சனி, 31 டிசம்பர், 2022

உடலுறவில் ‘உச்சம்’ தொடுதல்!... ஒரு பச்சைப் பொய்!!!

உடலுறவுக்கான ‘கால அளவு’ என்பது, அதில் ஈடுபடுபவரின் மனநிலை,  கற்றறிந்த சேர்க்கை முறைகள், பயன்படுத்தும் மாத்திரைகள்&லேகியங்கள் முதலான சாதனங்களின் நம்பகத்தன்மை போன்றவற்றைப் பொருத்து மாறுபடக்கூடும்.

கால அளவு எதுவாயினும், ஆடவனின் விந்து வெளியானவுடன் இன்பம் அனுபவிக்கும் நிகழ்வு முடிந்துபோகிறது.

ஐந்து நிமிடங்களோ, அறுபது நிமிடங்களோ, விடிய விடியவோ ’அது’ வெளியேறும் அந்தக் கணங்களில் அந்த அந்தரங்கக் கதை முற்றுப்பெறுகிறது.   

ஆக, உடலுறவு ‘முற்றுப்பெறுதல்’ என்பது விந்து வெளியாகும் அந்தக் கணங்களைப் பொருத்தது.

மற்றபடி, உடலுறவில் ‘உச்சம் தொடுதல்’ என்று எதுவும் இல்லை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மனதில் இச்சை பிறக்கும்போது இணைகிறார்கள். பிரியும்வரை இன்பம் அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதானே? 

இதில் ‘உச்சம்’ என்ன, தொடுதல் என்ன? 



‘உச்சம்’ என்று எதைச் சொல்கிறார்கள்?

இதற்கு மேலும் இப்போது இன்புறுவதற்கு ஏதுமில்லை என்றவொரு நிலையையா?

அப்படியொரு நிலையைத் தொட்டு, “இப்போது இதற்கு மேலும் எனக்கு இந்த உடலுறவுச் சுகம் தேவை இல்லை” என்று எவரேனும் எண்ணியது உண்டா?

இல்லையே.

அப்புறம் எங்கிருந்து வந்தது ‘உச்சமும் தொடுதலும்’?

“உச்சம் தொடுவது எப்படி?” என்று ஆலோசனை வழங்குகிறவர்களில்[இணையத்தில்] எத்தனை பேர் உச்சம் தொட்டவர்கள்?

இளவட்டங்களின் மனங்களில் இப்படியொரு தணியாத தாபம் விதைக்கப்பட்டு நாயாய்ப் பேயாய் அவர்கள் அலைவதற்குக் காரணமானவர்கள் இந்த அண்டப் புளுகர்கள்தான்.

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ணும் பெண்ணும் இணைதலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று உடலுறவுச் சுகம்.

இருவரும் மனம் திறந்து பேசி, அந்தரங்க உறவு முறைகளை உரிய வகைகளில் கற்றுத் தேர்ந்து, ‘அது’க்கான நேரம், கால அளவு போன்றவற்றைத் தேர்வு செய்து, ‘இது போதும்’ என்பதற்கான மனப் பக்குவத்தைப் பெற்று இணைந்து இன்பம் துய்த்து வாழ்வதே சிறந்த இல்லற நெறியாகும்.

தங்களின் வருகைக்கு நன்றி!

===========================================================================

வெள்ளி, 30 டிசம்பர், 2022

‘விந்து’ ஒவ்வாமை[அலர்ஜி-semen allergy]... புரிதலும் விழிப்புணர்வும்!

உடலுறவுக்குப் பின்னர் அரிதாகச் சில பெண்களின் பிறப்புறுப்பு, நாக்கு, உதடுகள், தொண்டை ஆகியவற்றில் வீக்கம் காணப்படுவதோடு, அவை சிவந்துவிடுவதும் உண்டு; எரிச்சலும் இருக்கும்.

உறுப்பில் வலி, படை போன்றவையும் தோன்றக்கூடும். வாந்தி, குமட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

உறவுக்குப் பின்னர் 20 அல்லது 30 நிமிட இடைவெளியில் இந்த அறிகுறிகள் தோன்றும்.

 

இது, ‘விந்து ஒவ்வாமை’[அலர்ஜி-semen allergy) எனப்படும். இதை ’ஹியூமன் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி(ஹெச்.எஸ்.பி) என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்[இதற்கான விளக்கத்தை BBC நிருபருக்கு அளித்தவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ‘கிங் ஜார்ஜ் மருத்துவமனை’யின் இம்யூனாலஜி பிரிவின் முன்னாள் தலைவரும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் மைக்ரோ பயாலஜிப் பிரிவின் பேராசிரியருமான ‘மருத்துவர் அப்பாராவ்’ ஆவார்].

 

பிறப்புறுப்பு மட்டுமல்லாமல், விந்தணு சிந்துகிற எந்த உடல் பாகத்திலும், அதாவது கை, வாய், சிறுநீர்ப் பாதை, மார்பகம் போன்றவற்றிலும் ஒவ்வாமை ஏற்படலாம் என்கிறார்கள். 



சிலர் இருமல் தும்மலுடனான சளித் தொல்லைக்கு ஆளாவதும் உண்டு.

லேசான தலைவலி, இதயத் துடிப்பு சற்றே அதிகரித்தல் ஆகியவையும் இடம்பெறக்கூடும்.

