எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இவர்கள் 99.99% முட்டாள்கள்! இவர்களைப் படைத்தவன் 100% முட்டாள்!!

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் கிழக்குக் கோபுரத்தின் மேல் பகுதியில் காரை பெயர்ந்து விழுந்துவிட்டதாம்.

நேற்றைய செய்தித்தாள்களில் சில[தினத்தந்தி, மாலைமலர், ஒன் இண்டியா இத்தியாதி] பக்தக்கோடிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்தி வெளியிட்டன.

கோயில் கோபுரக் காரை உதிர்ந்த தகவல் அறிந்ததும், அடுத்த சில நிமிடங்களிலேயே, சம்பந்தப்பட்ட நிருபர் அங்குச் சென்று பார்த்து, தன் பத்திரிகைக்குத் தகவல் அனுப்புகிறார்[செய்தி அளிப்பதில் பின்தங்கினால் பத்திரிகை விற்பனை பாதிக்கும்].

செய்தியைச் சுமந்து, விற்பனை செய்யும் கடைகளுக்கு வருகிறது பத்திரிகை. இது நடைமுறை.

குறுகிய அவகாசத்தில், பக்தச்சிரோமணிகள் அதிர்ச்சிக்குள்ளானது[அடியேனைப் போன்ற நாசகார நாத்திகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பர்] இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

ஆளாளுக்கு அடித்துவிடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ‘தினப்புளுகன்’ ஆன தினமலர்க்காரர், ஓர் அறிவுஜீவியைப் பேட்டி கண்டு[‘பாஜக’ தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியாம். பெயர் மச்சேந்திரனாம்] அமங்கலச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது.....

//ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரம் மேல்பகுதி பெயர்ந்து விழுவது, ஆட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும்[ஒப்புக்கு நடுவண் ஆட்சியைச் சேர்த்திருக்கிறார்] நல்லது அல்ல. துர்நிகழ்வாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்//

கோயில் கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கட்டியவர் சர்வ வல்லமை படைத்தவரும், சகலவிதமான வசதிகளைத் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டவரும் ஆன அருள்மிகு ரங்கநாத சுவாமிகள் அல்ல.

அவர் நினைத்திருந்தால், யுகயுகாந்தரம் உள்ளளவும் சின்னஞ்சிறு சேதம்கூட ஏற்படாத வகையில் தனக்கான அந்தக் கோயிலைப் பத்தரைமாற்றுத் தங்கத்தால் கட்டியிருக்கலாம்.


அவர் அதைச் செய்யவில்லை[காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்].

குறை அறிவுள்ள அற்ப மானிடர்களால் கட்டப்பட்டது அந்தக் கோயில்.

எத்தனைப் பெரிய தொழிநுட்பம் கற்றவன் கட்டினாலும் காலப்போக்கில் அது சிதிலம் அடையத்தான் செய்யும்.

ஐந்தறிவுக்கும் மேலாக, 001% ஆறாம் அறிவு வாய்க்கப் பெற்றவன்கூட இந்த உண்மையைப் புரிந்துகொள்வான்.

இந்த நிகழ்வு ஆட்சியாளர்களுக்கு நல்லது அல்ல என்று சொல்லும் மாமூடன் மாமூடர் மச்சேந்திரனுக்கும், அடிமூடன் அடிமூடர் தினமலர்க்காரருக்கும் புரியாமல் போனது எப்படி?

இவர்களுக்குப் புரியாமலில்லை.

புரிந்துகொண்டே பொய் நம்பிக்கைகளைப் பரப்புவதன் உள்நோக்கம் திராவிடக் கட்சி ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்ல.....

மக்கள் முட்டாள்களாகவே இருந்தால்தான் இவர்களின் வசதியான வாழ்க்கைக்குப் பங்கம் நேராது என்னும் சுயநலமும்தான்!

* * * * *

https://m.dinamalar.com/detail.php?id=3396263

'அவன்’... இருபது வயதில் இத்தனைக் காமமா?!

 எச்சரிக்கை!

கீழ்க்காண்பது, என் மிக மிக நெருங்கிய நண்பனுக்கான மறக்க முடியாத வாழ்க்கை அனுபவங்களில் ஒன்று.

தன் பெயரை அவன் வெளியிட விரும்பாததால், ‘அவன்’ என்னும் சுட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்போதெல்லாம் அவன் இம்மாதிரியான அனுபவத்தை என்னுடன் பகிர்கிறானோ[வலைப்பதிவு எழுதுவதில் அவனுக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை] அப்போதெல்லாம் அது இங்குப் பதிவு செய்யப்படும்.

சாமானியனான அவனின் அனுபவங்கள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் என்பது என் நம்பிக்கை.

