திங்கள், 29 ஜூன், 2026

அடிவயிற்றில்[குடல் பகுதி] அதிக அளவில் மலம் தேங்கினால்.....?

 இது 53 வயதான ஆஸ்திரேலிய நபர் ஒருவரின் எக்ஸ்-ரே(X-ray) படம். 

கால்கள் செயலிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, ​​அவரது கால்கள் உணர்ச்சியற்றும் குளிர்ந்த நிலையிலும் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நோயைக் கண்டறிய எக்ஸ்-ரே எடுத்தபோது, ​​அவரது குடலில் பெருமளவில் மலம் தேங்கியிருப்பது தெரியவந்தது. 

அதனால், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான உள்-அழுத்தம்['அப்டாமினல் கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்'> ACS] காரணமாக அவரது உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கடுமையான வலியும் கால்கள் செயலிழப்பும் உண்டாயின. கால்களுக்கு ரத்தத்தை விநியோகிக்கும் தமனி அழுத்தப்பட்டதால், அவரது கால்களுக்குத் தேவையான ரத்தம் கிடைக்கவில்லை.....

.....கால்கள் செயலிழந்தது மட்டுமின்றி, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தத்தால் தேங்கியிருந்த மலம் அவரது சிறுநீரகங்களையும் பாதித்தது’.

மலம் இயற்கையாக வெளியேறாத நிலையில், அறுவைச் சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக அமைந்தது. 

மொத்தம் 2 லிட்டர் அளவுள்ள மலம் அகற்றப்பட்டது. அவர் மீண்டும் நடக்கும் நிலையை அடைய, தீவிரச் சிகிச்சைப் பிரிவில்(ICU) 4 நாட்களும், அதன்பின் குணமடைய மேலும் 13 நாட்களும் தேவைப்பட்டன. 

அந்த நோயாளி குறைந்தது ஒரு மாதம்[இரண்டு நாட்களைக் கடந்தாலே மலம் கெட்டுவிட வாய்ப்புள்ளது] மலம் கழிக்காமல் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் மதிப்பிட்டனர்.

                                            ==================

https://www.quora.com/?qv_src=email

ஞாயிறு, 28 ஜூன், 2026

‘திருமா’ என்னும் தன்மானத் தமிழா, நீயுமா தமிழினத் துரோகி ஆனாய்!?!?!

//தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்டுள்ள ‘வெங்கட நாராயணா’வுக்கு, மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசுப் பொறுப்பு என்பதுடன், மத்திய & மாநில அரசுகளுக்கிடையிலான உறவைச் சுமுகமான முறையில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது// -இது செய்தி.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தடையற்ற தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கான திட்டங்கள் & நிதிகளை விரைந்து பெற்றிட மத்திய அமைச்சகங்களை அணுகவும் இந்த நியமனம் மிக முக்கியமானது ஆகும்.

இருப்பினும், வெங்கட நாராயணா வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவருக்குத் தமிழே தெரியாத நிலையில் அவர் எப்படித் தமிழ் நாட்டின் நலன் சார்ந்து மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன் வைப்பார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில்.....

‘விசிக’ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்தபோது.....

“இந்த நியமனம் என்பது முதல்வரின் உரிமைக்குட்பட்டது” என்று சொல்ல ஆரம்பித்து, இது அரசின் பொறுப்புதான் என்றாலும், அந்தப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதால், அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றும், முதல்வர் அவரது நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், இதனால் நிர்வாகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி முடித்திருக்கிறார்[அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை ‘மேற்கோள்’ஆக்கியிருக்கிறார்].

தன்னைத் தன்மானமுள்ள தமிழனாக எண்ணித் தலைநிமிர்ந்து வலம் வந்த சிறுத்தைகள் தலைவன் திருமாவளவன், ஜோசப் பிச்சையாகப் போட்ட ஒரேயொரு அமைச்சர் பதவிக்காகக் குப்புறக் கவிழ்ந்தது நம்மைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகியிருக்கிறது.

இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றால், இதற்கு எதற்கு ஓர் அமைச்சருக்கான அந்தஸ்து?

இதற்குத் தமிழ் தெரியாத ஒரு நபரைத் தேடிப் பிடிப்பது அவசியமா?

வெங்கட நாராயணா ஜோசப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றால், இங்கு அவர் கட்சியில்[தவெக] உள்ளவர்கள் அத்தனைப் பேரும் நம்பத் தகாதவர்களா?

இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். திருமாவளவனாருக்குக் கேட்கத் தோன்றாததற்கு, ஜோசப் போட்ட பதவி[வன்னியரசுக்கு]ப் பிச்சையே காரணம்[‘திமுக’கூட்டணியில் பதவி கிடைக்கவில்லை என்னும் விரக்தியும் காரணமோ?] என்பதால் கேட்க விரும்பவில்லை.

வளவனாரே, இத்தனைக் காலமும் உங்களைத் தன்மானமுள்ள தமிழினத் தலைவர்களுள் ஒருவர் என்று நினைத்தோம். அது எத்தனைப் பெரிய முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது.

நன்றி தலைவரே! 

https://www.nakkheeran.in/24-by-7-news/appointment-of-the-tamil-nadu-governments-special-representative-in-delhi-thirumavalavan-12113897

கட்டிப்பிடித்துக் குஷிப்படுத்திய கவர்ச்சி நடிகைகளுக்குப் பதவி எப்போது ஜோசப்?

//“வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. ஆந்திர மாநிலத்தவர்.  முதல்வருக்கும் அரசுக்கும் மிகவும் நம்பகமான & தகுதியான நபர் என்பதால் இந்த வாய்ப்பு[டெல்லிக்கான தமிழ்நாடு அரசுப் பிரதிநிதி> அமைச்சர் பதவிக்கு இணையானது] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்// என்பது ஊடகச் செய்தி.

அமைச்சரின் விளக்கம் 100% ஏற்கத்தக்கதே.
கர்னாடகத்தவரோ, ஆந்திரத் தெலுங்கரோ, அயல்நாட்டுக்காரரோ தன் நம்பிக்கைக்குரிய[பல வகையிலும் உதவி செய்பவர்] ஒரு நபருக்கு, அமைச்சருக்கு நிகரான பதவியை ஜோசப் வழங்கியிருக்கிறார்.