 

ஆண்களின் விந்தணுவில் உள்ள புரதங்களால் உண்டாகும் ‘எதிர்வினை’யின் தாக்கமே இந்த ஒவ்வாமைக்குக் காரணமாம்.

 

இப்பிரச்னை மோசமானால் அனஃபிலாக்சிஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இதனால் மூச்சுவிடுதலில் சிரமமும், தொண்டை வீக்கம், பலவீனமாக அல்லது வேகமாக நாடி துடித்தல், மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.


தங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்புகளுக்கு ‘விந்து ஒவ்வாமை’தான் காரணம் என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை.

 

அறிந்துகொள்வதோடு, ஒவ்வாமையைப் போக்க உரிய சிகிச்சையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

 

அதற்கு மாறாக,  இந்த அறிகுறிகளுக்குக் காரணம், சிறுநீர்ப் பாதைத் தொற்று என்றெண்ணி, அதற்குச் சிகிச்சை பெற்றிட முயலுவது தேவையற்றதாகும்.

========================================================================

 https://www.bbc.com/tamil/science-63320854

வியாழன், 29 டிசம்பர், 2022

அதிகரிக்கிறது ஆண்களை நம்பாத பெண்களின் எண்ணிக்கை!!!

டந்த பத்து ஆண்டுகளில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

 

இம்மாதிரிப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் 'ஸ்டேட்டஸ் சிங்கிள்' என்ற பெயரில் ஒரு குழு உள்ளது. இது 2020இல் உருவாக்கப்பட்டது. 



இந்தக் குழுவில்
2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இக்குழுவில், திருமணமாகாதவர்கள், கைம்பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள், கணவர்களால் அல்லது, குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் என்று ஆண்களைச் சார்ந்து வாழாத/வாழ விரும்பாத பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.

 

ஆக, தனியாக வாழும் பெண் சமுதாயத்திற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

 

பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லுவது, பாதிக்கப்படுவோருக்காகக் குரல் கொடுப்பது என்று பல வகைகளிலும் உதவுவது இக்குழுவினரின் நோக்கமாக உள்ளது.

 

கடந்த பத்தாண்டுகளில் இவர்களிடம் உதவி பெற்றவர்கள் 7.8 கோடிக்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்கள் தங்களுக்குள் மனவிட்டுப் பேசுவதன் மூலம், நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

இந்தவொரு அமைப்பு ஆண்களுடன் இணைந்து குடும்பமாக வாழும் பெண்களின் பாராட்டுதலைப் பெறுவது நாளும் அதிகரித்து வருவதாக, மேற்கண்ட விவரங்களைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிட்ட ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

இம்மாதிரியான அமைப்புகள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கும், அவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டிருப்பது ஆண்களின் அடிவயிற்றைக் கலக்குவதாக உள்ளது. 


ஆகவே, ஆண்மக்களுக்கு நாம் வழங்கும் அறிவுரையாவது, உங்களின் குடும்பத்துப் பெண்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மையை அறவே கைவிட்டு, அவர்களுக்கு அனுசரணையாக வாழப் பழகுங்கள் என்பதே.

 

பெண்டாட்டி தாசர்களாக ஆகிவிடக்கூடாது என்பது நாம் செய்யும் எச்சரிக்கையும்கூட!

 

ஹி… ஹி… ஹி!!!

========================================================================

***இப்பதிவு, //“ஆண் துணை வேண்டாம்”... தனிமையில் இனிமை காணும் பெண்கள்!!![https://kadavulinkadavul.blogspot.com/2022/12/blog-post_59.html]// என்னும் தலைப்பில் முன்பு நாம் வெளியிட்ட பதிவின் தொடர்ச்சி ஆகும்!


இடையறாத இந்தித் திணிப்பும் கண்டுகொள்ளாத ‘பாஜக’ தலைவர்களும்!!

‘இந்தித் திணிப்பு’ சம்பந்தமானது மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி.

விமான ஏறச் சென்ற முதியோர்களிடம் இந்தியில் உரையாடியதோடு, “இது இந்தியா. இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என்று திமிராகப் பேசித் தங்களின் இந்தி வெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் முதியோரின் உடைமைகளைச் சோதித்த பாதுகாப்புப் படை வீரர்கள்[சிஆர்பிஎஃப்-Central Reserve Police Force].

மேற்கண்ட பெற்றோரின் பிள்ளையான நடிகர் சித்தார்த் தன் இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார் என்பது செய்தி[தினகரன்,29.12.2022]....{சித்தார்த்தின் பதிவில் வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/hindi-at-airport-is-actosiddharths-allegation-true-what-happened-at-madurai-airport-867914 என்னும் தளத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது என்பது அறியத்தக்கது}

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் யார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. இம்மாதிரியான நடவடிக்கைகள்[“இது இந்தியா... இந்தியில் பேசு”] இடைவிடாது நிகழ்வது  ஏன் என்பதே நம் கேள்வி.

நாம் தேட விரும்பும் வேறு சில கேள்விகளுக்கு விடை கிடைத்தால் இந்தவொரு கேள்விக்கும் தேடாமலே பதில் கிடைத்துவிடும்.

