எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அழகர் வர்றாரு! அர்ச்சகர் சாமி கூடவே வர்றாரு!!


ஓ, கூமுட்டைகளே.....

“வர்றாரு... வர்றாரு... அழகர் வர்றாரு” என்பது காணொலித் தலைப்பு.

கள்ளழகர் தானாக நடந்து வரல; மனுசங்க நீங்க சுமந்து வர்றீங்க.

அழகரோடு இன்னொருத்தரும் வர்றாரே, அவரையும் ஏன் சுமக்கிறீங்க மக்களே?

அவர் தரையில் நடந்துவந்து தீபாராதனை காட்டினா அழகர் அங்கீகரிக்கமாட்டாரா?

பல்லக்கில் அவரே ஏறிக்கொண்டாரா, நீங்க ஏத்திவிட்டீங்களா?

அவர் அறிவுஜீவி ஆன்மிகர்; அர்ச்சகர். நீங்க கூமுட்டைகள்; கூடை கூடையாக மூடநம்பிக்கை சுமப்பவர்கள்.

ஆகவே.....

“நானும் சாமி பரம்பரைதான். ஏத்திவிடுங்கடா”ன்னு அவர் சொல்லியிருப்பாரு. ஏத்திவிட்டுட்டீங்க.

அந்தக் கல்லுச் சாமியோடு[சிலை] இந்தக் குண்டுச் சாமியையும் சுமக்கிறீங்க.

சுமந்தாத்தான் புண்ணியம் கிடைக்கும். செத்த பிறகு சொர்க்கலோகம் போகலாம்; சுகபோகத்தில் மிதக்கலாம்.

கூமுட்டைகளா, அலுங்காம குலுங்காம குண்டுச் சாமியைச் சுமந்துட்டுப் போய் அழகர் சாமியோடு வைகையில் குளிப்பாட்டுங்கடா!
                             *   *   *   *   *
குறிப்பு:
சில நாட்களுக்கு முன்பே இப்பதிவு வெளியாகியிருத்தல் வேண்டும். தாமதத்திற்கு வருந்துகிறேன்.