பதவி பெற்றவர் தமிழரல்ல என்று ஜோசப் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை மறந்துவிட்ட கிணற்றுத் தவளைகள் அவர்கள்.

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகிப்பவர் ஜோசப். ஐந்தாண்டுக் காலம் ஆளப்போகிறவரும் அவரே. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் வெங்கட நாராயணா. நன்றிக் கடனாக இவரை டெல்லிக்கான அரசுப் பிரதிநிதி ஆக்கியிருக்கிறார் நம் முதல்வர்.

இவரை உதவி முதலமைச்சர் ஆக்கியிருத்தல் வேண்டும்; மாபெரும் தவறு செய்துவிட்டார் அவர்.

அரசியல் ரீதியாக என்றில்லை; திரைப்படத்துறையில் கதாநாயகனாகிப் பெரும் புகழ் ஈட்ட உதவியவர்களும் நம் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்களே.

திரைப்படங்களில் நாயகன் ஜோசப் அவர்களைக் கட்டியணைத்து உருண்டு புரண்டு உற்சாகப்படுத்திய கவர்ச்சி நடிகைகளும்கூட{அவர்கள் அதைச் செய்திராவிட்டால் பிரபல நடிகராகி, இன்றைய முதல்வராகவும் உயர்ந்திருக்க வாய்ப்பில்லை] அவரின் நம்பிக்கைக்கும் நன்றிக்கும் பாத்தியப்பட்டவர்கள்தான்.

நன்றிக்குரிய அவர்களில்[ஆந்திரத்து அழகிகளோ, கன்னடத்துக் கிளிகளோ, கேரளத்துக் குட்டிகளோ] ஒருவருக்கோ சிலருக்கோ அமைச்சர் பதவி அளித்து, அவர்களைப் பெருமைப்படுத்துவார் நம் முதல்வர் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.

பதவி பெறும் அந்த நடிகை யார், அல்லது நடிகைகள் யாவர் என்பதை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம்!

சனி, 27 ஜூன், 2026

'கே.பாக்கியராஜ் மரணம்'... நிறைய வருத்தம்! கொஞ்சம் மகிழ்ச்சி!

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ்(வயது 73) மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று காலமானார்[ஊடகச் செய்தி].

இன்னும் பல ஆண்டுகள் இவர் வாழ்ந்திருந்தால், திரைப்படங்கள் வாயிலாக வாழ்க்கைக்குப் பயன்படும் பல அரிய சிறந்த கருத்துக்களை நமக்கெல்லாம் நல்கியிருப்பார் என்பது உறுதி.

இவரின் மறைவு பெரிதும் வருந்துதற்குரியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

மரணித்தல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது; வாழும்  ஆயுட்காலம் முன்பின்னாக அமையலாம். 

விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

கொடிய நோய்களுக்கு ஆளாகி, கட்டிலில் முடங்கிக் கிடந்து, சிறுநீர் பெய்து மலம் கழித்து, மனம் வெந்து நொந்து மரணத்தைத் தழுவுவது போன்றதொரு வேதனை வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

உடல்நலம் சீராக இருந்து அன்றாடக் கடமைகளில் ஈடுபடும்போதோ, ஆழ்ந்த உறக்கத்திலோ எதிர்பாராமல் செத்துப்போனால், அதை ‘நல்ல சாவு’ என்பார்கள்.

‘திடீர் மாரடைப்பு[cardiac arrest] பாக்கியராஜ் அவர்களின் ‘நல்ல சாவுக்கு’[நடைப் பயிற்சி முடிந்து ‘கை பேசியில்’ உரையாடும்போது மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார் என்பது செய்தி] உதவியிருக்கிறது.

இது, மிகுந்த வருத்தத்திற்கிடையே, விரும்பத்தக்கதும் சிறிதேனும் மகிழத்தக்கதுமான ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.

வெள்ளி, 26 ஜூன், 2026

முழுமுதல் கடவுள் ஆனார் முதல்வர் ஜோசப்!!!

[குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அடுத்தடுத்துப் பதிவுகள் எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்]
டவுள் என்று ஒருவர் இருப்பதை ஐம்புலன்களாலும் ஆறாவது அறிவாலும் எவரும் உணர்ந்ததில்லை; உணர்த்தியதும் இல்லை.

ஆனாலும் ‘அவரொருவர் இருப்பதாக மக்கள் அன்று நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள். 

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஜோசப் விஜய்தான் அந்தக் கடவுள்[மாரியம்மன் சிலையைத் தூக்கிக் கடாசியிருக்கலாம்] என்பதை, ஒட்டுமொத்த உலகமும் அறிந்து உணரச் செய்த, நாமக்கல் ‘த,வெ.க.’வினருக்கு நம் கோடானுகோடி நன்றிகள்.

ஊர் தவறாமல் பெரிய பெரிய கோயில்கள் எழுப்பி, ஜோசப் கடவுளை அங்கெல்லாம் குடியேற்றி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், சத்துள்ள காய்கறிகள் அபஷேகம், குங்கும அபிஷேகம் எல்லாம் நடத்தி, அந்த ஜோசப் கடவுளின் புகழ் பரப்புமாறு, அவரின் பின்னோடிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பக்தக்கோடிகளிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்.

பேருந்துத் தொடக்க விழாவும் மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்திய முதல்வர் ஜோசப்பும்!

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்காகப் புதிதாக வாங்கப்பட்ட 300 டீசல் & சிஎன்ஜி (CNG) பேருந்துகளைத் தமிழக முதல்வர் சி. விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இது மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து வாகனத் தொகுப்பில் ஒரு முக்கியச் சேர்க்கையாகும்.

இந்தத் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவர் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்தவாறு காணொளி ஒன்றையும் பதிவு செய்தார். [https://www.msn.com/en-in/news/india/watch-superstar-cm-vijay-takes-bus-ride-after-launching-300-new-tnstc-buses-in-chennai/ar-AA26v0fl?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a3dd11b62954956baa2865e10d18ebd&ei=14]

பேருந்தை அவரே[ஜோசப்] இயக்கி[வழக்கம்போல்] நம் மக்களைப் பேரானந்தப் பேராழி[கடல்]யில் குளித்துப் பெரும்பேரின்பத்தில் திளைக்கச் செய்வார் என்று எதிர்பார்த்தோம்.

ஏமாற்றமே மிஞ்சியது.

வருந்துகிறோம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ஜோசப் அவர்களே!

