அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 27 பிப்ரவரி, 2023

'காதல் வெறி’யும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளும்!!!

வர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரே பெண்ணைக் காதலித்ததால் இருவரும் பகைவர்கள் ஆனார்கள்.

இவர்களில் ஒருவன் அந்த ஒருத்திக்காக, பழைய நண்பனும் புதிய எதிரியுமான இன்னொருவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தான்.

திட்டமிட்டபடி, தேர்வு செய்த இடத்திற்கு அவனை[பழைய நண்பன்] அழைத்துச்சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தான்.

பழிவாங்கும் வெறி அடங்கவில்லை.

அவனின் விரல்களை வெட்டினான்; தலையைத் துண்டித்தான். அந்த முன்னாள் பிரிய நண்பனின் ‘பிறப்புறுப்பை[penis]’ அறுத்தெடுத்தான். மார்பைப் பிளந்து இருதயத்தையும் வெளியே எடுத்தான்.

இவற்றை ஒன்றாகச் சேர்த்துவைத்துப் படம் பிடித்துக் ‘காணொலி’யாக்கி, யாருக்காக இந்தக் கொடூரச் கொலையைச் செய்தானோ அந்த காதல் தேவதைக்கு அனுப்பினான்.

இவன் காமுகனா என்றால், அல்லவே அல்ல; ‘காதல் போதை’யில் சிக்கித் தன் எதிர்காலத்தைச் சீரழித்துக்கொண்ட ‘காதல் கிறுக்கன்’.

இந்தக் கிறுக்கனைக் காவல்துறை கைது செய்துள்ளது. இவனுக்குக் கிடைக்கவிருக்கும் தண்டனை என்ன என்பது பின்னர் தெரியும்[விரிவான செய்திக்கு,  https://tamil.oneindia.com/news/hyderabad/heartbreaking-incident-and-why-did-22-year-old-youngman-kill-his-friend-in-telangana-500625.html  என்னும் முகவரிக்குச் செல்க].

இந்த அளவுக்கு இல்லையென்றாலும், காதல் தோல்விகளாலும், மோதல்களாலும் நிகழ்த்தப்படும் கொடுங் குற்றச் செயல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன.

கல்வி கற்கும் பருவத்திலேயே, இளைஞர்கள் காதல் போதைக்கு உள்ளாவதை அல்லது போதை ஊட்டப்படுவதைத் தடுப்பதற்கான வழிகளை அரசு கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இவ்வகைக் குற்றங்கள் குறையும்.

எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் வழங்கும் கொஞ்சம் ஆலோசனைகள்[சுருக்கமாக. குழு அமைத்து விரிவாக ஆராய்வது அரசின் கடமை]:

*மனித உடம்பு எத்தனை அசிங்கமானது என்பதை விவரிக்கும் சித்தர் பாடல் வரிகளை[’சலமும் சீயும் சரியும் ஒருவழி; உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம்; முடிவில் சுட்டெலும் பாகும்’ என்பன போல. இவை அதீத விரசம் இல்லாதவை; இருபாலருக்கும் பொதுவானவை]யும், யாக்கை நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசும் அரிய பாடல் வரிகளையும் கட்டுரையாக்கிப் பாட நூலில் சேர்ப்பது நல்ல பயன் விளைவிக்கும்.

*காதல் போதையால் கெட்டழிந்த பிரபலங்களைப் பற்றியும், காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்கள் & கொலை செய்யப்பட்டவர்கள் பற்றியும் விவரிக்கும் ஒரு கட்டுரையும் நூலில் இடம்பெறலாம்.

*பாலியல் கல்வி கற்பித்தல் மிக மிக அவசியம். உண்மையான பாலியல் கல்வி, ‘காதல் எத்தனைப் பொய்யானது’ என்பதை உணரவைக்கும்.

*திரைப்படங்களில் காதலர் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்குத் தடை விதிக்கலாம்.

*காதல் போதையூட்டும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும்கூடத் தடை தேவை[நன்கு யோசித்துச் செயல்பட்டால் இது சாத்தியமே].

*காதல் தொடர்பான குற்றங்கள் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தேவை.

***ஆய்வறிஞர்கள், குழு சேர்ந்து சிந்திக்கும்போது, மேலும் சிறப்பான வழிமுறைகள் தென்படக்கூடும்.

* * * * *

ஒரு கதை:

“உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்னு போன மாசம் சொன்னே. மாப்பிள்ளை பார்த்துட்டியா?” என்றார் சிவராமன், தன் நண்பர் சதாசிவத்திடம்.

“தேடிட்டிருக்கேன். உனக்குத் தெரிஞ்ச பையன் இருந்தா சொல்லு.”

“ஒருத்தன் இருக்கான். அவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். அவனுடய அப்பா தனியார் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மாவும் பட்டதாரிதான்; வேலைக்குப் போகல. கவுரவமான குடும்பம்…”

குறுக்கிட்ட சதாசிவம், “பையனுடைய பழக்கவழக்கங்கள் பத்திச் சொல்லு” என்றார்.

“பையனுக்குக் கெட்ட பழக்கமெல்லாம் இல்ல; கவிதையில், குறிப்பா காதல் கவிதைகள் எழுதுறதில் ஈடுபாடு அதிகம். முப்பது வயசுக்குள்ள மூனு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கான். எல்லாமே காதல் சம்பந்தப்பட்டதுதான். இவனுடைய கவிதைகள் குங்குமம், ராணி, விகடன், குமுதம்னு அத்தனை முன்னணிப் பத்திரிகைகளிலும் வந்திருக்கு. ஒரு பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் தன்னோட புதுப் படத்துக்குக் கவிதை எழுத இவனை ஒப்பந்தம் பண்ணி…..”

