உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை வலுப்படுத்தினாலும், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்திருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய ஆண்களிடமிருந்து அவள்[அவர்கள்] தன்னை[தங்களை]ப் பாதுகாத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.
அப்பட்டமான ஓர் உண்மை.....
ஒரு சராசரி ஆணின் உடம்பைக் காட்டிலும் ஒரு பெண்ணின் உடம்பு[குறிப்பாக மார்பகங்கள், அடிவயிறு இன்ன பிற] மிக மிக மென்மையானது; உணர்ச்சி நரம்புகளால் கட்டமைக்கப்பட்டது. அவளின் அங்கங்கள் ஆடவனால் தீண்டப்படும்போது[தற்செயலாகவோ வலிந்தோ], உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையாகப் போராடுவது தவிர்க்க இயலாதது; எதிரியை எதிர்த்துப் போராடி வெல்வது கடினமாகிறது.
இக்காரணத்தால்தான், மிகக் கடுமையான பாதுகாப்புப் பணிகளுக்கு ஆடவர் குழுப் படைகள் அனுப்பப்படுகின்றன.
எனவே, பெண்களுக்கான பாதுகாப்பை ஆண்களால் ஆன படைதான் சிறப்பாகச் செய்திட முடியும் என்பதால், சிங்கப்பெண் அதிரடிப் படை, சிறுத்தைப்பெண் அதிரடிப் படை அமைப்பதெல்லாம் வெற்று ஆரவார நடவடிக்கைள் மட்டுமே.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில், "பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படைக்குப் பாதுகாப்பு வழங்க, இன்னொரு புதிய பாதுகாப்புப் படை தேவை” என்று நக்கலடித்தது நினைவுகூரத்தக்கது!

