வெள்ளி, 24 ஏப்ரல், 2026

‘ஜால்முரி’ என்னும் கார உணவும் நம் பிரதமரின் அபார அறிவும்!!!

டந்த வாரம் ஜார்கிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு கடையில், வங்காளத்தில் பிரபலமான தெருவோர உணவான ஜால்முரி[jhalmuri] சாப்பிட்டாராம் நம் பிரதமர் மோடி.

அப்போது அவர், “நான் ஜால்முரி சாப்பிட்டதால், அதன் காரம்[ஜால்] திரிணாமுல் கட்சியைத் தாக்கியது; அதற்கு வலித்தது" என்று கூறி, மம்தா பானர்ஜியின் கட்சியைப் மறைமுகமாகச் சாடினாராம். இது ஒரு செய்தியாக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பூட்டியது என்பது செய்தி*

ஒரு கார உணவைச் சாப்பிடும்போது அதில் காரம் அதிகம் இருந்தால், சாப்பிடுபவருக்குப் பல கெடுதல்கள்[கார உணவு அளவோடு இருந்தால் நன்மைகள் விளைவதுண்டு] உண்டாகும்; காரம் காற்றில் பரவுவதால், சில நேரங்களில் அருகில் இருப்போருக்குத் தும்மல், இருமல், கண்களில் எரிச்சல் போன்ற மிக மிகக் குறைந்த அளவுப் பாதிப்புகளை மட்டுமே அது ஏற்படுத்தும்.

இது பிரதருக்குத் தெரியாததால்தான், தான் சாப்பிட்ட ‘ஜால்முரி’யின் காரம் திரிணாமுல் காங்கிரஸை[மம்தா கட்சி]ப் பாதித்துவிட்டதாகக் கிண்டலடித்திருக்கிறார்.

ஒரு மிகச் சாதாரணமானதும் ‘அல்ப’மானதுமான விசயம், ஒரு பெரிய நாட்டை ஆளுகிற நம் பிரதமர் மோடிக்குத் தெரியவில்லையே என்று யாரும் எள்ளி நகையாட வேண்டாம். ஏனென்றால்.....

அவர் ‘நம்’ பிரதமர்!

*https://www.msn.com/en-in/news/india/i-ate-jhalmuri-but-trinamool-felt-the-sting-pm-modi-in-bengal/ar-AA21xlgR?ocid=msedgdhp&pc=NMTS&cvid=69ea109c37e74f3daf8b9615c2bea882&ei=18மோடி