மீண்டும் இடைமறித்த சதாசிவம், “இந்த மாப்பிள்ளை வேண்டாம்” என்றார்.

“என்னப்பா சொல்லுறே?”

“இந்தக் காதல் கவிதை எழுதுற பைத்தியங்களுக்கு அது விசயத்தில் பெண்டாட்டியைத் திருப்திபடுத்திச் சந்தோசமா வைத்துக்கொள்ளத் தெரியாது. எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் மிதக்கறவனுக இவனுக. காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியறதுக்கு இந்தக் கவிதைப் போதையும் ஒரு முக்கியக் காரணமா இருக்கு. என்ன சொல்லுறே?”

“நீ அது விசயத்தில் பெரிய கில்லாடி. ஒன்னுக்கு மூனு கல்யாணம் பண்ணிட்டு மூனு பேரோடவும் சந்தோசமா குடும்பம் நடத்துறவன் நீ. நீ சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.” -அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தார் சிவராமன். 

***நண்பரொருவரின் காதல் கவிஞர்கள்’ பற்றிய ’கருத்து’ கதையாக்கப்பட்டுள்ளது. நண்பரின் கருத்து மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றினாலும் உண்மைக்குப் புறம்பானதல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

========================================================================

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

கல்யாணம் இல்லாமலே பெண்கள் பிள்ளை[கள்] பெறலாம்... சீனாவில்!!!

சீனாவில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. இதன் விளைவாக, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. 

எனவே, நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தைக் கொள்கையைக் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும், சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைத்தான் கண்டுவருகிறது. 


இந்த நிலையில், சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள[பெறுபவள், திருமணம் ஆகாத பெண் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அவளுக்குக் கணவன் என்று ஒருவன் இல்லை. ‘சேர்ந்து’ வாழ்பவன் இருந்தாலும் எந்த நேரத்திலும் அவளைப் பிரிந்து செல்லலாம்] மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமணமாகாத தம்பதி[திருமணம் ஆகாமல் தம்பதி ஆவது எப்படி?]களுக்கும் கிடைக்கும்{மாலை மலர் 31 ஜனவரி 2023 8:19 AM} 


சீன அரசின்[ஒரு மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சலுகை சீன நாடு முழுவதற்கும் விரைவில் வழங்கப்படலாம்]. இதனால் விளையும் நன்மைகள் மிகக் குறைவு என்பதோடு, தீமைகள் அதிகம் என்பது நம் கணிப்பு.


நன்மைகள்:

*மணமாகிக் குழந்தையும் பெற்ற பிறகு மணவிலக்குச் செய்ய நேர்ந்தால், ‘குழந்தையை யார் வளர்ப்பது’ என்னும் பிரச்சினை எழும். மணமாகாமல் இருந்து குழந்தை பெறும்போது இந்தப் பிரச்சினைக்கே வாய்ப்பில்லை.


*மனதுக்குப் பிடித்த ஒருவனுடன் ‘இருந்து’ முழு விருப்பத்துடன் உடலுறவு கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும்[என்பார்கள் நம் முன்னோர்கள்]; அதி புத்திசாலியாக வளரும்.


*கல்யாணம் ஆகாமலே ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு திருமணம் செய்துகொண்டால், மலடிப் பட்டம் சூட்டி குழந்தைக்காகக் கணவன் இன்னொரு திருமணம் செய்யும் முறை அறவே ஒழியும்.


*மணம் புரியாத பெண்களுக்குக் குழந்தை தருவதையே ‘அது’ விசயத்தில் தேர்ச்சி பெற்ற ஆண்கள்  தொழிலாகக் கொள்ளலாம். நிறையச் சம்பாதிக்கவும் செய்யலாம். ஹி... ஹி... ஹி!!!


ஆக, சீன அரசின் இந்த முடிவால் இவ்வாறு சில நன்மைகள் விளைவது உறுதி.



பிரச்சினைகள்[+தீமைகள்]:


*குழந்தை பெறுவதற்கு ஓர் ஆண் தேவை. ஓர் ஆணுடன் சில காலம் உறவு கொண்டு குழந்தைப் பேறு வாய்க்காவிட்டால், வேறு ஆணைத் தேட வேண்டிவரும். இதனால், பல ஆடவருடனான உறவு அதிகரிக்கும்.


இதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? சாத்தியம் இல்லை என்றால், பல குடும்பங்கள் விபச்சார விடுதிகள் போல மாறும் அவலம் நேரிடும்.


“குழந்தை பெறும்வரை எவருடனும் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். குழந்தை பெற்ற பிறகு அவர்களுடனான உறவைத் துண்டிப்போம்” என்று தாய்க்குலம் கோரிக்கை வைத்தால் சீன அரசு அதை ஏற்குமா?


“எனக்கு இன்னும் நான்கைந்து பெற்றுக்கொள்ள விருப்பம்” என்று சொல்லும் பெண்கள் விசயத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்னவாக இருக்கும்?


*‘உடலுறவுச் சுதந்திரம் கிட்டுவதால், மணம் புரியாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனித்துவிடப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இச்சையைத் தணிக்க மனம்போன போக்கில் ஆண்கள் அலைய நேரிடலாம். இதனால், பாலுறவு தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலுமாய் உடைந்து சிதற, இது தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க நிறையவே வாய்ப்புள்ளது.


