியில் உள்ள சிவன் கோவில் குறித்தும், அந்தக் கோவிலின் பழமையான மூலலிங்கம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிலை கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி அவரிடம் உள்ள பழமையான மூல லிங்கத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
அதே போல அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது குருநாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாகப் புகைபிடிக்க முடியாது என்று கூறியுள்ள நித்தி, தனது குருநாதர் புகை பிடித்தால் அருகில் நிற்கும் நாய் புகைவிடும் என்று அளந்துவிட்டதுதான் நித்தி அருளுரையின் உச்சக்கட்ட காமெடி.[நன்றி: பாலிமர் செய்தி]
நடிகை ரஞ்சிதாவினுடனான உறவு அம்பலமானபோதே ஆசிரமம்[பிடதி] நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, தானே கடவுள் என்று பொய் பரப்பி மக்களை ஏமாற்றுவதாக வழக்குத் தொடுத்து இந்த ஆளை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்.
அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாகத் தண்டனையியிலிருந்து தப்பிய இவர்.....

“இன்று காலை நான் தியானத்தை முடிக்கக் காலதாமதம் ஆனது. எனவே, சூரியன் 40 நிமிடம் தாமதமாக உதித்தது” என்பதுபோல அவ்வப்போது புருடா விட்டு மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அரசு வேடிக்கை பார்க்காமல் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது நம் போன்றோர் வேண்டுகோள்.
=================================================================================

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஒரே நாடு! ஒரே ஜாதி!!

ப.ஜ.க.வின் இந்திய ஒருமைப்பாட்டுத் தத்துவம் பின்வருமாறு.....

ஒரே நாடு: இந்தியா                                                                             


ஒரே இனம்: ‘இந்தி’யர்


ஒரே மொழி: இந்தி


ஒரே மதம்: இந்து[த்துவா]


ஒரே கலாச்சாரம்: வடவர் நாகரிகம்

                                                      
ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க


ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்     

ஒரே தேர்வு: இந்தி அல்லது சமஸ்கிருதத்தில்

மேற்கண்ட ப.ஜ.க.வினரின் கனவு நனவாக்கப்படும்போது, கீழ்க்காணும் ‘ஒரே ஜாதி’ என்னும் எம் ஆசையும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

எங்கள் ஜாதிதான் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஜாதியாகும். இதை ‘ஒரே இந்தியாவின் ஒரே ஜாதி’யாக நடுவணரசு அங்கீகரிக்க வேண்டும். பிற ஜாதியார் அனைவரும் எங்கள் ஜாதியில் இணைதல் வேண்டும்.

எச்சரிக்கை!.....மதங்கள் அழியாதவரை ஜாதிகளும் அழியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.   
=================================================================================          

திங்கள், 16 செப்டம்பர், 2019

நன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!!!

“இந்தி மட்டுமே இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்தும்” என்று அதிபுத்திசாலி அமைச்சர் அமித்ஷா சொல்லிவைக்க, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்னாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போன்றோரும் கடும் கண்டணம் தெரிவித்துவரும் இன்றைய சூழலில்.....

தனக்கு அமைச்சர்[முன்னாள்] பதவி தந்ததை எண்ணி இன்றளவும் மோடிக்கு நன்றி பாராட்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “தமிழ் மிகப் பழைமையான மொழி என்று தமிழைப் பாராட்டியவர் மோடி. தமிழின் மீது பற்றுக்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர். இதை நினைந்து பார்க்கத் தவறிவிட்டான் தமிழன். இவன் நன்றி கெட்டவன்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார்[இன்றைய{16.09.2019} ஊடகச் செய்தி].
பொன்னார் க்கான பட முடிவு
எந்தவொரு பிரச்சினை ஆனாலும் புரியாமல் பேசிச் சமாளிப்பதில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை எனலாம்.

‘இந்தியே இந்தியாவை அடையாளப்படுத்தும்’ என்று சொன்னவர் அமித்ஷா. ஏராளமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பவரும் அவரே. தமிழின் மீது அவர் பற்றுக்கொண்டவர் என்பதற்கு ஆதாரம் இருப்பின் அதை வெளியிடுதல் வேண்டும். அதற்கு மாறாக, தமிழ் குறித்தான மோடியின் புகழுரைகளை மேற்கோள் காட்டி.....

“தமிழன் நன்றி இல்லாதவன்” என்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது?!

மோடி நம் மொழியைப் பாராட்டினார்[அமித்ஷாவின் பேச்சு குறித்து இவர் இன்னும் வாய்திறக்கவில்லை] என்பதற்காக, அமித்ஷா செய்த குற்றத்தை நாம் மறந்துவிட வேண்டும் என்கிறாரா பொன்னார்?

ஒரு மொழியை வெறுமனே பாராட்டுவது வேறு; அதன் தகுதியை மேம்படுத்துவது வேறு என்பதுகூடப் புரியாதவரா இந்த மேனாள் அமைச்சர்?!

“இந்தி இந்தியாவின் அடையாள மொழி என்றார் அமித்ஷா. அவர் சொன்னது தவறு. இந்தியாவை அடையாளப்படுத்துவது இந்தி அல்ல; பழம் பெருமை வாய்ந்த தமிழ்தான்” என்று மோட்டி அறிவித்திருந்தால்......

அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளெல்லாம், “மோடி வாழ்க! ... மோடி வாழ்கவே!!” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருக்கலாம்.

இனியேனும் கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துப் பேசுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளுவாரா பொன், ராதாகிருஷ்ணன்?
=================================================================================