வியாழன், 25 ஜூன், 2026

விஜய் மாமாவும் விஜயா என்னும் கர்ப்பிணிப் பெண்ணின் வைராக்கியமும்!!![சிறப்புச் சிறுகதை]

விஜயாவுக்கு அன்று அதிகாலையில் லேசான பிரசவ வலி தலைகாட்டியது.

அவளுடைய மாமியார் தன் மகன் மணவாளனிடம் விசயத்தைச் சொல்ல, இருவரும் ‘கோகுலம் தாய் சேய் மருத்துவமனை’ என்னும் பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு விஜயாவை அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார்கள்.

விசயத்தை அறிந்த விஜயா, “நம்ம ஊர் அரசு மருத்துவமனைக்கே போகலாம்” என்றாள்.

“மத்த ஊர் அரசு மருத்துவமனை எப்படியோ, நம்ம ஊர் அரசு மருத்துவமனை ரொம்ப மோசம். அங்கே சேர்க்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உயிர் பிழைப்பதே நிச்சயமில்லை” என்றான் மணவாளன்.

“என் உயிரைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நல்லபடியா ஒரு குழந்தையை நான் பெத்துட்டா, நம் முதல்வர் விஜய் நேரில் வந்து நம் குழந்தைக்குத் தங்க மோதிரம் அணிவிச்சி வாழ்த்துச் சொல்லுவார். அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம். நீங்க என்னை அடிச்சே கொன்னுடுறதா இருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்தை இழக்க நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்றாள் விஜயா அழுத்தம் திருத்தமான குரலில்!

விஜயாவின் புருஷன்காரனும் மாமியார்க்காரியும் நீண்ட நேரம், இருந்த இடத்திலேயே சுயநினைவில்லாமல்  நின்றுகொண்டிருந்தார்கள்! 

“முதல்வராகவே இருங்கள்; ‘மாமா’வாக மாற வேண்டாம் ஜோசப்”!

[தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் தோராயமாக 1,200 முதல் 1,230 குழந்தைகள் பிறக்கின்றன[தகவல் இணையத்தில் பெறப்பட்டது]. தினமும் இத்தனைக் குழந்தைகளுக்கு முதல்வர் தங்க மோதிரம் அணிவிப்பது சாத்தியமா? செலவு?]        

தாய்மாமன் என்பவர் யார்? 

//தாய்மாமன் என்பவர் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாயின் உடன் பிறந்த சகோதரர்(அண்ணன் அல்லது தம்பி) ஆவார். தமிழ்க் கலாச்சாரத்தில் இவர் தாய்க்கு நிகரானவராகக் கருதப்படுபவர்.

*தமிழர் பண்பாட்டில் தாய்மாமனின் பங்கு மிகவும் முக்கியமானது.

*காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு போன்ற அனைத்துக் குடும்பச் சுப நிகழ்ச்சிகளிலும் தாய்மாமனுக்கு முக்கிய இடமுண்டு.

*குழந்தைகளின் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் முதல் சீர்(பரிசுப் பொருட்கள்) கொண்டுவரும்[கொடுத்து அனுப்புதல் அல்ல] வழக்கம் இவரிடம் உள்ளது.

தாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பவர் தாய்மாமன்//.

ஆக, சகோதரி மகளின்[+மகன்] அனைத்துப் புனித நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பரிசு[சீர் வரிசை] வழங்குபவரே தாய்மாமன் ஆவார்.

முதல்வர் ஜோசப், ஒவ்வொரு பெண்மணியும் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது[அரசு மருத்துவமனைகளில் மட்டும்] நேரில் வந்து வாழ்த்துச் சொல்லி, ஒரு கிராம் மோதிரத்தை அணிவிக்கப்போவதில்லை[ஒரு முறை மட்டும் நிகழ்வைப் புகைப்படம் எடுத்து அனைத்து ஊடகங்களிலும் வெளியிடச் செய்வார்].

வெளிப்படையாகச் சொன்னால்.....

சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு எடுபிடியை[அதிகாரிகளாகவும் இருக்கலாம்] ஒரு போலியான தாய்மாமனாக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த நாடகத்தை நடத்தப்போகிறார் ஜோசப்.

முதல்வர் ஜோசப் அவர்களுக்கு நாம் வழங்கும் பரிந்துரை.....

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகும்வரை வெறும் ‘விஜய்’ ஆக இருந்த நீங்கள், முதல்வர் ஆனபோது ‘ஜோசப்’ஐ இணைத்துக்கொண்டீர்கள்[மதப் பற்றின் வெளிப்பாடு & பரப்பும் நோக்கம்]. அதைப் போலவே, முதல்வராக மட்டுமே இருந்த/இருக்கும் நீங்கள் ‘தாய்மாமா’வை இணைக்கிறீர்கள்.

மக்கள் எப்போதுமே முட்டாள்களாக இருப்பதில்லை; சில நேரங்களில் சிந்திக்கவும் செய்கிற அவர்கள், உங்களின் இந்த ‘மாறும் ஆசை’ வரும் தேர்தல்களில் பெண்களின் வாக்குகளை அள்ளுவதற்கான தந்திரம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது.

ஆகவே ஜோசப் அவர்களே,

முதல்வருக்குரிய கடமைகளை மட்டுமே செய்யுங்கள்[சிறப்பாகச் செய்தால் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள்]; ‘மாமா’வாக எல்லாம் மாற வேண்டாம்.

வேண்டவே வேண்டாம்!

புதன், 24 ஜூன், 2026

“தொட்டால் விடமாட்டோம்”... முதல்வர் ஜோசப்! தொடுவது யார்? யாரெல்லாம்?

“மக்கள் பணத்தைத் தொடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், தொட்டவர்களையும் சும்மா விடமாட்டோம்” -சட்டசபையில் கர்ஜித்தார் முதலமைச்சர் விஜய்[https://tamil.behindtalkies.com/tamil-nadu-assembly-session-updates-vijay-speech-dmk-walkout/amp/].கர்ஜிப்பது போதாது முதல்வரே, முன்பு[தி.மு.க. ஆட்சியில்]யாரேனும் தொட்டிருந்தால், தொட்டவர்களைச் சும்மா விடாதீர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தடுப்பாரில்லை; பாராட்டுவார்கள்.

“தொட்டால் விடமாட்டோம்” என்கிறீரே ஜோசப், மக்கள் பணத்தை யாரால் தொடமுடியும்?

