எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

ஜக்கியின் முதுகுக்கு[ம்] ‘தீபாராதனை’! இந்த ‘அல்பம்’ ஆடி அடங்குவது எப்போது?!

மயக்குமொழி பேசி, பெரும் எண்ணிக்கையிலான[?] மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தப் போலிச் சாமியார் அடிக்கும் கூத்து கொஞ்சநஞ்சமல்ல. 

விவரிக்க முற்பட்டால் கொச்சையானவையும் அசிங்கமானவையுமான சொற்களைப் பயன்படுத்த நேரிடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்கள் எப்படியோ, நம் பிரதமர் மோடி உண்மையில் இந்த ஆளின் வசீகரப் பேச்சுக்கு அடிமையாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவர் செய்ததாக நம்பப்படும்  குற்றங்களை மூடி மறைப்பதற்காக இந்தக் கபடசூத்திரதாரி போடும் வேடங்களை உண்மையானவை என்று பிரதமர் நம்புகிறாரா?

“ஆம்” என்றால்.....

நேற்று வெளியான, இந்த நபர் சம்பந்தப்பட்ட ஒரு காணொலி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதை நம் பிரதமர் மட்டுமல்ல, குடியரசுத் தலைவர்  போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அவசியம் பார்வையிடுதல் வேண்டும்.

[தீபாராதனையை ‘ஆரத்தி’ என்கிறார்களோ?]

பார்வையிட்ட பிறகு,

இந்த வேடதாரியின் அடாத செயல் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துமா, கடும் சினம்கொள்ள வைக்குமா என்பது தெரியும்.

தெரிந்த பின்னரேனும் இந்தப் போலி ஆன்மிகவாதி மீது உரிய நடவடிக்கை எடுத்தல் மிக மிக அவசியம்.

எடுக்கப்படுமா?

அதிகார வர்க்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் கண்டறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
                                     
                                     *   *   *   *   *

==============================================================================
***ஜக்கி குறித்து எழுதுவதை இயன்றவரை தவிர்க்க விரும்புகிறேன். இந்தப் பதிவு தவிர்க்க இயலாததாகிவிட்டது.