இந்தப் பதிவு அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும். பிடிக்காத பெரும்பாலான பெண்கள் எப்படி வேணுன்னாலும் என்னைத் திட்டலாம். அவர்களுக்காகவே 'கருத்துப் பெட்டி'யைத் திறந்து வைத்திருக்கிறேன். நன்றி.
“மல்லிகா, எங்கடி போய்ட்டு வர்றே?”
வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.
“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.
“இல்ல, அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைக் குளியலறையிலிருந்து கேட்டேன்."
மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.
“புருஷனைத் தவிர வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”
“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ‘அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” - அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.
மனதைத் தேற்றிக்கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு. சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன். நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. உனக்குன்னு புருசன் இருக்கான். அவன், 'அது' விசயத்திலும் உன்னைத் திருப்திபடுத்த நினைக்கிற நல்ல ஆம்பிளைன்னு நான் நம்புறேன். இருந்தும், அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே நீ. இதோ பாருடி.... மற்றதில் எப்படியோ, ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்.....வேணும் வேணும்’னு திணவெடுத்துத்[திணவு-செறிவு; தினவு-சொறிதல்] திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா.”
“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.
=================================================================================
கருவில் சற்றே திருத்தம் செய்யப்பட்ட பதிவு.
கருவில் சற்றே திருத்தம் செய்யப்பட்ட பதிவு.
