எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 1 ஏப்ரல், 2017

“தலாக்...தலாக்...தலாக்” - மூன்று முறை..........

* ‘ஏசுநாதர், சிலுவையில் அறையப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்தெழுந்தார்’ என்கிறது கிறித்தவ மதம்//ஆதிகால கிறிஸ்தவர்கள் "இயேசு  சிலுவை மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுந்தார்" என்று எழுதினர். அவர்கள் அவரை கண்டதாக மட்டும் எழுதவில்லை, அவருடன் உண்டதாகவும், அவரை தொட்டதாகவும் அவருடன் 40 நாட்கள் செலவிட்டதாகவும் எழுதினர்.
 - ivaryaar.blogspot.com/2013/02/blog-post_16.html //

விவாகரத்துக்கு, மூன்று முறை “தலாக்” சொல்ல வேண்டும்என்கிறது இஸ்லாம் மதம்.

* யுகங்கள் ‘நான்கு’ என்கிறது இந்துமதம்.

* கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டி ருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]

* ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது இஸ்லாம். ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டன 
என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches that God created "the heavens and the earth" in six days.]

மூன்று, நான்கு, ஆறு, ஏழு என்றிவ்வாறெல்லாம் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது எப்படி...எப்படி?

எதையெதையோ தேடிப் படித்தும் என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை!

உங்களுக்கு?
===============================================================================