எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 7 ஜூலை, 2023

‘புற்றுநோய் அம்மன்’!!!

புற்றுநோய் என்பது உடலில் உள்ள சாதாரண உயிரணுக்களில்[செல்கள்] மாற்றங்கள் ஏற்படும்போது, அம்மாற்றங்கள்  கட்டுப்பாடற்ற, அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் மூலம் கட்டிகள் உருவாகின்றன.

கட்டிகள் வளர்ந்து சுற்றியுள்ள சாதாரணத் திசுக்கள், அல்லது இரத்தம், அல்லது நிணநீர் அமைப்புகள் வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்குப் பரவுகிறது. உடல் உறுப்புகள் பலவற்றையும் பாதிக்கிறது. https://www.worldcancerday.org/what-cancer.

ரத்தத்தில் உருவாகும் புற்றுநோய் ‘ரத்தப் புற்றுநோய்’ எனப்படும்.

பிற புற்றுநோய்கள்:

*மூளைப் புற்றுநோய்

*வாய்ப் புற்றுநோய்

*கழுத்துப் புற்றுநோய்

*நுரையீரல் புற்றுநோய்

*கணையப் புற்றுநோய்

*தோல் புற்றுநோய்[skin cancer]

*எலும்புப் புற்றுநோய்

*குடல் புற்றுநோய்

*பித்தப்பைப் புற்றுநோய்

*கருப்பைப் புற்றுநோய்[எண்டோமெட்ரியல் புற்றுநோய்]

*மார்பகப் புற்றுநோய்

*பெண்ணுறுப்புப் புற்றுநோய்

*ஆண்குறிப் புற்றுநோய்

*விதைப்பை[prostate gland]ப் புற்றுநோய்

*குத[மலத்துவாரம்]ப் புற்றுநோய்

இவையன்றி வேறு பலவும் இருக்கக்கூடும்.

ஆக,

மனித உடம்பில் புற்றுநோய் பரவாத இடமே இல்லை எனலாம்.

“கடவுள் அணுவிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்; அண்டவெளியிலுள்ள அத்தனைப் பொருள்களிலும் உலகங்களில் உள்ள உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பார்கள் ஆன்மிகவாதிகள்.

ஒட்டுமொத்த மனித உடம்பிலும் இந்த நாசகாரப் புற்றுநோய் பரவிக் கிடப்பதால் இதை வெறுமனே புற்றுநோய் என்று சொல்லாமல், ‘புற்றுநோய்க் கடவுள்’[அவர் அழிப்பு வேலையையும் செய்கிறார் என்பது அறியத்தக்கது] என்று அழைக்கத் தோன்றுகிறது!

'அம்மை’ நோயை ‘மாரியம்மன்’ ஆக்கி வழிபட்டது... வழிபடுவது போல், புற்று நோயைப் ‘புற்றுநோய் அம்மன்’ ஆக்கி நம்மவர் வழிபடும் நாளும் வரக்கூடும்!

ஹி... ஹி... ஹி!!!