தமிழ்நாட்டை ஆள்பவர் நீர். மக்கள் பணத்தைக் கையாள்வது நீரும் உம்முடைய அமைச்சர்களும் உம்முடைய பிரிய அதிகாரிகளும்.

அதைக் கையாடல் செய்யும் வாய்ப்புள்ளவர்களும் நீரும் உம் சக அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.

ஊழல் புரிந்தால் உம் மீதும் உம் ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக நீர் சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது?

ஒரு மாநிலத்தையே ஆளுகிறவர் நீர். கொஞ்சமேனும் சிந்தித்துப் பேசுவது நல்லது... உமக்குத்தான்!

பெரியாரை அறியாத தற்குறி முதலமைச்சர் ஜோசப்!!!

திராவிட அரசியலின் தந்தை என்று போற்றப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பரந்த சமூகக் கொள்கைகளைத் தனது கட்சி ஏற்றுக்கொண்டாலும், நாத்திகம் மற்றும் மத நம்பிக்கையை நிராகரிப்பது குறித்த அவரது கருத்துக்களை ஏற்கவில்லை என்று தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்[TVK embraces Periyar's social ideals, not his atheism: Vijay in Assembly]. 

‘தமிழர் தந்தை’ என்று போற்றப்படும் பெரியாரின் சமூகக் கொள்கைகள் அனைத்துமே கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்துதான் பிறந்தன.

ஜாதியின் பெயரால் மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது; கோயிலுக்குள் நுழையக் கூடாது என்னும் இவையெல்லாம் ஆரிய வர்ணாசிரம மனுதர்மக் கோட்பாட்டின்படி கடவுளின் பெயரால் கற்பிக்கப்பட்டன… படுகின்றன. 

பிறப்பால் மனிதனின் ஏற்றத்தாழ்வு, ஜாதியப் படிநிலை, ஒடுக்கு முறைக் கட்டமைப்பு,  ஆரியச் சித்தாந்தம், வர்ணாசிரமம், மனுதர்மக் கோட்பாடு ஆகியவை கடவுளின் பெயரால் பாதுகாக்கப்பட்டன… படுகின்றன.

இக்காரணங்களால்தான் கடவுள் நம்பிக்கையைச் சாடினார் பெரியார்; வழிபாட்டைக் கண்டித்தார்[“ஜாதி என்ற கடும் விஷம் கொண்ட நாகப்பாம்பைக் கொல்வதற்காக அடித்தபோது, அது ஓடிப்போய் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டது” என்றார்].

பெரியார் குறித்த உலகறிந்த இந்த உண்மைகளை அறியாமல், சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார் முதல்வர் ஜோசப்.

‘பெரியார்’ என்னும் சொல்லை இவர் உச்சரிப்பதுகூட அவரை அவமதிக்கும் செயலாகும்.

திங்கள், 22 ஜூன், 2026

சல்லாபச் சாமியார்கள் கும்பிடும் ‘சாமிகள்’ ஆன கதை!!!

ரு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சி, அங்கே துக்கிளியூண்டு கீத்துக்கொட்டகை போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கல மணியும் தீபாராதனைத் தட்டுமா தொழிலை ஆரம்பிக்கீறாங்க வேலைவெட்டி இல்லாதவனுக.

ஆரம்பத்தில் எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டுப் போற பொதுமக்கள் ‘எதுக்கும் கும்பிட்டு வைப்போம்’னு கும்பிட ஆரம்பிக்கிறாங்க.

கையில் காசு உள்ளவன் நின்னு கும்பிட்டு உண்டியலில் பணம் போட்டுட்டுப் போனா, அதைப் பார்த்துட்டு மத்தவனும்  போடுறான்.

“இந்தச் சாமியை வேண்டிகிட்டா இருக்கிற தோசம் எல்லாம் கழிஞ்சிடுது; நினைக்கிற காரியம் கைகூடுது”ன்னு நாலு முட்டாளுங்க சொல்லிவைக்க, சாரி சாரியா மக்கள் வந்து கும்பிட ஆரம்பிச்சுடுறாங்க.

சின்னஞ்சிறு உண்டியல் மாயமாகிப் பெரியதொரு ராட்சத உண்டியல் அந்த இடத்தை ஆக்கிறமிக்குது.

கீத்துக் கொட்டகை இருந்த இடத்தில்  பிரமாண்ட அடுக்குமாடிக் கோயில்! அக்கம்பக்கத்தில் இருக்கிற பயன்பாட்டில் இல்லாத அரசாங்க நிலமும் கோயிலுக்குச் சேர்க்கப்படுது[அரசாங்கம் கண்டுகொள்வதில்லை> சாமி கண்ணைக் குத்திடும்!].

நாட்கள் செல்லச் செல்ல கோயில் சொத்து கோடிக்கணக்கில் பெருகுது. கோயிலுக்கு என்பதைவிட, கோயிலை உருவாக்கிய சாமியாருக்கு என்று சொல்வதே பொருத்தமா இருக்கும். 

நம் நாட்டில் சாமியார்கள் பலர் கோடி கோடி கோடீஸ்வரச் ‘சாமிகள்’ ஆன கதை இதுதான்.

ஞாயிறு, 21 ஜூன், 2026

மதிக்கத்தக்க மனசாட்சி!

அடங்காத ஆசை காரணமாகத் தவறு செய்ய முற்படும்போது, அதன் விளைவுகள் குறித்து நம் மனசாட்சி எச்சரிக்கை செய்யும். 

பல நேரங்களில் அது பயனற்றுப்போனாலும், அரிதாகச் சில நேரங்களிலேனும், தவற்றுக்கான தண்டனையை நாம் அனுபவிக்க நேரலாம். அந்தத் தண்டனை எதிர்பார்த்ததைவிடவும் பல மடங்கு கடுமையானதாகவும் இருக்கக்கூடும்.

எனவே, எந்த ஒன்றின் மீது ஆசைப்படும்போதும் மனசாட்சி குரல் கொடுத்தால் அதை மதித்துச் செயல்படுவது நல்லது.

‘யோகாப் பயிற்சி’... அம்மணச் சாமியார்[ஜட்டியுடன்] பாபா ராம்தேவ் இருக்க மோடி எதற்கு?!

//நாடு & கலாச்சாரங்களைக் கடந்து, உலக மக்களை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய சமூகக் கொண்டாட்டமாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்//[ஊடகச் செய்தி].