கேள்விகள்:

*'CRPF' எனப்படும் மத்தியப் பாதுகாப்புப் படைப் பிரிவில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்களா? ஆங்கிலமோ இந்தியாவிலுள்ள பிற மாநில மொழிகளோ பேசுவோர் சேர்க்கப்படுவதில்லையா?

*சேர்க்கப்பட்டாலும் இந்தியில் மட்டுமே பேசும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா?

*அயல்நாடுகளுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பிட நேரும்போது, ஆங்கிலத்துடன் அந்தந்த நாட்டு மொழி தெரிந்தவர்களும் இடம்பெறுவது நடைமுறையில் உள்ள ஒன்று. அது போல்.....

தமிழ்நாட்டில் நடுவணரசின் நிர்வாகத்தில் உள்ள இடங்களுக்கு[விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவை]ப் பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில்  ஆங்கிலமும் தமிழும் தெரிந்த[தமிழ்நாட்டிலுள்ள இம்மாதிரி இடங்களில் பெரும்பான்மைப் பயணிகள் தமிழர்கள்]  வீரர்களே[CRPF] இடம்பெறுதல் வேண்டும் என்பது மிக மிக மிக அவசியம் அல்லவா?[இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் என்பதால் ஏற்பாடு செய்வது மிக எளிது].

அவசியமே என்பது இந்த இரு தலைவர்களுக்குமே தெரியும். தெரிந்தும் ஏதுமறியாத அப்பாவிகள் போல் நடிக்கிறார்களா?

இவர்கள்தான் இங்கு[தமிழ்நாடு] வரும்போதெல்லாம், நாக்கில் தேன் தடவிக்கொண்டு தமிழைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

இதெல்லாம் தமிழனின் வாக்குகளை[தேர்தலில்] அள்ளுவதற்காக இவர்கள் நடத்தும் மேடை நாடகம். இதை அறிந்திருப்பதும், அறியாதவர்களை அறிந்திடச் செய்வதும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கடமையாகும்.

புதன், 28 டிசம்பர், 2022

‘நட்டு’ கழன்ற ‘பாஜக’ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!!!

நேற்று[27.12.2022] கோவை மாவட்டம் காரமடையில், ‘பாஜக’ நடத்திய கூட்டமொன்றில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மோடியின் தலைமை, கொரோனாவின் தாக்கம், தமிழர், தமிழ், கடவுளின் ஆசி என்றிப்படி ஏதேதோ பேசியிருக்கிறார்.

பின்னர், அன்னூர் நல்லி செட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள, ‘பாஜக கிளைத் தலைவர்  மூர்த்தி வீட்டிற்குச் சென்றார்.

எதுக்கு?

கிளைத் தலைவர் மூர்த்தியைக் கவுரவிக்க என்றுதானே நினைக்கிறீங்க?

ஆமாங்க. ஆனால்.....

நட்டா சந்திக்கப்போகிற குடும்பத் தலைவர், அதாவது மூர்த்தி அவர்கள், வீட்டு வாயிலில் நின்று வருகைபுரிகிற அவரை வரவேற்பதுதானே மரபு? அவருக்கு[மூர்த்தி] வழங்கப்படுகிற மரியாதை?

அந்த மரியாதை/கவுரவம் மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

குடும்பத் தலைவரான மூர்த்தியோ, அவர் மனைவியோ, குடும்ப உறுப்பினர்ளோதானே விருந்தினருக்கு உணவளிக்கும் உரிமையுடையவர்?

அந்த உரிமைகூடக் கிளைத் தலைவரான மூர்த்தி அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

மாறாக, நட்டா உட்பட, வருகைபுரிந்த தலைவர்களுக்கு உணவு வகைகளைப் பரிமாறியவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்[தினகரன்[28.12.2022, கோவைப் பதிப்பு; பக்கம்: 2].

இந்த முற்றிலும் முரண்பட்டதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்பாட்டுக்கு யார் காரணம்”

நட்டாவேதான். உடந்தையாகச் செயல்பட்டவர் முன்னாள் நடுவணமைச்சர் பொன்[அல்ல பித்தளை] ராதாகிருஷ்ணன்.

மூர்த்தி அவர்கள் அவமதிக்கப்பட்டதற்குக் காரணம்?

அவர் அருந்ததியர். அவர் தொட்டுக்கொடுக்கும் உணவைத் தீண்டினால் கைகளில் ‘தீட்டு’ ஒட்டிக்கொள்ளும் என்பதுதானே?

மூர்த்தியும் அவரின் குடும்பத்தாரும் உறவினர்களும் புழங்கும் வீட்டிற்குள் நடமாடியாதால் இவர்களில் கால்களில் ‘தீட்டு’ ஒட்டிக்கொண்டிருக்குமே, அதை எப்படித் துடைத்தெறிவார்களாம்?!

இவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....

நம் மக்கள் எல்லா நேரங்களிலும் முட்டாள்களாக இருப்பதில்லை” என்பதுதான்!
===========================================================================

திங்கள், 26 டிசம்பர், 2022

‘ஜக்கி’ குறித்த, அறியப்படாத அதி பயங்கர அதிர்ச்சிச் செய்திகள்!!!

