எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

திங்கள், 12 ஜனவரி, 2026

மோடியே சிவபெருமான்! சிவபெருமானே மோடி!!

முன் குறிப்பு:

மோடி பற்றிய விமர்சனங்களை இயன்ற அளவுக்குத் தவிர்ப்பதே என் விருப்பம். எனினும், இவருடைய குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் அவ்வப்போது எழுதத் தூண்டுகின்றன என்பது விரும்பத்தகாதது.

                                   *   *   *   *   *

//குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக & பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

ஒரு நாட்டின் பிரதமருடைய அன்றாட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்.

நிலுவையில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவது[சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் & அலுவலர்களுடன்], அண்ட நாடுகளுடனான மோதல்களைச் சமாளிப்பதற்கும் உறவை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் பற்றிப் பரிசீலிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பல தீட்டுவது என்றிப்படி ஏராளமான பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருப்பவர் அவர்.

போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பதற்கும், போதிய அளவுக்கு உறங்குவதற்கும்கூட நேரம் இல்லாமல் உழைப்பவர் அவர்.

மோடி நம் நாட்டுப் பிரதமர். இவர் எப்படி?

இதுவரையினான தன் பதவிக் காலத்தில், அதிக அளவிலான நாட்கள் உலகம் சுற்றுவதில்[பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்வது தேவைதான். அதற்கு ஓர் எல்லையுண்டு]செலவழித்திருக்கிறார். எஞ்சிய நேரத்தில் பெரும்பகுதியைக் கோயில் கட்டுவதற்கும், கோயில்களுக்குச் செல்வதிலும் கழித்தார்; கழிக்கிறார். மிச்சமிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் நேரத்தைத்தான் பிரதமருக்கான அலுவல் நிமித்தம் செலவழித்தார்; செலவழிக்கிறார்.

அண்மையில் சோம்நாத் கோயிலுக்குச் சென்று, பக்தியின் மீதான தன் ஈடுபாட்டைப் படம் எடுத்துவெளியிட்டு, அந்தக் கொஞ்சம் நேரத்திலும் பெரும் பகுதியை வீணடித்திருக்கிறார்.

பக்தி வளர்ப்பதற்கென்றே[+பணம் சம்பாதிப்பதும் சொகுசாக வாழ்வதும்] இந்த நாட்டில் பல சாமியார்கள் இருக்கும்போது இவருக்கு எதற்கு அவ்வப்போது சாமியார் வேடமும் நாடகமும்?

இவருடைய இம்மாதிரியான நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமலும், குறைந்தபட்சம் கொஞ்சம் கண்டனங்கள்கூடத் தெரிவிக்காமலும், நம் மக்கள் ‘தேமே’ன்னு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!

* * * * *

எத்தனை எத்தனை இன்பங்கள்! அத்தனையும் அனுபவிக்க ஆயுள் இல்லை!!

பிழை திருத்தம்: ‘உண்டு மகிழ்ச்சி’... பிழை. ‘உண்டு மகிழ[ச்]’... சரி.