*’குடும்பம்’ என்னும் அமைப்பு முற்றிலுமாய்ச் சிதையும் நிலையில்,

கணவன் மனைவி என்னும் இருவரின் வழிகாட்டலில் வளர வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தாய் மட்டுமே பொறுப்பேற்பாள். இதனால் விளையும் பாதகங்கள் சிலவாகவோ பலவாகவோ இருக்கலாம்


* * * * *

இந்த அறிவிப்பால் மேற்கண்டவாறு, சில நன்மைகளோடு பல தீமைகளும் விளைந்திடும் என்பது பற்றிச் சீன அரசும் நிறையவே யோசித்திருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள இடமில்லை.


யோசிக்காமல், சீனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி மட்டுமே அது கவனம் செலுத்தியிருந்தால், அதன் விளைவுகள் மிக மோசமானவையாகவே இருக்கும்!

===========================================================================================================

குறிப்பு:

மணமாகாத தம்பதியர் என்று சீன அரசு சொல்வது ‘சேர்ந்து’ வாழ்பவர்களைக் குறிப்பதாகக்கொள்ளலாம். ஆனால், சேர்ந்து வாழ்வது சட்டபூர்வமானதல்ல; நிரந்தரமானதும் அல்ல. சேர்ந்து வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம் என்பதால் இந்த அனுமதி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.


ஆக, சீன அரசு வழங்கும் இந்த அனுமதி ஒழுக்கச் சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது அறியத்தக்கது.

சனி, 25 பிப்ரவரி, 2023

முனியாண்டி ‘சைவ’ப் பிரியாணித் திருவிழா!!!

திருமங்கலம் அருகே முனியாண்டி பிரியாணித் திருவிழா நடைபெறுவதும், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு முனியாண்டிச் சாமிக்குப் பிரியாணி படைத்துத் தாமும் உண்டு கழிபேரின்பம் பெறுவதும் மிகப் பல ஆண்டுகளாக இடம்பெறும் நிகழ்வாகும்.

இந்த ஆண்டும்[88ஆவது ஆண்டு] இவ்விழா சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது என்பது இன்றைய ஊடகச் செய்தி[ https://tamil.news18.com/photogallery/madurai/muniandi-temple-biryani-festival-held-vadakampatti-near-thirumangalam-898734-page-14.html].

சுவாமிக்கு மாமிச விருந்து படைப்பதற்கு முன்பு அபிசேகம் ஆராதனை எல்லாம் முறைப்படி செய்யப்பட்டது.

இந்த விழாவிற்குத் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் & உள்ளுர் வெளியூர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் ஏதுமறியாத ஆடுகளையும்[150] கோழிகளையும் கொன்றுதான் பிரியாணி உணவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

இது அசைவம் உண்ணும் எல்லாச் சாமிகளுக்கும் தெரியும்.

முனியாண்டி ஓர் அசைவச் சாமி.

கடவுள் இருப்பது உண்மையானால், முனியாண்டி போன்ற அசைவச் சாமிகள் இருப்பதும் சாத்தியமே. இருந்துவிட்டுப்போகட்டும்.

அறியாமை இருளில் நம் மக்கள் மூழ்கிக்கிடந்த காலத்தில், ஆடு, கோழி விருந்தெல்லாம் படைத்து முனியாண்டியைத் திருப்திப்படுத்தி அவருடைய அருளைப் பெறலாம் என்று நம்பியது மன்னிக்கத்தக்க குற்றம்தான். 

ஆனால், கடவுள் என்றொருவர் உண்டா என்னும் முற்றுப்பெறாத தொடர் விவாதம் நடைபெறும் இன்றைய அறிவியல் யுகத்தில், முனியாண்டி என்றொரு அசைவச் சாமி இருப்பதாக நம்புவதும், அவருக்கு அசைவப் பிரியாணி படைத்து விழாக் கொண்டாடுவதும் ஏற்புடையதாக இல்லை. 

இல்லவே இல்லை.

சாமியின் பெயரால் ஒரே ஒரு நாளில் நூற்றுக் கணக்கில் ஆடுகளையும் கோழிகளையும் கழுத்தறுத்துக் கொல்வது மனிதாபமற்ற செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

இதை, இன்றெல்லாமும் இந்த விழாவைக் கொண்டாடுபவர்கள் உணர்தல் வேண்டும்.

உணர்ந்து…..

முனியாண்டி சாமிக்கு அசைவம் தவிர்த்து, சைவப் பிரியாணி படைத்து வழிபடலாம்.

ஆடு கோழி அறுத்துச் செய்கின்ற அசைவப் பிரியாணியை நம்மவர்கள் மட்டுமே உண்டு மகிழலாம்.

ஆக,

இனி எதிர்வரும் ஆண்டுகளில், முனியாண்டி பிரியாணித் திருவிழா’ என்னும் பெயரைத் தவிர்த்து, ‘முனியாண்டி விலாஸ் பிரியாணித் திருவிழா’ என்னும்  பெயரில் விடுதி நடத்துவோர் விழா நடத்தலாம்.

நம் கோரிக்கையை ‘முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடை’ நண்பர்கள் ஏற்பார்களா?

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.150 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி செய்து வழங்கப்பட்டது.

இறைச்சியைத் துண்டிக்கும் செயலைச் சின்னஞ்சிறுசுகளின் கண்களில் படாமல், கொட்டகை அமைத்துத் தனியிடத்தில் செய்யலாமே.

====================================================================================================

வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஒரு ‘ஞான சூன்யன்’இன் ‘அச்சுப்பிச்சு’ அறிவியல் கேள்வி!!!

