அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 14 மார்ச், 2014

நடிகர் சத்தியராஜின் ‘தேர்தல் நேரச் சிந்தனைகள்’!!!

2004 ஆம் ஆண்டில், நடிகர் சத்தியராஜ் ஆனந்த விகடனுக்கு [01.08.2004] அளித்த ஓர் அதிரடிப் பேட்டி இது. சற்றேனும் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் நடைபெறவுள்ள இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறேன்.


கேள்வி:
இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் ஓ.கே-வா?

பதில் [சத்தியராஜ்]:
காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க-னு பல கட்சிகள் மாறிமாறி ஆண்டு பார்த்தாச்சு. என்னத்தைக் கண்டோம்? இந்தியா முழுக்கக் கம்யூனிஸ்டுகள் கையில் கொடுத்துப் பார்த்தா என்னன்னு ஆசையா இருக்கு. இங்கே, சொத்து எல்லாம் குறிப்பிட்ட சிலரிடமே குவிஞ்சி கிடக்குது. எனக்கே தேவைக்கு அதிகமா சொத்து இருக்கு. இந்த நல்ல யோசனையை ஒரு பணக்காரனா இருந்துகிட்டே நான் சொல்றேன்.


கேள்வி:
அரசியலில் உங்களுக்கு யார் ‘ரோல் மாடல்’?

பதில்:
தமிழர்களின் அடையாளமான தந்தை பெரியார்தான். அவரைவிடப் பெரிய சிந்தனைவாதி யாருமில்லை. மேலும் என்னைக் கவர்ந்தவர் சிங்கப்பூரோட முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ. அவருக்கு முன்னாடி இருந்த சிங்கப்பூர் வேறு. பின்னாடி இருக்கிற சிங்கப்பூர் வேறு. நாட்டுக்கு நல்ல தலைமை இருந்தா ஒரு நாட்டை எப்படி வேண்டுமானாலும் மாத்தலாம். சிங்கப்பூரில் ஒன்னுமே கிடையாது. அது ஒரு குட்டித் தீவு. ‘எதை வெச்சி முன்னுக்கு வரலாம்?’னு யோசிச்சி, ‘வியாபாரச் சந்தையா மாத்தலாமே’ன்னு அவர்தான் முடிவு பண்ணினார். நமக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பாங்களான்னு தெரியல.


கேள்வி:
நடிகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா?

பதில்:
இது தானா வர்றது. நாங்க மகான்களோ, பெரிய மேதைகளோ, தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி பெரிய விஞ்ஞானிகளோ கிடையாது. எங்க படம் பிடிச்சதுன்னா ஒரு தடவைக்கு நாலு தடவை பாருங்க. நடிகன்ங்கிற நிலையைத் தாண்டி யாராவது ஒருத்தர் அதி மேதாவியாத் தெரிஞ்சா, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல்வாதியாத் தெரிஞ்சா ஏத்துக்குங்க. ஆனா, அவ்வளவு உங்களுக்கு நாங்க சிரமம் வைக்கிறதில்லையே [சிரிக்கிறார்]. உண்மையைச் சொல்லணும்னா, நடிகர் என்ற லெவலுக்கு மேலே எங்களை நீங்க யாரும் மதிக்க வேண்டியதில்லை.


கேள்வி:
குட்டிச் சாமியார் [அப்போது பிரபலமாக இருந்த ஒரு பொடிச் சாமியார்] விஷயம் பரபரப்பாகிட்டிருக்கு.....பார்த்தீங்களா?

பதில்:
எல்லாச் சாமியார்களும் காமெடியன்கள்தான் [அரசியல் தொடர்பும் வைத்திருக்கிறார்கள்]. அவர்களில் குட்டிச் சாமியார் பெரிய காமெடியன். கடவுள் நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. ஆனா, சாமியார்கள் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுதுன்னா என்ன அர்த்தம்? கடவுளை நம்பாமல் மக்கள் சாமியார்களை நம்புறாங்க. அப்படித்தானே? இது முட்டாள்தனம் இல்லையா? ஏதாவது ஒரு வடிவில் இந்த முட்டாள்தனம் இருந்துட்டே இருக்கு.


தலைப்புக்குத் தொடர்பற்றவை என்பதால் எஞ்சிய சில கேள்வி- பதில்கள் தவிர்க்கப்பட்டன.

தங்களின் வருகைக்கு மிக்க்க்க்க்க்க்க நன்றி.

##############################################################