எனது படம்
தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே இன்றளவில், வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

வெள்ளி, 15 மே, 2026

முதல்வர் விஜய் அவர்களே, இந்த ‘அடிதடியன்’[சி.வி.சண்முகம்]க்கு அமைச்சர் பதவியா?!

தன் கட்சித் தலைவரைக் கை தூக்கி அடிக்கும் அளவுக்கு அவர்[எடப்பாடி பழனிசாமி] இவனுக்கு[சி.வி.சண்முகம்]த் தனிப்பட்ட முறையில் கெடுதல் செய்திருக்க வாய்ப்பே இல்லை; ‘தவெக’வுக்கு ஆதரவு அளிப்பதில்தான் பிரச்சினை.

இவனை நீங்கள் அமைச்சர் ஆக்கினால், கோடிகளை அள்ளிக் குவிப்பதற்கான மேலும் பல சலுகைகளையும் எதிர்பார்ப்பான். நீங்கள் அதற்கு இசையாவிட்டால்.....

எடப்பாடியாரைத் தாக்குவதற்கு இன்று கையைத் தூக்கிய இவன் நாளையே உங்களைத் தாக்குவதற்குக் காலைத் தூக்குவான்.

தமிழ்நாட்டின் ஒரு சாமானியக் குடிமகனாக, தமிழ்நாட்டின் முதல்வரான உங்களின் ‘கௌரவம்’ கருதி எச்சரிப்பது என் கடமை.

இந்த எச்சரிக்கை எவ்வாறேனும் உங்களை வந்தடையும் என்னும் நம்பிக்கையில் இந்த விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளேன். நன்றி.

வியாழன், 14 மே, 2026

தமிழ்நாடு அரசியலில் கூட்டணிக் கொள்ளையர்கள்!!!

ரசியல் கட்சி எதுவாயினும், அதன் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம், “உங்கள் கட்சியின் பத்து... வேண்டாம், நான்கு முக்கியக் கொள்கைகளைச் சொல்லுங்கள்” என்று கேட்டால்,  தெளிவாகப் பட்டியலிடத் தெரிந்தவர்கள் எத்தனைபேர்?

ஒரு நான்கு பேர்கள்கூடத் தேறமாட்டார்கள்.

கொள்கைகளே இல்லாத சுயநலம் பேணும் சுகபோகிகள் நிறைந்த கட்சிகள்தான் இங்கே அதிகம். தனிக்கட்சியாக அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாதபோது, பிற கட்சியுடன் அல்லது கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துக் கூட்டாகக் கொள்ளையடித்துப் பங்கு பிரிக்கிறார்கள்.

இவர்கள் 100% சுயநலவாதிகள்.

கட்சிக்காரர்களிடம், “நீங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்தது ஏன் என்று கேட்டால், “மக்கள் நலம் பேணும் தூய்மையான ஆட்சியைப் பாதுகாப்பதற்கு” என்பார்கள்.

இணைந்த கூட்டணியைக் கழற்றிவிட்டுவிட்டு வேறொரு கூட்டணியுடன் சேர்ந்தாலும், இதே பொய்யைத்தான்[நிறையவே உதாரணங்கள் தரலாம்] சொல்வார்கள்.

சூடு சொரணை மானம் ரோஷம் எல்லாம் இவன்களுக்கு ஒரு பொருட்டே இல்லை; கொள்ளையடிப்பது ஒன்றே இவன்களின் குறிக்கோள்.

இவன்கள்தான் இன்று தமிழ்நாடு அரசியலில்[இந்திய அரசியலும் விதிவிலக்கல்ல] ஆதிக்கம் செலுத்துபவன்கள்.

இதற்கான வாய்ப்பை இந்தக் கழிசடைகள் பெறுவது பொதுமக்களின் அறியாமையால்.

பொதுவாக அறியாமை என்பதைவிடவும் போதுமான பொது அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாதது முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று இந்த அயோக்கியர்களை அரசியல் களத்திலிருந்து விரட்டியடிப்பது எப்போது?

இப்போதைக்கு இல்லை என்பதே எதார்த்தம்!

புதன், 13 மே, 2026

'முன்னாள் முதல்வர்’ ஆவாரா விஜய்?!

“விஜய் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிருப்பித்த சட்டமன்ற நிகழ்வில், அவருக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினர் 25 பேர் மீதும், சட்டமன்றச் செயலர்[‘தவெக’காரர் அல்ல; தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்] நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் தளவாய் சுந்தரம்[எடப்பாடியார் 'அதிமுக’].

எடப்பாடி பழனிசாமியார் தன் பங்குக்கு, “தனக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினரில் 6 பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார் விஜய்” என்று துப்பறிந்து கூறியிருக்கிறார்.

இந்தப் பரபரப்பான சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் கணபதி சிவக்குமார், “விஜய்க்கு ‘அதிமுக’வினர் ஆதரவு தருவதை எங்கள் தலைமை விரும்பவில்லை” என்று பகீர் கிளப்பியுள்ளார்.*

இந்தவொரு குழப்பமான சூழலில், த.நா.சட்டமன்றச் செயலர் விஜய்க்கு ஆதரவளித்த 25 ‘அதிமுக’வினரைப் பதவி நீக்கம் செய்வது, காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரும் விஜய்க்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது என்னும் விஜய்க்குப் பாதகமான சூழல் உருவானால்.....

