எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 11 ஜூலை, 2019

ஒரே அறையில் கடவுளும் கிரிக்கெட் வீரர்களும்!!!

’ரவுண்ட் ராபின்[கிரிக்கெட்] பிரிவு ஆட்டத்தில், இந்தியாவுடன் மோதிய இங்கிலாந்து வெற்றிக் கனி பறித்ததற்குக் காரணம் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த அதே அறையில் கடவுளும் தங்கியிருந்ததுதான் என்றும், இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோத நேர்ந்தால் இந்தியா வெற்றி ஈட்டக் கடவுள் உதவுவார் என்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொன்னதாகச் செய்தி பரவியுள்ளது.

நேற்று[10.07.2019] நடந்த ஆட்டத்தில்[செமி ஃபைனல்] நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுவிட்டது. 

இந்த ஆட்டத்திலான வெற்றிக்குக் கடவுள் உதவியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

இதற்கு முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெற்றதற்கும், நியூசிலாந்திடம் தோற்றதற்கும் கடவுளைத் தொடர்புபடுத்தாத சாஸ்திரி இறுதி ஆட்டத்தில் மட்டும் அவர் உதவுவார் என்று சொன்னது எப்படி?

லட்சக்கணக்கிலான உயிர்களும் மனிதர்களும் கொடிய நோய்களாலும், வறுமையாலும் இன்னபிற காரணங்களாலும் நொந்து மடிந்துகொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாத கடவுள், கிரிக்கெட் அணியினருடன் ஓர் அறையில் தங்கியிருந்து உதவினாராம். 

வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் முழுக்கவனம் செலுத்தாமல், இப்படியெல்லாம் இந்த ஆள் உளறிக்கொண்டிருந்தால் இந்திய அணி தோற்பது தொடர்கதை ஆகிவிடும். இது உறுதி.