சத்குரு (ஜகதீஷ் வாசுதேவ்) அல்லது ஈஷா அறக்கட்டளையின் ஜக்கி வாசுதேவ்

ஒரு SEX CULT[small group of people who worship the sex itself ,

they consider themselves in a religion which is sick and silly and psycho ,mostly they get naked inside a house or private place then start doing some weird actions then they end up doing Collective sex].

ரண்டு வகையான வழிபாட்டுத் தலைவர்கள் உள்ளனர். ஒரு வகை, ஒழிங்கீனமாக நடந்துகொண்டு, பிடிபட்டு, பொதுவில் அவமானப்படுத்தப்படுவது; மற்றொன்று பிடிபடுவதில்லை.


சத்குரு(ஜகதீஷ் வாசுதேவ்) அல்லது ஜக்கி வாசுதேவ் பற்றிய உண்மைகளை வெளியுலகம் அறியாததால், அவர் 2ஆம் வகையைச் சேர்ந்தவர் ஆவார்.


அவர் தனது சொந்த மனைவியைக் கொன்றார்; ஆனால் அவர் மதத்தைக் கையில் எடுத்ததால் கொலைக் குற்றங்களுக்குரிய தண்டனையிலிருந்து தப்பினார்.


அவர் மீதான கொலை வழக்குகளில் தமிழகம் மற்றும் கர்நாடகா போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அவரது மனைவியின் கல்லறை, ஆசிரமத்தின் பிரதான இடத்தினுள் அமைந்துள்ளது. அவர் தெய்வம் ஆகிவிட்டதாக இவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்[https://frankreport.com/2021/08/04/is-sadhguru-a-cult-leader-and-did-he-murder-his-wife/].


இந்திய வரலாற்றில் மிகவும் ஊழல் செய்த குற்றவாளி மற்றும் பலாத்காரம் செய்தவர் இவர். இவர் யோகா மூலம் பாலினத்தை ஊக்குவிக்கிறார் மற்றும் பலதார மணம் செய்கிறார். இவர் இந்தியாவில் ஒரு வழிபாட்டுத் தலைவரை வழிநடத்தி வருகிறார்; மேலும், இவர் யோகா மற்றும் உடலுறவு விசயத்தில் அதிக வெள்ளைப் பக்தர்களைக் கவர, தொடர்ந்து மேற்கத்திய உலகிற்குப் பயணம் செய்கிறார்.


ஈஷா ஆசிரமத்தில் உள்ள முக்கிய சிலையான சிவலிங்கம் திரவ உலோகமான பாதரசத்தால் ஆனது என்று சத்குருவே அறிவிக்கிறார். அவர் தனது யோகப் பயிற்சிகள் மூலம் அதை எவ்வாறு திடமான நிலைக்கு மாற்றினார் என்பது ஒரு பெரிய பொய்யாகும். மெர்குரி, பொதுவாக தெர்மோமீட்டர்கள் மற்றும் காற்றழுத்தமானிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நன்கு அறியப்பட்ட உலோகம் என்பதால் இது சாத்தியமற்றது. அறை வெப்பநிலையில் திரவமாக இருப்பதால் பாதரசம் அசாதாரணமானது. மற்ற உலோகங்கள் திடமானவை.


எனவே, இவர் அறிவியலைக் களங்கப்படுத்துகிறார் என்பதே உண்மை.


சத்குரு வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து இந்திய அரசு கவலைப்படுவதில்லை. உயர்மட்டப் பணக்காரக் கற்பழிப்பாளர்களுக்கான வசதி இங்கு செய்யப்படுகிறது


அனைத்துப் பக்தர்களையும் மயக்குவதற்கு இவர் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் / போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்.


அப்பாவி இளம் வாலிபர்களை ஏமாற்றி, இலவச அறுவைச் சிகிச்சை என்ற பெயரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அவர்களின் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்து ஏஜெண்டுகள் மூலம் சட்டவிரோதமாக ஏற்றுமதி வியாபாரம் செய்துவருகிறார்.


உணவு, உறக்கம், யோகா, தனிப்பட்ட உடலுறவு அல்லது ஆர்கிஸ் கலாச்சாரத்தில் ஈடுபடும் பல ஆயிரம் பக்தர்களுடன் பணக்காரர்களுக்காக ஒரு ஆசிரமத்தை நடத்தி வருகிறார் இவர்.

இங்குள்ள பக்தர்கள் பாலியல் அடிமைகள் ஆவார்கள்..


இவர் பணக்கார இந்தியராக இருந்தபோதிலும், இவர் தனது பக்தர்கள் அனைவரையும் தனது ஆசிரமத்திற்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.


ஆசிரமத்திற்குள் என்ன நடக்கிறது என்ற ரகசியம் வெளியே தெரியாது.


அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஓரினச்சேர்க்கையைப் பரப்பிய ரஜ்னீஷ்/ஓஷோ ஆசிரமம் போன்றதுதான் இந்த ஆசிரமும்.


புதிய பக்தர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளவதை இலக்காக வைத்துள்ளார் இவர். அவர்கள் நன்கொடை அளித்தால் அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, பாலுறவுத் துணை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.


அவர்கள் ஆசிரமத்தின் விசுவாசிகள் என்பதை அடையாளம் காட்ட அவர்களின் தலைகள் மொட்டையடிக்கப்படும்.


