எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 14 மார்ச், 2014

ஐன்ஸ்டீன் ‘முளை’யை மிஞ்சிய பெரிய சைஸ் ‘மூளை’ப் பெண்மணி!



ஐன்ஸ்டீன் மூளை ஆர்டினரி மூளையைவிடக் கொஞ்சம் பெரிய சைஸில் இருந்ததாமே? மெய்யாலுமா? இக்கேள்வி, 10.08.2003தேதியிட்ட விகடன் ‘ஹாய் மதன்’ பகுதியில் கேட்கப்பட்டது. அதற்கு ‘மதன்’ அளித்த சுவையான பதில் கீழே...........

ஐன்ஸ்டீன் மூளை சற்றுப் பெருசு என்பது உண்மையே. ஆனால், அவர் ஐன்ஸ்டீன் ஆவதற்கு அது காரணமில்லை.

தன் மூளையைத் தனியே எடுத்துச் சோதிக்க வேண்டும் என்று ஐன்ஸ்டீனே விருப்பப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. ஆனால், உயிலில் அப்படி அவர் எதையும் எழுதி வைக்கவில்லை.

அவர் மகன் கேட்டுக்கொண்டதால், ஐன்ஸ்டீன் இறந்த பிறகு, அவர் உடலைச் சோதித்த டாக்டர் தாமஸ் ஹார்வே, ஐன்ஸ்டீன் மூளையை ஒரு ஜாடியில் எடுத்து வைத்தார். இது நடந்தது 1955 ஆம் ஆண்டில்.

அப்புறம் முப்பது வருங்களுக்கு ஐ.மூளை ஜாடியிலேயே தேமேயென்று இருந்தது.

1985இல் ஒருவழியாக ஆராய்ச்சியை ஆரம்பித்தார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ந்தது சைஸை அல்ல; கனெக்ஸன்களை.

மனித மூளையின் சராசரி எடை சுமார் மூன்று பவுண்டு [சுமார் 1350 கிராம்ஸ்]. அதற்குள்ளே ஆயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. செய்திப் பரிமாற்றம் செய்யும் குதிரைகள் அவை.

அந்தக் குதிரைகளை இயக்கும் செல்கள் ஐன்ஸ்டீன் மூளையில் ரொம்ப அதிகமாக இருந்தன. அதாவது, மற்ற மூளைகளைவிட இன்னும் நிறைய நியூரான் குதிரைகள் அவர் தலைக்குள் இயங்கின.

உலகப் புகழ் பெற்ற கணித மேதை கே. எஃப்.காஸ் மூளை சராசரி [’டல்’லடிக்கிற] மனித மூளை சைஸ்தான்.

கணவன் உட்பட, பலரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த வெறி பிடித்த  [குறைந்த IQ கொண்ட] ஒரு பெண்ணைத் தூக்கிலிட்ட பிறகு அவளுடைய மூளை சைஸ் 1565 கிராம்ஸ் என்று தெரிய வந்தது. அதிக எடையைப் பொருத்தவரை இது கின்னஸ் ரெக்கார்டு!

************************************************************************************* 
[இப்பதிவு வெளியாவதற்குச் சற்று முன்னர் எழுதி வெளியிட்ட, //நடிகர் சத்தியராஜின் ‘தேர்தல் நேரச் சிந்தனைகள்’//[கிளிக்] என்ற பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படவில்லை. திரை மணம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதையும் வாசிக்குமாறு வேண்டுகிறேன்.]

************************************************************************************

நடிகர் சத்தியராஜின் ‘தேர்தல் நேரச் சிந்தனைகள்’!!!

2004 ஆம் ஆண்டில், நடிகர் சத்தியராஜ் ஆனந்த விகடனுக்கு [01.08.2004] அளித்த ஓர் அதிரடிப் பேட்டி இது. சற்றேனும் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் நடைபெறவுள்ள இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறேன்.


கேள்வி:
இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் ஓ.கே-வா?