//13,8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறியதாக இருந்த பிரபஞ்சம் வெப்பமாகவும், அடர்த்தியாகவும் இருந்த பெருவெடிப்பு காரணமாகப் பெரிதாகத் தொடங்கியது. ஒரு வினாடியில் பில்லியனில் ஒரு பங்கிற்கும் குறைவான நேரத்தில், அந்தச் சிறிய பிரபஞ்சம் "காஸ்மிக் இன்ஃப்ளேஷன்" எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் அதன் அசல் அளவைவிடப் பில்லியன் மடங்குக்கு மேல் விரிவடைந்தது.

பிரபஞ்சம் விரிவடையும்போது இந்தக் கருந்துளைகளும் விரிவடைவதாக ஹவாய்ப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது//[.https://www.hindutamil.in/news/life-style/944933-black-holes-may-be-the-source-of-mysterious-dark-energy-that-makes-up-most-of-the-universe.html].


* * * * *

‘பிரபஞ்சம் விரிவடைகிறது’.....

இதை மீண்டும் மீண்டும் அறிவியல் உலகம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.


‘கோள்களும் நட்சத்திரங்களும், விஞ்ஞானிகளாலும் அறியப்படாத மேலும் பலவும் இடம்கொண்டிருக்கும் இடம் அண்டவெளி’ என்பதை அறிவியல் அடிச்சுவடிகூடக் கற்காத நம்மைப் போன்ற பலரும் அறிவர்.


நீளம், அகலம், சுற்றளவு, கனபரிமாணம் என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாதது இந்த அண்டவெளி என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.


இந்த அண்டவெளியைத்தான் விஞ்ஞானிகள் பிரபஞ்சம் என்கிறார்கள்.


இந்தப் பிரபஞ்சத்துக்கான நீளம், அகலம், சுற்றளவு ஆகியவற்றை[மையப்புள்ளி என்று எதுவும் இல்லாதது இது] விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக அளந்து கணக்கிட்டுச் சொன்னதில்லை. எந்தவொரு சாதனத்தைக் கொண்டும் பிரபஞ்சத்தின் விளிம்பைக் கண்டறியவும் இல்லை.


இந்நிலையில், அது விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்று அவ்வப்போது அறிக்கை வெளியிடுகிறார்களே, எப்படி?


விளிம்பு எது என்று அறியப்படாத நிலையில், கோள்களுக்கு[+நட்சத்திரங்கள்] இடையேயான இடைவெளி அதிகரிப்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே விரிவடைகிறது என்று சொல்வது சரியா?


விரிவடைகிறது பிரபஞ்சம் என்றால், பின்னொரு காலத்தில் இது சுருங்குவதும் சாத்தியம்தானே?


விரிவடைதலோ சுருங்குதலோ இல்லாமல் எப்போதும் இருந்த நிலையிலேயே இருந்துகொண்டுள்ளது பிரபஞ்சம் என்றுகூடச் சொல்லலாம்தானே?


இவை நம்மைப் போன்ற சாமானியர்கள் கேட்கும் கேள்விகள்.


இதற்கெல்லாமும் நம் விஞ்ஞானிகள் விளக்கம் தந்திருக்கிறார்களா?


“ஆம்” என்றால், சொல்லிக்கொள்ளும் வகையில் அறிவியல் அறிவு பெற்ற வலைப்பதிவர் எவரேனும் விளக்கமாக ஒரு பதிவு வெளியிடுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

==================================================================================================

***போதிய அறிவியல் அறிவு இல்லையெனினும் ஆர்வம் காரணமாக உருவான பதிவு இது. பிழை காணின் பொருட்படுத்தாதீர்! [‘அச்சுப்பிச்சு’... ‘சிறுபிள்ளைத்தனமான' என்று பொருள்கொள்க!]


புதன், 22 பிப்ரவரி, 2023

இஸ்லாமியர்கள் ஏன் பின்னோக்கிச் செலுத்தப்படுகிறார்கள்?!

‘உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் உள்ள ‘தாருல் உலூம் தியோபந்த்’ என்ற இஸ்லாமிய செமினரி[இறையியல், மதம், வரலாறு தொடர்பான கல்வியை வழங்கும் ஒரு சிறப்புப் பள்ளி], தாடியை முழுவதுமாக மழித்தலை அல்லது கத்தரித்தலைச் செய்ததற்காக நான்கு மாணவர்களை வெளியேற்றியுள்ளது’ -இது நேற்றையச் செய்தி.

தாடி இல்லாத புதியவர்களும் மாணவர்களாகச் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்  அந்த நிலையம் அறிவித்துள்ளது.

"இஸ்லாத்தில், ஆண்கள் தங்கள் தாடியை ஒரு முஷ்டி நீளத்திற்கு வைத்திருக்க வேண்டும். அதை ஒரு முஷ்டி அளவுக்குக் கீழே வெட்டுவதும் மொட்டையடிப்பதும் தடைசெய்யப்பட்டவை[ஹராம்] என்பதோடு அவை மாபெரும் பாவச் செயலுமாகும்[அறுவை செய்ய நேரும்போது இதற்கு விதிவிலக்கு உண்டா?!] என்று கல்வித் துறைத் தலைவர் ’மௌலானா ஹுசைன் அகமது’ கூறினார்” என்பதும் அச்செய்தியின் உள்ளடக்கம் ஆகும்.

