எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 6 நவம்பர், 2024

“பசுத் தொழுவத்தில் படுத்து ‘அதை’ச் செய்தால்...” -‘பாஜக’ அமைச்சர்!

கீழ்வரும் நகல் பதிவு  ‘தினத்தந்தி’ நாளிதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் எங்குத் தேடினாலும் ‘பாஜக’வினரைப் போன்ற முட்டாள்ளைக் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.

நல்லவேளை, “தினமும் பசுத் தொழுவத்தில் ஆணும் பெண்ணுமாய்ப் படுத்து அந்தரங்கச் சுகம் அனுபவித்தால், புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்தவொரு நோயும் குணமாகிவிடும்”[ஹி... ஹி... ஹி!!!] என்று உளறிவைக்கவில்லை!

‘பாஜக’காரர்கள் பசுவைப் புனிதமானதாக்கி[கோமாதா] நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. 

மக்கள் நினைத்தால் அனைத்துத் தேர்தல்களிலும் பாடம் கற்பித்து இவர்களைத் திருத்தலாம்.

செய்வார்களா?