யோகா என்பது உடம்பை வலுப்படுத்துவதற்கும் நலப்படுத்துவதற்குமான ஒரு பயிற்சி மட்டுமே[மனதைப் பக்குவப்படுத்துவதாகச் சொல்வது சரியல்ல; அதற்கு முறையான மனப் பயிற்சிகள் தேவை].

இது உலக மக்களை இணைக்கும் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்கிறார் நம் பிரதமர் யோககுரு மோடி.

உலகில் பல நாட்டு மக்களும் யோகா கொண்டாடுவது வழக்கமாகியிருக்கலாம். ந்த வழக்கம் ஒட்டுமொத்த உலக மக்களையும் இணைத்துவிட்டதாகச் சொல்வது சரியல்ல.

நம் பரம்பரை எதிரியான பாகிஸ்தான் மக்களும்தான் யோகா பயிற்சி செய்தார்கள். நம் மக்களும் பாகிஸ்தான் மக்களும் இப்பொது ஒருங்கிணைந்து தங்களுக்குள் கொஞ்சிக் குலாவுகிறார்களா?

உலக மக்கள் அத்தனைப்பேரும் வயிறு பசித்தால் உணவு உண்ணுகிறார்கள்; உடல் பசிக்கு ஆணும் பெண்ணுமாகச் சேர்க்கை செய்கிறார்கள். இதனாலெல்லாம் உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாய்ச் செயல்படுகிறார்களா என்ன?

நாட்டு நலன் குறித்து உருப்படியாய் ஏதும் பேசாமல் இப்படி எதையாவது உருட்டுவதே நம் பிரதமருக்கு வழக்கமாகிப்போனது.

இவரைத் தவிர, வேறு எந்த நாட்டுத் தலைவராவது யோகா பயிற்சிக்குத் தலைமை தாங்கிப் பல மணி நேரத்தை வீணடித்திருக்கிறார்களா?

அரையே அரைக்கால் அங்குல ஜட்டியோடு யோகா பயிற்சி தருவதற்கென்றே ‘பாபா ராம்தேவ்’, கவர்ச்சியான தாடி மீசையோடு சத்துக்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இருக்கும்போது, கணக்கிலடங்காத பணிகளைச் சுமந்துகொண்டிருக்கும் மோடிக்கு ஏன் இந்த வெட்டி வேலை[வீட்டில் பயிற்சி செய்வதே போதுமே]?

சனி, 20 ஜூன், 2026

சிலிர்ப்பூட்டும் சிருங்கார நடையில் ஒரு வரலாற்றுக் கதை[அறிஞர் அண்ணா]!

#உலகமே வியந்தது அவனது வீரத்தையும் தீரத்தையும்.

ரோமாபுரியின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ரணகள மாவீரன் பெற்ற வெற்றிகள் குறித்தே பேசப்பட்டது. 

ஒட்டுமொத்த உலகமும் புகழ் மகுடம் சூட்டி அவனைப் பாராட்டியது; புகழ்ந்து போற்றியது.

இந்தச் சாதனையாளன் ஒரு சாகசக்காரியுடன் நடந்த போரில் தோற்றான் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவன் தோற்றுத்தான் போனான்.

அவள் சேல் விழியாள்.

மாமன்னர்களையெல்லாம் தன் காலடியில் விழவைத்த மாயவித்தைக்காரி அவள்.

களத்தில் பகைவர்களைச் சிதறடித்த அவன்  அவளின் சிருங்காரச் சிரிப்பில் சிதறிப்போனான்.

களத்தில் எதிரிகளைக் கலங்கடித்த அவனை அந்தக் காரிகை கட்டிலறையில் வீழ்த்தினாள்.

அவளை வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த அவன் அவளின் பாதம் பணிந்தான்.

அவளின் அழகை வியந்து சிந்து பாடினான்.

முடி தரித்த வேந்தர் பலரைப் பிடி சாம்பலாக்கிய அந்த வீரனை... வெற்றியன்றி என்றுமே தோல்வி கண்டிராத தீரனைக் காந்தக் கண்களால் கவர்ந்திழுத்து மோகப் படுகுழியில் வீழ்த்தினாள் அந்த மோகனாங்கி.

வலிய முதலையிடம் சிக்குண்ட பெரிய மதயானை ஆனான் அவன்.

இது, ஒரு சாகசக்காரி, தன் சரச சல்லாபத்தால் ஒரு சரித்திர நாயகனை அடிமையாக்கிய கதை.

அவள், எகிப்து நாட்டு எழிலரசி கிளியோபாட்ரா! அவன் ரோம் நாட்டு மாவீரன் ஆண்டனி!#

                         ===================

மூலம்: 'அண்ணா சொன்ன குட்டிக்கதைகள் 100'; பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை.

***நூலின் பக்கங்கள் வெகுவாகச் சிதைந்த நிலையில், கவிதை நடைக் கதையின் சில வரிகள் அனுமானத்தின் மூலம் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 19 ஜூன், 2026

ச.ம.உறுப்பினர் எழும்போது தேசியக்கீதம்! பேசி முடித்த பிறகும் அதே கீதம்!!

//3-வது முறையாக நான் பதில் சொல்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்தோடு சட்டமன்றம் தொடங்கியது. தேசிய கீதம் பாடக்கூடாது என்று எதுவும் இல்லை; தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது." -சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு//. இது செய்தி[https://minnambalam.com/].

தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதல் நாள் நிகழ்வு தொடங்கும்போது ஒரு முறையும்[தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவுடன்], மன்ற நிகழ்வு முடியும்போது ஒரு முறையும் என்று இரண்டு தடவை தேசியக்கீதம் பாடப்பட்டதால், இந்தப் புதிய மரபு குறித்து உறுப்பினர்களில் சிலர் கேள்வி எழுப்பியபோதுதான், மேற்கண்டவாறு அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

“தேசியக்கீதத்தை எத்தனை முறையும் பாடலாம் என்று விதிமுறை ஏதுமில்லை” என்று சொல்ல நினைத்ததைத்தான் “தேசியக்கீதம் பாடக்கூடாது என்று ஏதுமில்லை” என்று கூறியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர்.

அவரின் கூற்று 100% சரியே.

நம் நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படுவதே தேசியக்கீதம்[நாட்டுப்பண்].