இந்த நடவடிக்கையை, தியோபந்த் நகரத்தில் உள்ள ஜாமியா ஷைகுல் ஹிந்தின் மௌலானா முஃப்தி ஆசாத் காஸ்மி ஆதரித்துள்ளாராம். freshers-without-beard/ar-AA17KqNx?ocid=msedgdhp&pc=U531&cvid=a88858d56b814a428127c28d38c9d30e

தாடியை அகற்றுவது பாவச் செயல் என்கிறார் இவர். இஸ்லாமியர்களிலேயே இதை மறுப்பவர்களும் உளர்.

குரானில் 114 அத்தியாயங்கள் 6346 வசனங்கள் உள்ளன. தாடி வைக்க வேண்டும் மீசையைச் சிரைக்க வேண்டும் என்று ஓரு வசனத்திலும் இல்லை.

இஸ்லாமிற்குக் குரான் மட்டுமே சட்டப் புத்தகம் - மற்றவை எல்லாம் மனிதனால் எழுதப்பட்டவை. அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார் ஒரு இஸ்லாமியர்{Syed Siraj [quora]}.

அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் – பெண்களும், ஆண்மையிலும் – பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. தாடி வைக்க, பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத்தான் செலவு ஏற்படும்.https://www.onlinepj.in/index.php/books/islamic-tamil-books/arthamulla_kelvikal

இது போன்ற வாதங்கள் மிக மேம்போக்கானவை.

இஸ்லாம் ஒரு மதமோ மார்க்கமோ, மனித மனங்களை நன்னெறியில் செலுத்துவதுதான் அதன் நோக்கமாக இருக்குமே[வேண்டும்] தவிர, உடல் பராமரிப்புக்கு அது முக்கியத்துவம் தராது என்பதே நம் நம்பிக்கை.

வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, எதார்த்த நிலை என்று பார்க்கும்போது, இந்தியாவைப் பொருத்தவரை தாடி வளர்க்கும் இஸ்லாமியர் எண்ணிக்கை குறைந்துகொண்டுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை[மற்ற மதத்தவரும் வளர்ப்பது முக்கியக் காரணமோ?].

‘சீனாவில், புதிய சட்டத்தின்படி, உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது -bbc’ -இம்மாதிரியான தகவல்களை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லையா?

தாடிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துகொண்டிருக்கும் நிலையில் தாடி வளர்க்கும் வழக்கத்தைக் கட்டிக்காப்பதற்கு இஸ்லாம் மார்க்கத் தலைவர்கள் ஏன் இத்தனைச் சிரமப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.

மனத்தளவில் ஒரு இஸ்லாமியர் 100% இஸ்லாமியராகவே இருக்கட்டும். பொதுவிடங்களில் தோற்றத்தால் தாங்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள் என்று காட்டிக்கொள்வது தேவைதானா?

ஏற்கனவே, பொதுமக்களுடனான் இஸ்லாமியர் உறவைத் துண்டித்துவிடப் படாதபாடு படும் இந்துத்துவர்களை இது உற்சாகப்படுத்துவதாக அமையும் என்பதை மார்க்கத்தின் தலைவர்கள் உணராமல் இருப்பது ஏனென்று புரியவில்லை.

எது எப்படியோ, பிற மக்களைப் போலவே இஸ்லாமிய மக்களும் வளம் செறிந்த நல்வாழ்வை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டியவர்களே. அவர்களைப் பின்னோக்கிச் செலுத்தும் தவற்றைச் செய்யாமலிருப்பது சம்பந்தப்பட்ட தலைவர்களின் கடமை!
[Islamic seminary expels 4 students for shaving beard, says no admission for freshers without beard© Provided by The Indian Express]
==============================================================================

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

ஜக்கியின் முதுகுக்கு[ம்] ‘தீபாராதனை’! இந்த ‘அல்பம்’ ஆடி அடங்குவது எப்போது?!

மயக்குமொழி பேசி, பெரும் எண்ணிக்கையிலான[?] மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தப் போலிச் சாமியார் அடிக்கும் கூத்து கொஞ்சநஞ்சமல்ல. 

விவரிக்க முற்பட்டால் கொச்சையானவையும் அசிங்கமானவையுமான சொற்களைப் பயன்படுத்த நேரிடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்கள் எப்படியோ, நம் பிரதமர் மோடி உண்மையில் இந்த ஆளின் வசீகரப் பேச்சுக்கு அடிமையாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவர் செய்ததாக நம்பப்படும்  குற்றங்களை மூடி மறைப்பதற்காக இந்தக் கபடசூத்திரதாரி போடும் வேடங்களை உண்மையானவை என்று பிரதமர் நம்புகிறாரா?

“ஆம்” என்றால்.....

நேற்று வெளியான, இந்த நபர் சம்பந்தப்பட்ட ஒரு காணொலி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதை நம் பிரதமர் மட்டுமல்ல, குடியரசுத் தலைவர்  போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அவசியம் பார்வையிடுதல் வேண்டும்.

[தீபாராதனையை ‘ஆரத்தி’ என்கிறார்களோ?]

பார்வையிட்ட பிறகு,

இந்த வேடதாரியின் அடாத செயல் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துமா, கடும் சினம்கொள்ள வைக்குமா என்பது தெரியும்.

தெரிந்த பின்னரேனும் இந்தப் போலி ஆன்மிகவாதி மீது உரிய நடவடிக்கை எடுத்தல் மிக மிக அவசியம்.

எடுக்கப்படுமா?

அதிகார வர்க்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் கண்டறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
                                     
                                     *   *   *   *   *

==============================================================================
***ஜக்கி குறித்து எழுதுவதை இயன்றவரை தவிர்க்க விரும்புகிறேன். இந்தப் பதிவு தவிர்க்க இயலாததாகிவிட்டது.