பதில் [சத்தியராஜ்]:
காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க-னு பல கட்சிகள் மாறிமாறி ஆண்டு பார்த்தாச்சு. என்னத்தைக் கண்டோம்? இந்தியா முழுக்கக் கம்யூனிஸ்டுகள் கையில் கொடுத்துப் பார்த்தா என்னன்னு ஆசையா இருக்கு. இங்கே, சொத்து எல்லாம் குறிப்பிட்ட சிலரிடமே குவிஞ்சி கிடக்குது. எனக்கே தேவைக்கு அதிகமா சொத்து இருக்கு. இந்த நல்ல யோசனையை ஒரு பணக்காரனா இருந்துகிட்டே நான் சொல்றேன்.


கேள்வி:
அரசியலில் உங்களுக்கு யார் ‘ரோல் மாடல்’?

பதில்:
தமிழர்களின் அடையாளமான தந்தை பெரியார்தான். அவரைவிடப் பெரிய சிந்தனைவாதி யாருமில்லை. மேலும் என்னைக் கவர்ந்தவர் சிங்கப்பூரோட முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ. அவருக்கு முன்னாடி இருந்த சிங்கப்பூர் வேறு. பின்னாடி இருக்கிற சிங்கப்பூர் வேறு. நாட்டுக்கு நல்ல தலைமை இருந்தா ஒரு நாட்டை எப்படி வேண்டுமானாலும் மாத்தலாம். சிங்கப்பூரில் ஒன்னுமே கிடையாது. அது ஒரு குட்டித் தீவு. ‘எதை வெச்சி முன்னுக்கு வரலாம்?’னு யோசிச்சி, ‘வியாபாரச் சந்தையா மாத்தலாமே’ன்னு அவர்தான் முடிவு பண்ணினார். நமக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பாங்களான்னு தெரியல.


கேள்வி:
நடிகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா?

பதில்:
இது தானா வர்றது. நாங்க மகான்களோ, பெரிய மேதைகளோ, தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி பெரிய விஞ்ஞானிகளோ கிடையாது. எங்க படம் பிடிச்சதுன்னா ஒரு தடவைக்கு நாலு தடவை பாருங்க. நடிகன்ங்கிற நிலையைத் தாண்டி யாராவது ஒருத்தர் அதி மேதாவியாத் தெரிஞ்சா, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல்வாதியாத் தெரிஞ்சா ஏத்துக்குங்க. ஆனா, அவ்வளவு உங்களுக்கு நாங்க சிரமம் வைக்கிறதில்லையே [சிரிக்கிறார்]. உண்மையைச் சொல்லணும்னா, நடிகர் என்ற லெவலுக்கு மேலே எங்களை நீங்க யாரும் மதிக்க வேண்டியதில்லை.


கேள்வி:
குட்டிச் சாமியார் [அப்போது பிரபலமாக இருந்த ஒரு பொடிச் சாமியார்] விஷயம் பரபரப்பாகிட்டிருக்கு.....பார்த்தீங்களா?

பதில்:
எல்லாச் சாமியார்களும் காமெடியன்கள்தான் [அரசியல் தொடர்பும் வைத்திருக்கிறார்கள்]. அவர்களில் குட்டிச் சாமியார் பெரிய காமெடியன். கடவுள் நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. ஆனா, சாமியார்கள் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுதுன்னா என்ன அர்த்தம்? கடவுளை நம்பாமல் மக்கள் சாமியார்களை நம்புறாங்க. அப்படித்தானே? இது முட்டாள்தனம் இல்லையா? ஏதாவது ஒரு வடிவில் இந்த முட்டாள்தனம் இருந்துட்டே இருக்கு.


தலைப்புக்குத் தொடர்பற்றவை என்பதால் எஞ்சிய சில கேள்வி- பதில்கள் தவிர்க்கப்பட்டன.

தங்களின் வருகைக்கு மிக்க்க்க்க்க்க்க நன்றி.

##############################################################