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவே சட்டமன்ற நிகழ்வு முடிந்தவுடன் தேசியக்கீதம் பாடப்படுகிறது[எழுந்து நின்ற கோலத்தில் உறுப்பினர்கள் அத்தனைப்பேரும் கீதத்தை மனப்பூர்வமாய் முணுமுணுக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஹி... ஹி... ஹி!!!].

இத்தனை தடவைதான் பாட வேண்டும் என்னும் விதியெல்லாம் இல்லை என்று அமைச்சர் கூறியதிலிருந்து அதை எத்தனை முறையும் பாடலாம் என்பது அறியத்தக்கது.

பல முறை பாடினால், நாட்டுப்பற்று மேலும் மேலும் வலுப்படும் என்பதால், கேள்வி எழுப்பவோ கருத்துச் சொல்லவோ விரும்பும் உறுப்பினர்கள் அத்தனை பேரும்[சபாநாயகரும் அமைச்சர்களும் உட்பட], எழுந்து நிற்கும்போதும், பேசி முடித்தவுடனும் மறவாமல் நம் தேசியக்கீதத்தைப் பாடி முடிப்பது வரவேற்கத்தக்கது.

சட்டமன்றத்தில் சபாநாயர் இதை அறிவித்தல் வேண்டும் என்பது நம் பணிவான கோரிக்கை.

===================

https://minnambalam.com/tn-minister-rajmohan-explains-national-anthem-sequence-in-assembly/

வியாழன், 18 ஜூன், 2026

கடவுள்... படைப்பு... மசுரு... மண்ணாங்கட்டி!!!

யிருக்குயிராய் நேசித்தவளின் சடலத்தை மட்டுமல்ல, மலையளவு துயரத்தையும் சுமந்து செல்கிறான் அவன்.

அரவணைப்பில் 18 மாதச் சிசு.

செத்துப்போன அம்மாவின் கால்களை இறுகப் பற்றியபடி, கண்ணீர் சிந்தி அழுதுகொண்டிருக்கும் சிறுமி.

இவர்களைத் தேற்றுவார் யார்? அரவணைத்து ஆற்றுப்படுத்துவார் எவர்?

இது சற்று முன்னர் கண்களில் பட்ட ஒரு காட்சி[Quora].

காண்பதற்கு வாய்ப்பமையாத, நெஞ்சைச் சுடும் இதைப் போன்ற துன்பியல் நிகழ்வுகள் இன்னும் எத்தனை எத்தனையோ என்பதால், தினையளவு சுகமும் பனையளவு சோகமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை என்றாகிறது.

அள்ள அள்ளக் குறையாத சுகங்களை வாரி வாரி வழங்கியிருக்கிறார் கடவுள் என்கிறவர்கள் நம் அனுதாபத்திற்குரியவர்கள்!

செவ்வாய், 16 ஜூன், 2026

சிரிப்பூட்டும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!!!

டலமைப்பால் ஓர் ஆணைவிடவும் பெண் பலவீனமானவளாக இருப்பது இயற்கையானது.

உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை வலுப்படுத்தினாலும், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்திருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய ஆண்களிடமிருந்து அவள்[அவர்கள்] தன்னை[தங்களை]ப் பாதுகாத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

அப்பட்டமான ஓர் உண்மை.....

ஒரு சராசரி ஆணின் உடம்பைக் காட்டிலும் ஒரு பெண்ணின் உடம்பு[குறிப்பாக மார்பகங்கள், அடிவயிறு இன்ன பிற] மிக மிக மென்மையானது; உணர்ச்சி நரம்புகளால் கட்டமைக்கப்பட்டது. அவளின் அங்கங்கள் ஆடவனால் தீண்டப்படும்போது[தற்செயலாகவோ வலிந்தோ],  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையாகப் போராடுவது தவிர்க்க இயலாதது; எதிரியை எதிர்த்துப் போராடி வெல்வது கடினமாகிறது.

இக்காரணத்தால்தான், மிகக் கடுமையான பாதுகாப்புப் பணிகளுக்கு ஆடவர் குழுப் படைகள் அனுப்பப்படுகின்றன.

எனவே, பெண்களுக்கான பாதுகாப்பை ஆண்களால் ஆன படைதான் சிறப்பாகச் செய்திட முடியும் என்பதால், சிங்கப்பெண் அதிரடிப் படை, சிறுத்தைப்பெண் புரட்சிப் படை அமைப்பதெல்லாம் வெற்று ஆரவார நடவடிக்கைள் மட்டுமே.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில், "பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படைக்குப் பாதுகாப்பு வழங்க, இன்னொரு புதிய பாதுகாப்புப் படை தேவை” என்று நக்கலடித்தது நினைவுகூரத்தக்கது!

திங்கள், 15 ஜூன், 2026

‘முகாம்பிகைக்கு ஜோசப் வெள்ளி வாள் காணிக்கை’... அலங்கரிக்கவா, அடகு வைக்கவா, விற்கவா?!

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்; தங்களின் எடைக்கு ஈடாக[துலாபாரம்] விரும்பும் பொருளைச் சாமிகளுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்; முடிக் காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

இவையெல்லாம் பொதுவாக மக்களுக்கோ, குறிப்பாகப்  பக்தர்களுக்கோ பயன்படுத்தப்படுகின்றன என்று நம்பலாம்.

அண்மையில், முகாம்பிகை[கர்னாடகா]யை வழிபடச் சென்ற நம் முதல்வர் ஜோசப் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக்கொண்டதோடு, ​​1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள்[ரூ4,32,000] ஒன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாக[நன்கொடை] வழங்கினார் என்பது செய்தி.

எதற்கு இந்த வெள்ளி வாள் காணிக்கை?

//வெற்றி மற்றும் தர்மத்தின் அடையாளமாக 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான வெள்ளி வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார் முதல்வர் ஜோசப். மேலும், தனது ஜாதகத்தில் சுக்கிரத் தசை நடைபெறுவதால், அதற்கான பரிகாரமாக இந்த வெள்ளி வாளை[இது எதற்கு? வெற்று அலங்காரத்திற்கா? அம்மன் அரக்கர்களுடன்(!)போர் புரிவதற்கா? கோயிலுக்கு வருமானம் குறைந்தால் அடகு வைக்கவா, அல்லது, விற்றுப் பணம் பண்ணவா?] அம்மனுக்கு சமர்ப்பித்துச் சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டார்// என்பது ஊடகங்கள் வாயிலாக அறியப்படும் காரணங்கள் ஆகும்.