‘ரஜினி’க்குக் ‘கொஞ்சமே கொஞ்சம்’ சிந்திக்கக் கற்றுக்கொடு சிவபெருமானே!!!

 

உச்ச நடிகர் ரஜினி உண்மையில் மிக நல்லவர்; பக்திமானும்கூட.

இவர் கடவுள் பக்தராக இருப்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. பக்தியின் பெயரால் மனம்போன போக்கில் சில நேரங்களில்[பல நேரங்களில்?] எதையாவது இவர் உளறிவைப்பதுதான் நெருடலாக இருக்கிறது.

மேலே[பட நகலில்] என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மீண்டும் கவனியுங்கள்.

மயில்சாமி இறந்தது சிவனின் கணக்காம். அவர் தனக்கு உகந்த நாளில்[சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி மட்டும்தானா?] தன் பக்தரான மயில்சாமியை எடுத்துக்கொண்டாராம்.

சிவனுக்கு உகந்த நாளான இந்தச்  சிவராத்திரி என்னும் ராத்திரி இனி வரவே வராதா?

வரும்..... வரும்..... வரும்; ஆண்டுதோறும் வரும். இது உறுதி.

வரவிருக்கும் சிவராத்திரிகளில் 43 ராத்திரிகளை ஒதுக்கிவிட்டு, 44ஆவது சிவராத்திரியில்[மயில்சாமிக்கு அப்போது 100 வயது] தன்னுடைய உண்மைப் பக்தரான மயில்சாமியைத் தன்னோடு இணைத்துக்கொண்டிருக்கலாமே?

ஏன் செய்யவில்லை? 

பலருக்கும் பலவகையிலும் உதவி செய்து வாழ்ந்த ஒரு நல்ல மனிதரை ஏன் அற்ப ஆயுளில் சாகடித்தார் சிவன்?

“ஓ சிவபெருமானே, இனியேனும் உன்னுடைய உண்மைப் பக்தர்களை 100 ஆண்டுகள் வாழ்ந்திட அனுமதிப்பாயாக” என்று சிவனின் அதி தீவிரப் பக்தரான ரஜினி முழுமுதல் கடவுளான அவருக்கு ஆலோசனை வழங்கலாம்.

வழங்குவாரா சூப்பர் ஸ்டார்?!

=================================================================

***‘ஒரு ஊழியனின் குரல்’ என்னும் வலைப்பக்க வாசிப்பே இப்பதிவு உருவாகக் காரணம். எஸ்.ராமன் அவர்களுக்கு என் நன்றி.

திங்கள், 20 பிப்ரவரி, 2023

இன்பபுரிக்கு இட்டுச்செல்லும் ஏழு இயங்குநீர்ச் சுரப்பிகள்[Sex Hormones]!!!

சியின்மை, தூக்கமின்மை, மறதி, மண்டையில் பட்டாம்பூச்சி சிறகடித்தல், நெஞ்சில் படபடப்பு போன்றவை உடம்பில் காதல் எனப்படும் காமம்  களிநடனம் புரிவதற்கான அறிகுறிகள் ஆகும். இதற்குக் காரணம், உடலில் சுரக்கும் சில பாலியல் சுரப்பிகள்[Sex Hormones]தான்.

உடலமைப்பையும் மனப்பக்குவத்தையும் பொருத்து இயங்குநீர் சுரப்பது கூடும்; குறையும். சுரக்கும் நீரின் அளவைப் பொருத்துக் காம உணர்ச்சி கட்டுக்குள் இருப்பதும், கொட்டமடிப்பதும் அமையும்.

இயக்குநீர்ச் சுரப்பிகளைக் ‘காமநீர்ச் சுரப்பிகள்’ என்றழைப்பதும் ஏற்புடையதே.

அந்தச் சுரப்பிகளின் எண்ணிக்கை ஏழு என்கிறார்கள் உடற்கூறு ஆய்வு அறிஞர்கள்.

அந்தப் பொல்லாத ஏழு சுரப்பிகளும் அவை ஆற்றும் பணிகளும்:

டெஸ்டோஸ்டிரோன்(Testosterone): ஆண்கள் பருவநிலையை அடையும் பொழுதோ அல்லது அதற்கு முன்னரோ இது செயல்படத் தொடங்கும். இதன் வேலை விந்தணுவை உற்பத்தி செய்வது.

ஈஸ்ட்ரோஜன்(Estrogen): இது, பெண்கள் பருவ வயதை அடையும்போது தன் திருவிளையாடலைத் தொடங்கும். கருப்பை[அண்டம்] சம்பந்தப்பட்ட பணிகளை இது ஆற்றுகிறது.

அட்ரினலின்[Adrenaline]: எதிர்பாலினத்தின் தோற்றம், செயல், பேச்சு போன்றவற்றால் ஈர்க்கப்படுவது இது சுரப்பதால்தான். உண்ண மறந்து, உறக்கம் இழந்து, தவியாய்த் தவித்துத் துரும்பாய் இளைத்துப்போகக் காரணம் இது கட்டுக்கடங்காமல் சுரப்பதுதான்.

டோபோமைன்(Dopamine): அடிக்கடி தன் மனம் கவர்ந்த நாயகன் அல்லது நாயகியைத் தனிமையில் சந்திக்கத் தூண்டுவது இது. இது சுரப்பதால்தான் காதலி அல்லது காதலனின் அருகாமை இன்பபுரிக்குக் இட்டுச் செல்கிறது. துணையுடன் இணைந்து காம சுகத்தின் உச்சத்தைத் தொடத் தூண்டுவதும், அது வாய்க்காதபோது சுயஇன்பம் செய்ய வைப்பதும் இதன் கைங்கரியம்தான்.

