எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 6 மே, 2018

பிரபஞ்சத்தின் ஆயுள்!!!

எப்போதோ வாசித்த ஒரு ஜோதிட நூலிலிருந்து[நூல் பெயர் நினைவில் இல்லை] சேகரித்த குறிப்பு கீழ்க்காண்பது. நம்புகிறீர்களோ இல்லையோ, சும்மா படித்துவையுங்கள்.

மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இருப்பது போலவே பிரம்மாவிற்கும்[பிரபஞ்சத்திற்கும்] ஆயுள் வரையறை உண்டு. இதை நம் முன்னோர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
தோற்றம் என்றிருந்தால் அழிவு நிச்சயம் உண்டு. பிரம்மாவும் இதற்கு விதிவிலக்கானவர்[பிரம்மா வெறும் படைப்புக் கடவுள்தானாம்; முழுமுதல் கடவுள் அல்லவாம்]அல்லர். 100 பிரம்ம ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் அவர் அழிந்துவிடுவார். அது போல், இந்தப் பிரபஞ்சமும் 100 பிரம்ம ஆண்டுகளுக்குப் பின்னர் முற்றிலுமாய் அழிந்துவிடுமாம்[ஒழியட்டும்]. 

பிரம்மாவின் ஆயுள் 100 பிரம்ம வருடங்கள். எனவே, பிரபஞ்சத்தின் ஆயுளும் 100 பிரம்ம ஆண்டுகள் என்றாகிறது[பிரம்மாவும் பிரபஞ்சமும் முதன்முதலில் தோன்றியது எப்போது என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம்].

ஒரு பிரம்ம வருடம் என்பது.....
                                                                               
864 கோடிx[பெருக்கல்]360x100=3.1104x1014[அடுக்குஆண்டுகள். இயலுமென்றால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

மரணமுற்ற பிரம்மா மீண்டும் உயிர்த்தெழுவார்...பிரபஞ்சமும்தான். இதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை என்கிறார் ஜோதிட நூலாசிரியர். அழிவுக்கும் தோற்றத்திற்குமான 'கால இடைவெளி' 100 ஆண்டுகள் என்றோ 100 யுகங்கள் என்றோ அனுமானிப்பது அவரவர் விருப்பம்போலும்!

படைப்பாளியாக இருந்தாலும் பிரம்மாவும் ஒரு கடவுள்தான். அவர் செத்துச் செத்துப் பிழைப்பவர் என்றால், முழுமுதல் கடவுள் மட்டும் இதிலிருந்து விலக்குப் பெற்றது எப்படி?