மூடநம்பிக்கைகளின் ஒட்டுமொத்தப் புகலிடமா இவர்? இவரா இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறார் என்று அளப்பரிய வேதனையுடன் கேட்கத் தோன்றுகிறது.

நாம் கேட்கவில்லை. கேட்க வேண்டியவர்கள் நம் மக்கள். இவர்கள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்பது முதல்வர் ஜோசப்புக்கு அத்துபடியாய்த் தெரியும். 

                                 =====================     

https://www.msn.com/en-in/money/topstories/cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-donates-1-600-kg-silver-sword/ar-AA25yvDg?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a2eb17708144679a2be748a977a0711&ei=92

ஞாயிறு, 14 ஜூன், 2026

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அவலம் இங்கே! மோடி எங்கே... எங்கே?

*பாலியல் வன்கொடுமை வெகு வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியா.

*இந்தியாவில் கற்பழிப்பு என்பது பெண்களுக்கு எதிரான இந்தியாவின் பொதுவான குற்றங்களில் ஒன்றாகும்.

*சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் ஒருநாளில் 106 கற்பழிப்புகள் நடைபெறுகின்றன[தோராயமாக ஒவ்வொரு 9 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்].

*குற்றங்களில் பெரும்பாலானவை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை.

*இதற்கான முக்கியக் காரணம் இங்கு வழங்கப்படும் தாமதமான நீதியும், பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதான பெற்றோரின் அச்சமும்.

*இது மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளால், பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

==================

பதிவைப் படித்துவிட்டீர்கள். கீழே உள்ள காணொலி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

இங்கே வலிமையான எதிர்க்கட்சியோ தலைவரோ இல்லை! இந்த மண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து, உலகம் சுற்றுவதையே தன் தொழிலாகக்கொண்ட பிரதமரைக் கண்டுகொள்ளாத/கண்டிக்காத மக்களே இந்த நாட்டில் அதிகம்!! மோடி[கடவுளால் அனுப்பப்பட்டவர்] கொடுத்துவைத்தவர்!!!

https://tamil.boldsky.com/insync/pulse/countries-with-highest-rape-crime-027445.html

சனி, 13 ஜூன், 2026

ஆதிபராசக்தி முகாம்பிகையும் ஐயோ பாவம் முதல்வர் ஜோசப்பும்!!

‘எம்ஜிஆர்’ஐப் போலவே நம் முதல்வர் ஜோசப்பும், ஆதிபராசக்தியின் அவதாரமான முகாம்பிகை கோயிலுக்குப் போய்  வழிபட்டதைப் பரபரப்பான செய்தியாக்கியுள்ளன முன்னணி ஊடகங்கள் பலவும்.

சாகும்வரை மங்காத புகழுடன் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தார் எம்ஜிஆர்.

அவரைப் போலவே, தானும் தன் ஆயுட்காலம்வரை முதல்வராகக் கோலோச்ச வேண்டும் என்னும் விருப்பம், ஜோசப் ‘விஜய்’யின் முகாம்பிகை வழிபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.

கட்டான உடலமைப்புக்கொண்ட எம்ஜிஆருக்கு, 1984-ஆம் ஆண்டு சிறுநீரகச் செயலிழப்புடன் சேர்த்து கடுமையான பக்கவாதம் ஏற்பட்டது. அந்தப் பக்கவாதத்தின் பாதிப்புகள் காரணமாகவே அவர் நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டார். டிசம்பர் 24, 1987 அன்று அதிகாலையில், தூக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு(Cardiac Arrest) காரணமாக மரணமடைந்தார்.

முகாம்பிகையின் அதி தீவிரப் பக்தரான புரட்சித்தலைவரை அம்மை கைவிட்ட கசப்பான நிகழ்வை, ஜோசப் விஜய் அறியாமலிருப்பது நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

அவரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக!

வெள்ளி, 12 ஜூன், 2026

தமிழ்நாடு முதல்வரின்[ஜோசப் விஜய்] தொடரும் பக்தி நாடகம்!!!

‘கர்னாடகா கொல்லூரு முகாம்பிகை கோயிலில் விஜய் வழிபாடு’[சன் தொ.கா.>பிற்பகல் 03.35].

அரசுமுறைப் பயணத்தில்[டெல்லியிலிருந்து திரும்பும்போது] செலவில்லாமல் இதைச் செய்திருக்கிறார்.

அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தினர் சிலரில் முதல்வர் ஜோசப்பும் ஒருவர்.

ஏற்கனவே பிற மதம் சார்ந்த பல[!!!] சாமி கோயில்களுக்குப்  போய், எம்மதமும் தனக்குச் சம்மதமே என்று பக்திமான்களை நம்பச் செய்த இவர் முகாம்பியைத் தரிசித்ததன் மூலம், அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறார்[படம் பிடித்து ஊடகங்களில் வெளியிடுவது 100% சுயநலம்].

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை[பக்திமான்கள்] மக்களின் மனங்களை அத்துபடியாய்ப் படித்த புத்திசாலி முதல்வர் இவர்.

புத்திசாலியோ அதிப் புத்திசாலியோ, தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரும் இவரளவுக்கு மூடநம்பிக்கை[அசாதாரணமான பக்தி] ‘திணிப்பு’க் கைங்கரியத்தைச் செய்ததில்லை.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தமிழர்களின் ‘தலைவிதி’ இந்த ஜோசப் விஜய் கையில்[அப்புறமும்?]!

வந்தது தெரியும்! போவதும் தெரியும்!![எச்சரிக்கை: அயர்வூட்டும் வறட்சித் தத்துவம்]

ரு முறைகூட வாசிக்கத் தகுதியில்லாத சில நடிக நடிகையரின் முகநூல் & டிவிட்டர் பதிவுகளை மில்லியன் கணக்கில் நம் மக்கள் வாசிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட இந்தப் பதிவை வாசித்தோர் எண்ணிக்கை வெறும் 72 மட்டுமே[அரிதாகச் சில பதிவுகள் சில ஆயிரங்களைக் கடந்ததும் உண்டு]. 

