எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 22 மே, 2020

அச்சச்சோ...பாவம் அம்மாக்கள்!

வயசுப் பொண்ணுகளைப் பொருத்தவரை, அப்போதிருந்து இப்போதுவரை  அப்பாக்களுக்கு அவர்கள் ‘செல்லம்’தான். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தப்பான வழியில் சென்றுவிடாமல் தடுக்கும் மெய்க்காப்பாளர்கள் அம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ளாத அப்பாக்களிடம் அவர்கள்[அம்மாக்கள்] அவ்வப்போது  ‘வாங்கிக் கட்டிக்கொள்வது’ம் உண்டு!

கீழ்க்காணும் கதை நம் அனுதாபத்திற்குரிய அம்மாக்களுக்குச் சமர்ப்பணம்!

இது, ‘குங்குமம்’[17.08.2015] வார இதழில் வெளியானது. ‘நானே நான்’ எழுதியது.

2015ஆம் ஆண்டில் மட்டும் குங்குமத்தில் 05 கதைகள் எழுதினேன். 2016இல் ஒன்று.

எச்சரிக்கை! கைவசம் ‘தரமான சரக்கு’ இல்லாதபோதெல்லாம் இலவசமாய் இவை உங்களுக்குப் வழங்கப்படும்!
=======================================================================