                                         *   *   *   *   *

ள்ளிப் படிப்பு முடிக்கும்வரை வகுப்பில் பெரும்பாலும் முதல் மாணவனாகவே ‘அவன்’ இருந்தான்.

பல பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கினான்.

பள்ளி நாடகங்களில் மட்டுமல்லாமல், குழு சேர்த்துத் தன் சொந்த ஊரிலும் நாடகங்கள் நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறான்.

ஆசிரியர்களின் மதிப்பீட்டில் மிக நல்ல ‘புத்திசாலி’ மாணவன் அவன்.

அவனின் அம்மாவின் முன்னிலையில், “உன் மகன் ரொம்பப் புத்திசாலி” என்று யாராவது பாராட்டினால், “நான் இவனுக்கு ரெண்டு வயசு முடியறவரைக்கும் பால்[தாய்ப்பால்] கொடுத்தேனாக்கும்” என்று பெருமை பீத்திக்கொள்வாராம் அவர்.

“அதி புத்திசாலியாக இருப்பவர்களுக்குக் காம உணர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்பார்கள். அது என் விசயத்தில் முழு உண்மை என்பது நான் கல்லூரியில் சேர்ந்து கொஞ்ச காலம் ஆனபோது தெரிந்தது” என்று என்னிடம் சொல்லி, அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் விவரித்தான் நண்பன்[இம்மாதிரி அனுபவன் ஏராளம் இருப்பதாகவும், அவ்வப்போது சொல்வதாகவும் சொன்னான்].

“பேருந்துப் பயணங்களின்போது, அழகான பெண்ணைப் பார்த்தால், அவளை ரசிப்பதற்கு ஏற்ற வசதியான இருக்கையில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டே பயணிப்பதில் எனக்கு ரொம்பவே விருப்பம்.


சில தடவைகள், நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்குப் பதிலாக என்னால் ரசிக்கப்பட்டவளோடு சேர்ந்து இறங்கியதுண்டு.

அப்படிப்பட்டது இப்போது நான் சொல்லும் சம்பவம்.

அப்போது பட்டவகுப்பு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருந்தது.

அன்று கடைசித் தேர்வு. 

நகரப் பேருந்தில் தேர்வு மையத்திகுச் சென்றபோது, என் கெட்ட நேரமோ என்னவோ, பேருந்தில் வேறு இடமில்லாததால், எனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள் ஒரு இளம் வயதுப் பெண்.

அவள் மிக அழகாக இருந்தாள். கட்டான உடலுடன் அப்பட்டமாகக் கவர்ச்சி தெரியும் வகையில் உடையுடுத்தியும் இருந்தாள்.

நான் வகைதொகையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.

தற்செயலாக நிகழ்வதுபோல் அவளின் பக்க மார்பில் உரச வேண்டும்போலிருந்தது. ஆனால், கட்டுப்பாடான நல்ல குடும்பத்துப் பையன் என்பதால்... அதுதான் உனக்குத் தெரியுமே... ஆசையை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

பேருந்திலிருந்து இறங்கியபோதுதான், எனக்கு அவளுடனான அந்தப் பயணத்தால் எத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டது என்பது புரிந்தது.

அவளுடன் நான் இறங்கிய இடம் தேர்வு மையத்தைக் கடந்து பல நிறுத்தங்களுக்கு அப்பால்.

அரை மணி நேரம் முன்னதாகவே நான் தேர்வு மையத்தில் நுழைந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. எழுதத் தவறிய அந்தத் தேர்வை அடுத்த ஆண்டுதான் எழுதினேன்.

இதனால், நான் பட்டதாரி ஆவது ஓராண்டு தள்ளிப்போனது.

வாலிப வயதில் பெண்ணைப் பார்க்கும்போது காம உணர்ச்சிக்கு உள்ளாவது இயல்புதான். ஆனால், நான் அது விசயத்தில் எத்தனைப் பலவீனமானவன் என்பதை அன்று உணர்ந்தேன்; பெரிதும் கலங்கிப்போனேன்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டுத் தவிப்பது அப்புறமும் தொடர்ந்தது. அதனால் நான் பட்ட வேதனை கொஞ்சநஞ்சமல்ல.....”

சொல்லி நிறுத்திய என் தோழன், “இன்னிக்கி இது போதும். இனியும் சொல்லுவேன்” என்று சொல்லி விடை பெற்றான். 

                                          *   *   *   *   *

முக்கியக் குறிப்பு:

நண்பனின் அனுபவம் வெளியாகும்போதெல்லாம் தலைப்பில் ‘அவன்’ என்னும் சுட்டுச் சொல்லும் தவறாமல் இடம்பெறும்.