மிகப் பெரிய மனிதர்களின் அசைக்க முடியாத ஆதரவு ஜக்கிக்கு இருப்பதால், இந்தியாவின் எந்தவொரு சட்டத்தாலும் இவர் பாதிக்கப்படமாட்டார்.


ஊடகங்களில் வெளியாகும் உண்மைச் செய்திகளை நசுக்கப் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் இவரிடம் உள்ளனர்.


இந்திய அரசுக்கு(வனத்துறை)ச் சொந்தமான நிலத்தின் பெரும் பகுதியைச் சட்டவிரோதமாகத் தனக்கென இவர் ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

* * * * *

https://www.sammyboy.com/threads/sadhguru-jagadish-vasudev-dec-2022.332839/ -இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களே இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மிக முக்கியக் குறிப்பு: மக்களால் மதிக்கப்படுதற்கு உரியவர்கள் குறித்தத் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது அறியத்தக்கதாகும்.

========================================================================

நெஞ்சை நெக்குருகச் செய்யும் ஓர் இணைபிரியாத தம்பதியர் மரணம்!

அவர் பெயர் ஹூபர்ட். அவரின் பிரிய மனைவியின் பெயர் ‘ஜூன் மாலிகோட்’.

ஒரு விருந்தளிப்பு நிகழ்வுக்குப் பிறகு ஜூன் மாலிகோட் நோய்வாய்ப்பட்டார்.


நோயின் தாக்கம் கடுமையானதாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


திருமணம் ஆகி 79 ஆண்டுகள் இணைபிரியாமல் பாசப் பிணைப்புடன் வாழ்ந்த இருவருமே 100 வயதைக் கடந்தவர்கள்.


மோசமாக இருந்த ‘ஜூன் மாலிகோட்’டின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவரின் உயிர் பிரிந்தது. 


உயிர் பிரிந்த அந்தக் கணங்களில் அவரின் கையை ஹூபர்ட்டின் கை இறுகப் பற்றியிருந்தது. சில மணி நேரங்களில் அவரும் மரணத்தைத் தழுவினார்.


US Couple Who Was Married for 79 Years Passes Away Hours Apart


தன் உயிர் பிரியவிருந்த கடைசி நொடிவரை தனக்குரியவளைப் பிரிந்திருக்க விரும்பாத ஹூபர்ட்டையும், அந்த அளவுக்கு அவருடன் மனம் கலந்து அன்பைப் பொழிந்து வாழ்ந்த ஜூன்மாலிகோட் ஆகிய தம்பதியரைப் போன்று ஓர் இணையை இந்த உலகம் கண்டிருக்குமா? அதற்கான வாய்ப்பு இனியேனும் அமையுமா?


இவர்கள் வாழ்ந்த வாழ்வை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற இணையர்களும் இணைக்கப்பட்டுப் பின் மரணத்தின் மூலம் பிரிக்கப்படுவதை எண்ணும்போது நெஞ்சம் வெகுவாகக் கனக்கிறது.


எத்தனைக் கொடூரம் இது?


‘மரணம்’ என்னும் பெயரில் இணைத்துப் பின் பிரிக்கும் இந்தச் செயலைச் செய்வது யார்?


இந்த இழிசெயலைச் செய்த அந்தப் படைப்பாளன்[கடவுள்] பண்பில்லாதவன் என்கிறார் சங்ககாலப் புலவர் ஒருவர்.


“படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்” என்று, அனைத்தையும் படைத்தவனான கடவுளையே கடிந்துகொள்ளும் அவர், புறநானூற்றுப் புலவர் ‘பக்குடுக்கை நன்கணியார்’[பாடலும் பொருளும் கீழே] என்பவர்.


பக்குடுக்கை நன்கணியார் நம் போற்றுதலுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய சீரிய சிந்தனையாளர் ஆவார்!


பாடல்:


’ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்...’

உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

======================================================================================================

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கர்னாடக[கா]க் குமரிகளின் கருணை உள்ளம்!!!

உலகம் முழுவதுமே Free Hugs என்ற பெயரில், சில ஆர்வலர்கள் தங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகக் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் என்று பதாகைகள் ஏந்தி இயக்கம் நடத்துவதை[பெண்கள்தானே?] வழக்கமாகக் கொண்டுள்ளார்களாம்.

இது குறித்துக் கேள்விப்பட்டோ படாமலோ, பெங்களூருவில் இரு கல்லூரி மாணவிகள் இந்த free hugs இயக்கத்தை நடத்திப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள் என்பது திகட்டவே திகட்டாத இனிப்புச் செய்தியாகும்.

கிறித்துமஸ் & புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளதால், பெங்களூருவின் கடைத்தெருக்கள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில்.....

அந்நகரின் சர்ச்கேட் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு அபூர்வா அகர்வால், தனிஷி என்னும் பெயர்களைக் கொண்ட அந்த இரு கல்லூரி மாணவிகள் free hugs என்ற பதாகைகளை ஏந்தி நெடுநேரம் காத்திருந்து. அந்தப் பகுதியில் சென்ற பலரையும் கட்டித் தழுவித் தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது அது தொடர்பான செய்தி[https://tamil.news18.com/news/national/two-girl-students-offered-free-hugs-in-bengaluru-church-street-861777.html].