சோரடோனின்(Serotonin): தனக்குப் பிடித்தமானவருடன் விரும்பியபடியெல்லாம் இருந்து இன்புறுவது போல் கனவு காண வைப்பது இந்தச் சுரப்பி ஆற்றும் பணி. அதாவது, காலநேரம் கருதாமல் மண்டைக்குள் கனவுக்குதிரையை ஓடவிடுவது இந்தக் கருமந்தரச் சுரப்பி சுரப்பதால்தான்.

ஆக்சிடோசின்(Oxytocin): திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ, இணைபிரியாமல் இருந்து, காலமெல்லாம் மனம் ஒத்து வாழ்வதற்கான நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது இந்தச் சுரப்பி.

குழந்தை பிறக்கும் சமயத்திலும் ஆக்ஷிடோசின் சுரக்கிறது. அதனால்தான் தாய்க்கும் சேய்க்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டாகிறது. எனவே, இதைத் தொட்டில் ஹார்மோன் எனவும் செல்லமாக அழைப்பார்கள்.

வசோப்ரெஸ்ஸின்(Vasopressin): ’ஒருவனுக்கு ஒருத்து. ஒருத்திக்கு ஒருவன்” என்னும் ஒழுக்க நெறி போற்றி, கற்புக்கரசனாகவும், கற்புக்கரசியாகவும் வாழ்ந்திடத் தூண்டும் மிக நல்லதொரு சுரப்பி இது.

குறிப்பு: இந்தப் பதிவுக்கு ஆதாரமாக அமைந்த கட்டுரை நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது[நகலெடுத்துப் பதிவு செய்கையில் முகவரி காணாமல்போனது] என்பது என் கணிப்பு. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சிதைக்காமல், முறைப்படுத்தியும் எளிமைப்படுத்தியும் பதிவு செய்துள்ளேன். இயக்குநீர்ச் சுரப்பிகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக விவரிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை என்பது அறியத்தக்கது.

=========================================================================

சனி, 18 பிப்ரவரி, 2023

ஆசை நிறைவேறியது! அந்தக் கொஞ்சம் அறிவுஜீவிகளுக்கு நன்றி!!

இங்கே பக்திப்பித்தர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை.

எத்தனைதான் அறிவியல் ரீதியாக அறிவுறுத்தினாலும், இடித்துரைத்துப் புத்திமதி சொன்னாலும் போலிச்சாமியார்கள் மீதான இவர்களின் ‘பித்தம்’ இன்றளவும் தெளியவே இல்லை.

‘ஆடு, மேய்ப்பவனை நம்பாது; வெட்டிக் கூறுபோட்டு விற்பவனைத்தான் நம்பும்’ என்பது போல், அறிவுஜீவிகளைப் புறக்கணித்து, பொய் பேசிப் புனிதர் வேடம் போடும் போலிச் சாமியார்களை நம்புகிறவர்கள் நம் மக்களில் பெரும்பாலோர். 

சாரி சாரியாய், அணி அணியாய், கூட்டம் கூட்டமாய்ச் சென்று சல்லாபச் சாமியார்களின் தரிசனத்துக்குக் காத்துக்கிடப்பார்கள்; கணக்குவழக்குப் பார்க்காமல் காணிக்கை செலுத்துவார்கள். கால்வயிற்றுக் கஞ்சிக்குச் சிங்கியடித்த சாமியாரெல்லாம் லட்சங்களிலும் கோடிகளிலும் புரள்கிறார்கள்.

கோவையிலும் ஒரு சாமியார். கோடிகளில் புரள்வது மட்டுமல்ல, சொகுசு வாகனங்கள், வான ஊர்திகள் என்று வானவெளியில் உலா வருபவர்.

எக்குத்தப்பான காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.

ஆனாலும், பெரிய மனிதர்கள் பலரும் அவரைத் தேடிவந்து அவரிடம் ஆசி பெறுகிறார்கள். இன்றுகூட, அந்தச் சாமியாரின் ஆச்சிரமத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்துகொள்ள இந்த நாட்டின் முதன்மைக் குடிமகளே வந்திருக்கிறார்.

அவர் அவ்வாறு கலந்துகொள்வது ஏற்புடையதல்ல என்று எதிர்ப்புத் தெரிவிப்பார் எவருமில்லை என்பதை எண்ணியபோது மனதில் பெரும் கவலை மண்டியது[சாமியாரைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்கூட, ஏனோ மௌனம் சாதிப்பதாகத் தெரிகிறது].

ஒரு சிலரேனும் ஒன்றுகூடித் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவார்களா என்னும் ஏக்கம் உள்ளுக்குள் பரவியது. அந்த ஏக்கம், கீழ்க்காணும் ஊடகச் செய்தியைக் கண்ணுற்றபோது சற்றே தணிந்தது.