ஆயிரக்கணக்கில் வேண்டாம்; நூற்றுக்கணக்கிலாவது இந்தத் தத்துவ அறிவின் உச்சம் தொட்ட[ஹி... ஹி... ஹி!!!] ஆய்வைப் பதிவுலகினர் வாசிப்பார்கள் என்னும் நம்பிக்கையில் பதிவாக்கியிருக்கிறேன்.

ந்தத் தலைப்பு, “...வந்தது தெரியும்... போவது எங்கே...” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவுபடுத்தியிருக்கக்கூடும். வாசியுங்கள்.

தந்தையின் உடம்பிலிருந்து,  பல்லாயிரம் கோடி அணுக்களுள் ஒன்றாக வெளிப்பட்டு, கருப்பாதையில் நீந்தி[இடையில் செத்து மடியாமல்], தாயின் கருப்பையில் சினை முட்டையுடன் இணையும்வரை ‘தன்னை அறிதல்[‘நான்’ என்னும்  உணர்வு] அந்த ஒற்றை உயிரணுவுக்கு வாய்த்திடவில்லை.
[உயிரணு(Cell) என்பது ஒரு உயிரினத்தின் அடிப்படை கட்டமைப்பு & செயல்பாட்டு அலகு. மரபணு(Gene) என்பது அந்த உயிரணுக்களின் உட்கருவில் இருக்கும் டி.என்.ஏ(DNA) வின் ஒரு பகுதி ஆகும். ஓர் உயிரின் பரம்பரைக் குணங்களை நிர்ணயிக்கும் சிறு தகவல் தொகுப்பு இதுவாகும்]

அந்த ஒற்றை அணு, இரட்டையாகி, பலவாகி, பல்லாயிரம் கோடி அணுக்களாகப் பரிணாமம் பெற்று, குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்திலும்கூட, தன்னை அறிதல் சாத்தியப்படவில்லை.

குழந்தை முழு வடிவம் பெற்று, பிறந்து, மண்ணில் தவழ்ந்து, சில ஆண்டுகள் கழிந்த பிறகே சிந்திக்க முடிகிறது; தன்னைத்தான் அறிய இயலுகிறது; ‘நான்’ என்னும் உணர்வைப் பெறுவது சாத்தியமாகிறது.

அதுவரை ஒற்றை அணுவுக்கோ, அணுத்தொகுப்புக்கோ  ‘அறிதல்’ உணர்வு முற்றிலுமாய் இல்லை என்பது அறியற்பாலது. 

ஒரு காலக்கட்டத்தில் ‘நான்’ என்னும் உணர்வைப் பெறும் மனிதன் சாகும்வரை ‘நான்’என்னும் உணர்வை இழக்காமலேயே வாழ்கிறான்; சாவின்போது அந்த ‘நான்’ஐ முற்றிலுமாய் இழக்கிறான். 

எனவே, செத்த பிறகு, உடம்பும் இல்லை; ‘நான்’ என்ற உணர்வும் இல்லை; மனித வாழ்க்கைக்கு நிரந்தரமாய் ஒரு முற்றுப்புள்ளி விழுகிறது. எஞ்சியிருப்பது அல்லது மிஞ்சியிருப்பது ஏதுமில்லை என்றாகிறது.

செத்த பின்னர்  இல்லாமல் போவதை,  இப்போது மட்டுமல்ல, சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் எப்போதுமே மனித குலம் விரும்பியதில்லை. அதன் விளைவாக, அந்த ‘நான்’க்கு, ‘ஆன்மா/ஆத்மா’ என்று ஏதேதோ பெயரிட்டு, ‘உடம்பு அழிந்த பிறகும் அது அழிவதில்லை; அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்தோ, சொர்க்கம்/நரகம் சேர்ந்தோ, இறைவனுடன் இரண்டறக் கலந்தோ வாழ்ந்துகொண்டே இருக்கும்’ என்று ‘அனுமானம்’ செய்வதில் வல்லவர்கள் நம்பினார்கள்; அந்த நம்பிக்கையைப் பிற மனித மனங்களிலும் ஆழமாய்ப் பதியவைத்துவிட்டார்கள்.

நம்முடைய இந்த உடம்பு உருவாக முதற்காரணமாக இருந்த அந்த ஒற்றை அணு[தந்தையிடமிருந்து வெளிப்பட்டுத் தாயின் கருப்பையில் நுழைவது]வும் சரி, அதனின்றும் பல்கிப் பெருகி நாம் தோன்றி வாழ்ந்திடக் காரணமான கோடானுகோடி அணுக்களும் சரி அழியும் தன்மை வாய்ந்தனவே[அழியும் அணுக்கள் என்னவாகும்? பஞ்சபூதப் பேரணுக்களுடன் இரண்டறக் கலக்கும் அல்லது ‘வெளி’யில் கரைந்துபோகும் என்று கொள்ளலாமா?]

எனவே,

இறப்புக்குப் பின்னர் நாம் இல்லாமல் போகிறோம் என்பதே எதார்த்தம். 

“இல்லையில்லை. அந்த ஒற்றை அணுதான் ஆன்மா, அது அழியாத் தன்மை வாய்ந்தது” என்று நம் முன்னோர் நம்பியிருக்கவும்கூடும். ஆனால், அது ஏற்கத்தக்கதல்ல. காரணம்.....

அந்த ஒற்றை அணு, கருமுட்டையில்  நுழைவது சாத்தியம் இல்லாமல் போயிருந்தால், அதனோடு கருப்பாதையில் பயணித்த பிற கோடானுகோடி அணுக்கள் அழிந்தொழிந்தது போல அதுவும் அப்போதே அழிந்து மறைந்திருக்கும். அது, இயல்பாகவே அழியும் தன்மை கொண்டதுதான்.

ஆக, உடம்பு அழிந்த பிறகு நாம் இல்லாமல் போகிறோம் என்னும் கருத்து உறுதிப்படுகிறது. 

விதிவிலக்காக, அணு வேறு, ஆன்மா வேறு. அந்த ஆன்மா ஒற்றை அணு மீது சவாரி செய்து கரு முட்டைக்குள் நுழைந்தது என்றோ, குழந்தை உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஏதோவொரு நுழைவாயிலில் புகுந்து உடம்புடன் ஐக்கியமாகியது என்றோ, உடல் அழியும்போது பாவபுண்ணியங்களைச் சுமந்து வெளியேறுகிறது என்றோ நம்புவது அறிவுடைமையல்ல.

வருகைக்கு நன்றி!