“வந்துநின்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் 100 பேரைக் கட்டித்தழுவி உலகச் சாதனை நிகழ்த்தியுள்ளோம்” என்று அவர்கள் மிகு பெருமிதத்துடன் கூறினார்களாம்[இந்தச் சேவையைக் கிழவர்களும் கிழவிகளும்கூடச் செய்யலாமா?].

"ஒரு நபர் நாள்தோறும் எட்டுமுறை கட்டிப்பிடித்தால் அவர் அந்த நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருப்பார்” என ஆய்வாளர்கள் அறிவித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்களாம். அந்த ஆய்வு உண்மையானதுதானா என்று அவர்களிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொண்ட எவரும் கேட்டிருக்கமாட்டார்கள்[எவனும் கேட்டிருந்தால் அவன் படு கிறுக்கனாவான்].

ஆக, கட்டிப்பிடிப்பதால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது சரியே என்றாலும்.....

உச்சக்கட்ட மகிழ்ச்சி கிடைக்க எட்டுத் தடவை என்பது போதுமா?” என்று இச்சையைக் கட்டுப்படுத்த இயலாமல் அலைந்து திரியும் இளவட்டங்கள் கேட்பார்களே, அதற்கு இந்தக் குமரிகள் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும்?

விடை தெரிந்தாலும் பதில் சொல்ல விரும்பாத கேள்வி இது!

ஹி... ஹி... ஹி!!!

================================================================

சனி, 24 டிசம்பர், 2022

"உன்னுடன்[‘ஆரா’வுடன்] நான் கலந்துவிட்டேன். நீ எனக்குச் சொந்தமானவள்” -ஜக்கி!!!

அவனவன் தன்னுடைய மன அழுத்தம் குறையணும்னு இங்கே வந்தா, இருக்கிற நிம்மதியும் போயிடும். ‘சைலன்ஸ்’ பயிற்சி என்னும் 7 நாள் பயிற்சி மரண வேதனைக்கு ஒப்பானது. ‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’ உள்ளிட்ட பயிற்சிகள முடித்தால், ‘உங்களைச் சத்குருவே சந்திப்பார்’ என்று ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, ‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கடவுள்[ஜக்கி] நம்மைச் சந்திக்க உள்ளார்’ என்கிற மயக்க நிலையைப் பயிற்சிக்கு வந்தவர் மனதில் விதைப்பார்கள் பயிற்சியாளர்கள்.

அவர்கள் சொன்னபடியே ஜக்கியும் சந்திப்பார்; “உன்னுடைய ‘ஆரா’[நம் உடலைச் சுற்றி ஒளிக் கவசம் போல் தோன்றுகிற, மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் ‘ஆரா’; ஆன்மா என்றும் சொல்லலாம்]வுடன் நான் கலந்துவிட்டேன். நீ எனக்குச் சொந்தமானவள்” என்பார் தான் சந்தித்த பெண்ணிடம். அப்புறம்.....[இதுக்கப்புறம் என்ன நடக்கும் என்று அனுமானித்துச் சொல்வது நம்மை வம்பில் மாட்டிவிட்டுவிடும்!].

ஜக்கியுடன் கலந்துவிட்டதாகச் சொல்லப்படும் நபர் ஆணாக இருந்தால்,  ஊதியம் இல்லாத வேலையாளாகவோ, ஏவல் நாயாகவோ ஜக்கிக்குச் சேவகம் செய்வார்

மேற்கண்ட இந்த விவரங்களை வழங்கியவர் ‘ஈஷா’வில் பணியாற்றிய ஒருவர்.

இதை அவர் ஏன் சொல்லவேண்டும்? அதற்கான சூழ்நிலை என்ன?

தொடர்ந்து படியுங்கள்.

மேலே விவரிக்கப்பட்டதான பயிற்சியில் கலந்துகொண்டார் ’சுபஸ்ரீ’ என்னும் பெண்.

பயிற்சி 11 மணிக்கு முடிவடையும் என்று அவர் தன் கணவன் பழனிக்குமாரிடம் சொல்லியிருந்தார்.

பழனிக்குமாரும் அந்த நேரத்துக்கு வந்து ஈஷா மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.

பிற்பகல் 3 மணிவரை சுபஸ்ரீ வரவில்லை.

விசாரித்ததில் சுபஸ்ரீ 9.30 மணிக்கு ஈஷாவிலிருந்து வெளியேறி வாடகைக் கார் பிடித்து, ‘செம்மேடு முட்டத்து வயலில் இறங்கியது தெரியவந்தது. அது தவிர, ஈஷாவிலிருந்து சுபஸ்ரீ தலை தெறிக்க ஓடிவரும் காட்சி சி.சி.டி.வி. யில் பதிவாகியிருந்ததும் தெரிய வந்தது. 

தனக்கான உடைமைகளை இஷாவிலேயே அவர் விட்டுவிட்டுச் சென்றதும் அறியப்பட்டது.

‘மனைவி எங்குச் சென்றார்? உயிரோடுதான் இருக்கிறாரா?’ என்னும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் பழனிக்குமார். வழக்குப் பதிவு செய்து இந்த அசம்பாவிதம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.

‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’... என்று இவையும், இன்னும் எவையெவையோ மந்திர தந்திரங்களையும் கையாண்டு, ஏராளமான அப்பாவி மக்களைத் தனக்கான அடிமைகள் ஆக்கிகொண்டிருக்கிறார் ஜக்கி. இவற்றையெல்லாம் இவர் யாரிடம் கற்றார்?

