பெரும் எண்ணிக்கையில் மக்களின் உயிர் பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது ‘மாரடைப்பு’[நோய்].
பகல் நேரங்களில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் குணமடைய நிறையவே வாய்ப்புள்ளது.
இந்நோய் அறிகுறியே இல்லாமல் தாக்குவதும் உண்டு. அதை ‘அறிகுறியற்ற மாரடைப்பு’[silent heart attack> A silent heart attack doesn’t have typical symptoms of a heart attack. Symptoms normally unrelated to a heart attack(or no symptoms at all) can make it hard to identify a silent heart attack. But it still causes damage like any other heart attack. People often don’t know they’ve had a silent heart attack until weeks or months later> https://my.clevelandclinic.org/health/diseases/21630-silent-heart-attack] என்கிறார்கள்[இது பலரும் அறிந்ததே].
இதன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளே. பகல் நேரமாயின் ஓரளவுக்கேனும் இதன் தாக்குதலை உணர்ந்து மருத்துவரை அணுகலாம். இரவில் உறங்கிக்கொண்டிருந்தால், தாக்குதலை அறியும் வாய்ப்பில்லாமல உயிரிழக்க நேரிடலாம்.
தாகுதலை உணர்ந்தாலும்கூட அந்த நேரத்தில் அவசரக்காலச் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இதைத் தடுப்பதற்கு, செலவே இல்லாத எளியதொரு வழி உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.*
உறக்கம் வரும்வரை மூச்சுப் பயிற்சியைத் தொடரலாம். இதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கும் வழிவகுப்பதுண்டு.
அன்றாடச் சுவாசப் பயிற்சி ரத்தக் குழாய்களில்[கரோனரி தமனி] அடைப்போ சிதைவோ உருவாவதைத் தடுக்கிறது[இப்பயிற்சியால் மன அழுத்தம் குறைதல், நினைவாற்றல் மேம்படுதல், நுரையீரல் வலுவடைதல், இரத்த ஓட்டம் சீரடைதல், உடலின் கழிவுகள் வெளியேறுதல் என்றிப்படிப் பல நன்மைகளைப் பெறலாம்.
ஒருவர் இருதய நோயாளி அல்ல என்றாலும், நாள்தோறும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதால் வேறு பல நன்மைகளும் உள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
* * * * *

