'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வெள்ளி, 15 ஜனவரி, 2021
20ஆம் நூற்றாண்டுக் கற்பு!!![புதுமைச் சிறுகதை]
வியாழன், 24 செப்டம்பர், 2020
எதிர்நீச்சல்!...ஒரு பக்கக் கதை
“கவின், உன் பள்ளித் தமிழாசிரியரைப் பார்த்தேன். ஆண்டுவிழாவுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க இருப்பதாகச் சொன்னார். போட்டிகள்ல நீயும் கலந்துக்கிறதானே?” என்று மகனிடம் கேட்டார் துரைசாமி.
“இல்லப்பா.” -சலிப்புடன் சொன்னான் கவின்.
“ஏன் கவின்?”
“பேச்சுப் போட்டி எதிலும் என்னால் ஜெயிக்க முடியறதில்ல; ஆர்வமும் இல்ல.”
“அப்படிச் சொல்லக்கூடாது. வெற்றியோ தோல்வியோ இன்னிக்கே பேர் கொடுத்துடு.”
தலையசைத்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான் கவின்.
துரைசாமியின் மனைவி சரிதா கேட்டார்: “கவின் ரொம்ப நல்லாப் படிக்கிறான். பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் அவனுக்குப் பிரியம் இல்ல. வேண்டான்னா விட்டுடலாமே. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”
“நாட்டில் மக்கள் தொகை பெருகிட்டே போகுது. எல்லார்த்திலேயும் போட்டி அதிகமாயிட்டு வருது. பிரியப்படுற வேலை கிடக்கும்கிறது நிச்சயமில்ல. பிடிக்காத வேலையைச் செய்தாத்தான் பிழைக்க முடியும்கிற நிலை வரலாம். அதுக்கான மனப் பக்குவத்தை இப்போதிருந்தே வளர்த்துக்கிறது நல்லதில்லையா?” என்றார் துரைசாமி.
கணவன் சொல்வது சரியே எனப்பட்டது சரிதாவுக்கு.
===============================================================
வெள்ளி, 22 மே, 2020
அச்சச்சோ...பாவம் அம்மாக்கள்!
சனி, 21 செப்டம்பர், 2019
'ஆண் புத்தி அரைப்புத்தி’...[பொழுதுபோக்கு]
கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.
“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.
“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”
“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”
“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”
பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.
சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.
வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.
“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான் புவியரசு.
“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசணுன்னு வந்தேன்.”
கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” -சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.
“யார் அப்படிச் சொன்னது?” -கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.
“அவர்தான் சொல்றாரு.”
“அவன் கிடக்கிறான் குடிகாரப்பய. அர்த்தமில்லாம ஏதாவது உளறுவான். நீ போ. அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றான் புவியரசு.
சனி, 10 ஆகஸ்ட், 2019
அவள் 'அந்த'த் தொழிலுக்குப் புதுசு![கதை பழசு!!]
முதல் பார்வையிலேயே கனகா திசை மாறி வந்தவள் என்பதைப் புரிந்து கொண்டான் முருகேசன். தூக்கலான ஒப்பனையும், தூண்டில் போடும் விழி வீச்சும் அவள் விலைமகள்தான் என்பதற்குக் கட்டியம் கூறினாலும், பார்வையில் பதுங்கி வெளிப்படும் ஒருவிதப் பயமும், படபடப்பும் அவள் ‘அந்த’த் தொழிலுக்குப் புதியவள்தான் என்பதை அப்பட்டமாய் எடுத்துரைத்தன.
அன்று, அவளுடன் பேச்சுக் கொடுத்தான்.