கற்றுக்கொடுத்தவர் அந்த ‘ஈஷன்’தானோ என்னவோ!?

                                                         *   *   *   *   *

*****‘நக்கீரன்’[2022 டிசம்பர் 24-27] இதழில் வெளியான செய்தித் தொகுப்பிலிருந்து திரட்டிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேறு பல ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியிருப்பது அறியத்தக்கது.

==================================================================================

அல்லா[ஹ்] & எல்லாக் கடவுள்களாலும் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள்!!!

நேற்று[23.12.2022] மாலை, ‘tamil.oneindia' வில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதி கீழே இடம்பெற்றுள்ளது.

//கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாகத் தலைநிமிர தொடங்கினர்.....

வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்லப் பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.....

வேலைக்கும் செல்லத் துவங்கினர்.....

ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.....

ஆனால், அதற்குள் இந்தத் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளாத் துயரில் ஆழ்த்தி வருகிறது.....

எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்...!!//

இச்செய்தியால் நம் அடிநெஞ்சிலிருந்து வெளிப்பட்ட வேதனைக் குரல் பின்வருமாறு:

ளும் தலிபான்கள் ‘சரியத்’[chariot] சட்டத்தை’ச் சரியாக அமல்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அங்குள்ள பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்து, உடலுறவுக்கான கருவிகளாக மட்டுமே அவர்களை ஆக்குவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

இதை ஐ,நா.சபை கண்டிக்கிறது; அமெரிக்கா கண்டித்திருக்கிறது. இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இதனாலெல்லாம் எந்தவிதப் பயனும் இல்லை என்பது இந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்கும் தெரியும்.

‘அல்லா[ஹ்]’ உட்பட உலகோரால் துதிக்கப்படுகிற, ஆயிரக்கணக்கில் உள்ள அத்தனைக் கடவுள்களும் மோனத் தவத்தில் மூழ்கிகிடக்கிறார்கள்[அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லைபோலிருக்கிறது!].

அவர்களாலும் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்வில் விடியல் தோன்ற வழியேதும் இல்லை என்பது உறுதியாகிறது.

ஆக, ஆப்கானிஸ்தான் பெண்களுக்கென்று ஆதரவுக்கரம் நீட்ட எந்தவொரு நாதியும் இல்லை.

கடவுள்களும் மனிதர்களும்[ஆடவர்கள்] இவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில்.....

ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் வாழும் இஸ்லாம் மதப் பெண்கள்கூட அவர்களுக்காகக் குரல் கொடுக்க மறந்து மௌனம் சுமந்து முடங்கிக் கிடக்கிறார்களே, ஏன் இந்த அவலம்?!

ஆண்களுக்கு அடங்கி, வீட்டோடு அடைபட்டு வாழ்வதிலேயே சுகம் காண்பது இவர்களுக்கு வழக்கமாகிப்போனதோ!?

===========================================================================

https://tamil.oneindia.com/news/international/did-the-afghan-girl-students-dress-fancy-and-taliban-announces-indefinite-ban-on-university-educati/articlecontent-pf831919-490937.html

வெள்ளி, 23 டிசம்பர், 2022

'கற்பழிக்கவும்’ கற்றுக்கொடுக்குமா கூகுள்[தேடுபொறி]?!?!

‘விஜயகுமார்[51] ஒரு மென்பொருள்[சாஃப்ட்வேர்] பொறியாளர்; பெங்களூருவில் மனைவி&குழந்தைகளுடன் வாழ்ந்தவர். 

இதய நோய் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே மூச்சுவிடுவதில் சிரமம் இருந்திருக்கிறது.

இதற்கான சிகிச்சைகளைப் பெற்றும்கூட பிரச்சினை தீராததால், தற்கொலை செய்துகொள்வது என்று முடிவெடுத்திருக்கிறார்.

வலி ஏதுமில்லாமல் மரணத்தைத் தழுவிடல் வேண்டும் என்பது அவரின் அந்திமக்கால ஆசை.

பொது அறிவுச் சுரங்கமான கூகுளில் தேடியதில், ‘பூட்டப்பட்ட அறையில் முகத்தை மூடி, நைட்ரஜன் வாயுவை[கேஸ்] பைப் மூலமாக மூக்கில் செலுத்தினால் வலியில்லாமல் இறக்கலாம்’ என்னும் வழிமுறையை அறிந்திருக்கிறார்.

அன்றைய தினத்தில், பணி முடிந்து வீடு திரும்பும்போது உகந்த இடத்தில் காரை நிறுத்தி, கண்ணாடிகளை மூடிவிட்டு, தான் அறிந்துவைத்திருந்த முறையில் உயிரை மாய்த்துக்கொண்டார்’ என்பது இன்றைய[23.12.2022] ‘தினகரன்’ நாளிதழ்ச் செய்தி.

உடலளவில் வாழ்வே இயலாத வகையில் தாங்கொணாத வலியுடன் வாழ்பவர்கள் இந்த வகை வழிமுறையைத் தேர்வு செய்வதில் தவறில்லைதான். ஆனால், 

இத்தகையவர்கள், வலியைத் தாங்கிக்கொண்டாலும், உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் மருத்துவர்கள்தான்; சம்பந்தப்பட்ட நோயாளிகள் அல்லர். ஆனால், எந்தவொரு டாக்டரும் நோயாளி செத்துவிடுவார் என்பதை அறிந்திருந்தாலும் அதை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல விரும்புவதில்லை.