செய்தி[https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-tpdk-cadres-protest-against-president-droupadi-murmu-s-visit-to-isha-yoga-centre-499068.html?story=2]:

#வெள்ளியங்கிரியானின்[ஈஷா ஆசிரமம்] விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘கோவை ராமகிருஷ்ணன்’ தலைமையிலான, ‘தந்தை பெரியார்’ திராவிடக் கழகத்தினர் போராட்டம் நடத்தினார்கள்#

இது தொடர்பாக, தந்தை பெரியார் தி.க. நிர்வாகிகள் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலையையும், யானை வழித்தடங்களையும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களையும், விவசாய நிலங்களையும் சூறையாடியதோடு, ‘யோகா’ என்னும் பெயரில் பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள, அதுவும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்துக்குரியது. இது அந்தச் சாமியார் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று உள்ளது என்று தங்களின் போராட்டத்துக்கான காரணங்களை மக்கள் அறியும் வகையில் ஊடகக்காரர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

===========================================================================

‘ஜக்கியங்கிரி’யில்[ஈஷா ஆசிரமம்] சக்தி ஊட்டப்பட்ட ‘ஜக்கிருத்ராட்ச மாலை’ இலவசம்!!!

 

“ருத்ராட்சம்" என்ற சொல்லுக்கு, "சிவனின் கண்ணீர்"[சிவன் ஏன் கண்ணீர்விட்டு அழுதார், தன் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களை நினைத்தா?!] என்று பொருள். சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை மஹாசிவராத்திரியன்று பெற்றுக்கொண்டு ருத்ராட்சத் தீட்சை[???] பெறமுடியும். ருத்ராட்சத் தீட்சையின் மூலம் சிவனின் அருளை உங்கள் இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.”

-இது ஊடகங்களில் வெளியான/வெளியாகிக்கொண்டிருக்கும் ஜக்கியின் விளம்பரம்.

ருத்ராட்சத்தின் பலன்கள்:

*"பயணத்தின்போது பசியெடுத்துச் சாப்பிடவும், தூங்கவும், குடிக்கும் நீர் தூய்மையானதா, நஞ்சு கலந்ததா என்பதை அறியவும் உருத்ராட்சம் பயன்படுகிறது. உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம். எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்துப் பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர்த் திசையில் சுழலும்.” -ஜக்கி பகவான்.

*"இது தீய சக்திக்கு எதிராகக் கவசமாகச் செயல்படவல்லது[தீய சக்தின்னா, போலிச் சாமியார்களைப் போன்றதா?]. ஒருவருக்குக் கேடு செய்யக்கூடிய தீய சக்திகளைச் சிலர் உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு ருத்ராட்சம் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.” -ஜக்கீஸ்வரன்

*“இரத்தக்கொதிப்பைச் சீராக்கும்; நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்[ஆதாரம்?]. 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுக மணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி, ஒருமுகப்படுத்தும் தன்மையைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பெரியோர்களின் சமநிலையான கவனிப்பை ஈர்ப்பார்கள்.” -ஜக்கிஸ்ரீஸ்ரீ

*“பலமுறை நான் காட்டில் சலனம் இல்லாமல் அமர்ந்திருக்கும் பொழுது, குறிப்பாக மதிய வேளையில் சுமார் 2 லிருந்து 5 மணிக்குள், கண் திறந்து பார்க்கும்பொழுது என்னைச் சுற்றி 5 முதல் 8 நாகங்கள் இருக்கும். நீங்கள் தியானத்தன்மையை அடையும்பொழுது அவை உங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. ஆன்மிகம் என்று கருதப்படும் அதிர்வுகளை[???] நோக்கி இவை போன்ற ஜீவராசிகள் ஈர்க்கப்படுகின்றன.” -பாலயோகி ஜக்கி

*“பல விதமான பூக்களின் மீது ருத்ராக்ஷத்தைப் பிடித்து இதை நிரூபணம் செய்யலாம். ருத்ராட்சம் நேர்மறையாக(பிரதக்ஷணமாக)ச் சுற்றினால் அந்தப் பூ சிவனுக்கு[இந்தப் ‘பூ’ன்னா அவருக்கு உயிர்?!] அர்ப்பணிக்க உகந்தது. தாழம்பூவை வைத்து இது போல செய்தால், ருத்ராக்ஷத்திற்கு அந்தப் பூவைப் பிடிக்கவில்லை என்பதைப் பார்ப்பீர்கள்.

ருத்ராக்ஷத்தை 3 முதல் 6 மாதங்கள் நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் உடலோடு அது ஒரு வகையில் கலந்துபோயிருக்கும். எனவே, ஒவ்வொருவரின் ருத்ராக்ஷமும் வித்யாசமாக இருக்கும். அதனால்தான் உங்கள் ருத்ராக்ஷத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை நீங்கள் பெறுவதோ கூடாது. உங்களுக்கு உகந்த அதிர்வை அது பெற்றிருக்கும். உங்களுடைய ஏதோ ஒன்று அதில் இருக்கும்.

ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீங்கள் 24 நேரமும் அதை அணிந்திருந்துவிட்டு ஒரு நாள் அதைக் கழற்றிவிட்டுத் தூங்க முயற்சி செய்தால் தூக்கம் வராது. உங்கள் உடலின் ஒரு பாகம் இல்லாமல் இருப்பது போல இருக்கும். ஏனென்றால் ருத்ராட்சம் உங்களின் பாகமாகிவிடுகிறது. அதிகப்படியான ஓர் உறுப்புபோல் செயல் புரிகிறது.” -கர்மயோகி ஜக்கி

***ஜக்கி சொல்லியிருக்கும் அத்தனை உருத்ராட்சத் தத்துவங்களும் உங்களுக்குப் புரியுமானால் அதி அற்புதப் புத்திசாலி நீங்கள். புரியாவிட்டால், அடியேனைப் போல ‘வாழைமட்டை’ ரகம்!

===================================================================

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ruthratcham-rudraksha-in-tamil