கதை அனுப்பி 100 நாட்கள் ஆகியும் பிரசுரம் ஆகவில்லை[இப்போதெல்லாம் பத்திரிகைக்காரங்க கதையைத் திருப்பி அனுப்புவதில்லை]. பலமுறை முயன்று தொ.பே.யில் ஆசிரியருடன் தொடர்பு பெற்று, கதையின் பெயரைச் சொல்லி, “கதையை நிராகரிச்சிட்டீங்களா? ரொம்ப வித்தியாசமான படைப்பா தோணலையா?” என்றேன். “இப்படியெல்லாமா நடக்கும்? வாசகனை முட்டாள் ஆக்குற கதை” என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரியர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பதிவுக்கு ‘Moderation' இல்லை. விரும்பினால், மனம் திறந்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வருத்தப்பட மாட்டேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பதிவுக்கு ‘Moderation' இல்லை. விரும்பினால், மனம் திறந்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வருத்தப்பட மாட்டேன்.
கதைத் தலைப்பு: புதிய பாதை
“வாங்க......வாங்க.” கை கூப்பி வரவேற்றார் அருணகிரி.
புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர் மாசிலாமணி; அருணகிரிக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தம்..
“உட்காருங்க.”
மஞ்சள் பையிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அருணகிரியிடம் நீட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் மாசிலாமணி.
அதில் பார்வையை ஓடவிட்ட அருணகிரி, “என்னங்க இது, ‘மகளின் மூன்றாம் ஆண்டு திருமண நிறைவு விழா’ன்னு போட்டிருக்கீங்க! உங்க மகளுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் முடிஞ்சிருக்கு, சரி. இதுக்குப் போயி யாராவது பத்திரிகை அடிச்சி விழா கொண்டாடுவாங்களா? இதெல்லாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தார் மட்டும் வீட்டோடு கொண்டாடுறதில்லையா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
“சம்பந்தி வீட்டார் சம்மதத்தோட, ரொம்ப நெருக்கமான, கொஞ்சமே கொஞ்சம் சொந்த பந்தங்களை மட்டும் அழைச்சி, இந்தக் கல்யாணத்தைக் கோயிலில் சிக்கனமா நடத்தி முடிச்சேன்......”
குறுக்கிட்டார் அருணகிரி. “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சொல்றேன். இப்பெல்லாம், கல்யாணம் முடிஞ்ச சூட்டோடு ரொம்பப்பேர் விவாகரத்துப் பண்ணிடுறாங்களாம். கணக்குப் பார்க்காம செலவு பண்ணினவங்கெல்லாம் தலையில் முக்காடு போட்டுட்டு முடங்கிக் கிடக்குறாங்க. அதனாலதான், நானும் சம்பந்தியும் செலவை ரொம்ப மட்டுப்படுத்தினோம்.”
“சொல்லுங்க.”
“என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆயிடிச்சி. சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் இருந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க. ஒரு வாரிசும் இருக்கு. இனி, குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏதும் தலையெடுக்காதுன்னு நம்பிக்கை வந்திடிச்சி.”
சிறிது இடைவெளி கொடுத்துச் சொன்னார் மாசிலாமணி. “ ஆயிரக் கணக்கில் பத்திரிகை அடிச்சி, சொந்தபந்தம், அக்கம்பக்கம், அறிமுகம் ஆனவங்க ஆகாதவங்கன்னு பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கோலாகலமா கல்யாணத்தை நடத்தாம, கமுக்கமா நடத்திட்டமேன்னு சம்பந்தி வீட்டாருக்கும் என் வீட்டார்க்கும் மனக்குறை இருந்திச்சி. அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் மூன்றாண்டு நிறைவு விழா."
சொல்லி முடித்து, “விழாவுக்கு எல்லாரும் அவசியம் வந்துடுங்க” என்றார்விழாவை விமரிசையா நடத்துறோம்” என்றார் மாசிலாமணி.
“புத்திசாலிதனமா நீங்க நடத்துற இந்தப் புதுமையான விழாவுக்கு வராமல் இருப்போமா?” சிரித்துக்கொண்டே சொன்னார் அருணகிரி.
##########################################################################################################