இது குறித்த விரிவான விவாதங்களுக்குப் பிறகும், இது விசயத்தில் முடிவெடுக்க நடுவணரசு தயக்கம் காட்டுகிறது. காரணம்.....

99% நோயாளிகளுக்கு இறப்பு நிச்சயம் என்று நம்பப்படுகிற நிலையிலும், அரிதாக 1% நோயாளிகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவதும் உண்டு.

ஆகவே, எத்தகைய வலியாயினும் அதைத் தாங்கிக்கொண்டிருந்தால், அவர் பிழைப்பதற்கு வழி பிறக்காதா என்று உற்றார் உறவினர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எது எவ்வாறாயினும்,

நோயாளி தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கண்ட வகையில் உயிர் துறப்பது அனுமதிக்கப்பட்டால், காதல் தோல்வி, கடன் தொல்லை, மனைவியுடன் கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைப்பவர்களும் மேற்கண்ட வழியைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

எனவே, இவ்வகை மரணம் குறித்து எளிதில் ஒரு முடிவை மேற்கொள்வது சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில், வலியில்லாமல் மரணத்தைத் தழுவுவதற்குக் கூகுள் வழி சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றே தோன்றுகிறது.

‘மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படி?’, ‘உடலுறவில் திருப்தி பெறுவது எப்படி?’ என்பது பற்றியெல்லாம் பாடம் கற்பிக்கிற தளங்களை இது அனுமதித்திருப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம்; ‘கொலை செய்வது எப்படி?’, வலியில்லாமல் தற்கொலை செய்வது எப்படி?’ என்றெல்லாம் கற்றுத்தருகிற தளங்களைக் கூகுள் அனுமதிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவே இயலாது.

கூகுள் மேற்கொண்டுள்ள இந்நிலை நீடிக்குமேயானால், விரைவில், ‘அகப்பட்டுக்கொள்ளாமல் கற்பழிப்பது எப்படி?’ என்று பாடம் கற்பிக்கிற தளங்கள்கூட இதில் இடம்பெற வாய்ப்புள்ளது!

===========================================================================

வியாழன், 22 டிசம்பர், 2022

முடக்கும் கோமாவும் அடுக்கடுக்காய் எட்டுக் காரணங்களும்!

‘கோமா’?

மனித உடம்பிலுள்ள அத்தனை உணர்ச்சிகளும் முற்றிலுமாய் முடங்கிப்போய், முழு மயக்க நிலைக்கு உள்ளாவது ‘கோமா’ எனப்படும்.

இதயம் இயங்குதலும் மூச்சு விடுதலும் மட்டும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

கோமாவில் சிக்கி, படுத்தபடுக்கையாய், ஏறத்தாழ ஒரு பிணம்போல் கிடப்பதற்கு 8 காரணங்களைப் பட்டியலிடுகிறார் டாக்டர் ஜி.சுரேந்திரபாபு[திருவானைக் கோவில்] அவர்கள்.

1.உடம்பின் சர்க்கரை அளவு 30 கிராமுக்குக் குறைவாக இருத்தல்.
2.பிராண வாயு கிடைக்காமலிருத்தல்.
3.கல்லீரலும் சிறுநீரகமும் நோய்களால் பாதிக்கப்படுதல்.
4.வலிப்பு நோயின் தாக்கம்.
5.உடம்பில் மிகை அளவில் கரியமிலவாயு சேர்தல்; அதிக அளவில் கால்சியம் சேர்தல்; சோடியம் குறைதல்.
6.உயரமான இடத்திலிருந்து கீழே விழும்போதும், வாகன விபத்தில் சிக்கும்போதும் நரம்பு மண்டலம் பாதிப்படைதல்.
7. மூளையில் கட்டிகள் உருவாதல்.
8.மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் அளவுக்கு மருந்துகளையும் போதைப் பொருட்களையும் உட்கொள்ளுதல்.

கோமாவுக்கு முதல் ஐந்து பாதிப்புகள் காரணங்களாக இருக்குமெனில்.....

சரியான காரணத்தை அல்லது காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் கோமாவுக்கு உள்ளானவர் மீண்டெழுவதற்கு வாய்ப்புள்ளது.

சிகிச்சை அளிப்பதற்கு, ஒருவர் கோமாவில் கிடந்த கால அளவும் கருத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு, கோமா குறித்து மிகத் தெளிவானதொரு விளக்கத்தைத் தந்த டாக்டர் அவர்கள், உலக அளவில், ஒருவர் 39 ஆண்டுகள் கோமாவில் கிடந்து உயிரிழந்ததாகவும், வேறொருவர் 19 ஆண்டுகள் கோமாவில் உணர்விழந்து கிடந்து, சுய உணர்வு பெற்றுச் சுகமாக வாழ்ந்தார் என்றும் கூறியிருப்பது நாம் முற்றிலும் அறியாத அரிய நிகழ்வுகள் ஆகும்!

===========================================================================

நன்றி: ‘ராணி’ வார இதழ்[25.12.2022].