எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 6 நவம்பர், 2024

நீங்கள் மனிதரா மிருகமா?!

கீழ்வரும் காணொலியை முழுவதும் பாருங்கள்.

பார்க்க முடிந்தவர்கள் எதையும் தாங்கும் மன வலிமை வாய்க்கப் பெற்றவர்கள்.

பார்த்து முடித்த பிறகு, தேடுபொறியில் ‘வேட்டையாடும் விலங்குகள்’, 'hunting animals and killing'  என்பன போன்ற தலைப்புகளை உள்ளிட்டால், இது போன்ற ஏராளமான குலைநடுங்கச் செய்யும் கொடூரக் காணொலி நிகழ்வுகளை[பக்கவாட்டில் வரிசைகட்டுபவை உட்பட]க் காணலாம்[பொறாமை, சூதுவாது, வஞ்சகம், ஆதிக்க வெறி என்று ஏராளமான தீய குணங்களின் இருப்பிடமான மனிதர் வாழ்வில் இடம்பெறும் பயங்கர நிகழ்வுகள் கற்பனைக்கு எட்டாதவை].

அவற்றைக் கண்டு  கல்நெஞ்சக்காரர்களும் கதிகலங்குவார்கள்; மனம் பதறுவார்கள். காணுகிற அத்தனைப் பேரின் நிலையும் இதுதான்.

விளைவு.....

அவர்கள், கருணை வடிவானவன் என்று கதைக்கப்படும் கடவுள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழப்பார்கள்[உயிர்கள் சித்ரவதைக்கு உள்ளாகக் காரணம் அவை செய்த பாவங்கள் என்பவர்கள் படு அயோக்கியர்கள். பாவம் செய்யத் தூண்டுபவர் யார் என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை].

நம்பிக்கை இழக்காமல், ஆகச் சிறந்த பக்தராகக் கோயில் கோயிலாக ஒருவர்  அலைவாரேயானால்.....

அவர் மனித உருவில் நடமாடும் மனசாட்சியே இல்லாத மிருகம் ஆவார்.

நான் மிருகம்[கடவுள் மறுப்பாளன் என்பதெல்லாம் வெளி வேடம்!]

நீங்கள் மனிதரா மிருகமா?!

“பசுத் தொழுவத்தில் படுத்து ‘அதை’ச் செய்தால்...” -‘பாஜக’ அமைச்சர்!

கீழ்வரும் நகல் பதிவு  ‘தினத்தந்தி’ நாளிதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் எங்குத் தேடினாலும் ‘பாஜக’வினரைப் போன்ற முட்டாள்ளைக் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.

நல்லவேளை, “தினமும் பசுத் தொழுவத்தில் ஆணும் பெண்ணுமாய்ப் படுத்து அந்தரங்கச் சுகம் அனுபவித்தால், புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்தவொரு நோயும் குணமாகிவிடும்”[ஹி... ஹி... ஹி!!!] என்று உளறிவைக்கவில்லை!

‘பாஜக’காரர்கள் பசுவைப் புனிதமானதாக்கி[கோமாதா] நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. 

மக்கள் நினைத்தால் அனைத்துத் தேர்தல்களிலும் பாடம் கற்பித்து இவர்களைத் திருத்தலாம்.

செய்வார்களா?