விஜய் அரசு மீது ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவரப்படலாம்[மே 2026இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்(No-Confidence Motion) கொண்டுவர முடியும். இதற்குத் தனிக் கால அவகாசம் எதுவும் இல்லை].

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் விஜய் ஆட்சி கவிழும் என்பது உறுதி.

ஆக, தமிழ்நாட்டில் நிலவும் அவலமான அரசியல் சூழ்நிலை பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது

                             *   *   *   *   *

*நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆதரிக்கவில்லை(டி.கே. சிவக்குமார் / கணபதி சிவக்குமார்). -AI 

தவறு திருத்திப் புதிய வரலாறு படைத்த த.நா.முதல்வர் விஜய்!!!


தனி மனிதர்கள் தவறிழைப்பது போலவே,  அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அறிந்தோ அறியாமலோ, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான அரசாணைகளைப் பிறப்பிப்பது இயல்பானதுதான்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஜோதிடருக்கு உயர் பதவி அளித்து ஆணை பிறப்பித்தது அம்மாதிரியான நிகழ்வுகளில் ஒன்று.

அரசால்/அரசுகளால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் திருத்தி வெளியிடுவதோ, திரும்பப்பெறுவதோ மிக அரிதான நிகழ்வாகவே உள்ளது.

செய்த தவற்றை உணர்ந்து விஜய் அதைத் திரும்ப்பெற்றது வரவேற்கத்தக்கது.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே, ஆணை பிறப்பித்த சூட்டோடு[புதிய வரலாறு] அதைச் செல்லாததாக ஆக்கியது பெரும் பாராட்டுக்குரியது.

செவ்வாய், 12 மே, 2026

‘விஜய்’யின் சிறப்பு அதிகாரியாக ஒரு ஜோதிடன்! தமிழ்நாடு இனி ‘குரங்கு கையில் பூமாலை’!!

//‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்’ என்பவன் த.நா. முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்[அரசியல் பிரிவு> அதிகாரங்கள் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்]// என்பது சற்று முன்னரான செய்தி[சன் தொ.க. >நண்பகல் 01.45].

மூடநம்பிக்கை வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் ஒரு ஜோதிடன் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த மாபாதகச் செயலை, பக்தியுள்ளம் கொண்டவர்கள்கூடக் கண்டிப்பார்கள் என்பது உறுதி.

தனக்குப் பெருமளவில் வாக்களித்ததிலிருந்தே பெரும்பான்மைத் தமிழர்கள் படு படு படு முட்டாள்கள் என்பதை, இந்தப் புது முதல்வர் அத்துபடியாய்ப் புரிந்துகொண்டிருப்பதன் விளைவுதான்[பெரியார் இவரின் வழிகாட்டிகளில் ஒருவராம்!] ஒரு ஜோதிடனுக்கு உயர் அரசுப் பதவி அளிக்கப்பட்டிருப்பது.

இவரின் ஆட்சி நீடித்தால், தமிழ்நாடு மூடத்தனங்களின் விளைநிலம் ஆகும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இத்தகையதொரு பேரவலம் நிகழ்ந்துள்ள நிலையில்.....

‘தவெக’ சட்டமன்ற உறுப்பினர்களில் கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக அக்கட்சியிலிருந்து விலகுவார்கள்.

சட்டமன்றத்திலுள்ள மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள்[பெரும்பாலோர்?] நாளை[13.05.2026] நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தவெக’ ஆட்சிக்கு எதிராக வாக்களித்து அந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்(ஆளுநர் ஆட்சியில் ஜோதிட அடிமையின் ஆட்சியைவிடவும் கெடுதிகள் குறைவாகவே இருக்கும்). 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறறிவாளர்கள் அதிகமா, அடிமுட்டாள்களா?

அறிந்துகொள்ள நாளைவரை காத்திருப்போம்.

                                    *   *   *   *   *

//சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்//[https://tamil.oneindia.com/news/chennai/ricky-rathan-pandit-vetrivel-appointed-special-officer-in-cm-s-political-wing-798903.html].

தமிழ்நாடு கட்சிக்காரர்களின் கலக்கல் ‘கட்டிப்பிடி’ தந்திரம்!!!

ரசியல் நாகரிகம் என்னும் பெயரில், தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும், முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்துப் பெறுவதோ, பொன்னாடை போர்த்து மலர்க்கொத்து கொடுத்து, அவரை அவர்கள் வரவேற்பதோ விரும்பத்தகாத ஒன்றல்ல; அது வரவேற்கத்தக்க அரசியல் நாகரிகமாகக் கருதப்படுகிறது.

ஆனால்,

ஆரத்தழுவுதல் அல்லது இறுக அணைத்தல் என்பது, அளப்பரிய அன்பைக் காட்சிப்படுத்தும் இரு நபர்களுக்கிடையேயானதொரு அபூர்வ நிகழ்வாகும். 

முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட எதிரணித் தலைவர்கள், முதல்வரைக் கண்டவுடன் கட்டித்தழுவி வரவேற்பது தேவையா?

தேவைதான். அது உண்மையான அன்பின் வெளிப்பாடு என்றால்.....

இனி இம்மாதிரியான நிகழ்வுகளின்போது வரவேற்பவர்கள் வரவேற்கப்படுபவரை, கட்டியணைப்பதோடு ‘உச்சி முகர்ந்து கன்னங்களில் மாறி மாறி முத்தமும் கொடுத்தால், அதைக் காணும் மக்கள் மெய் சிலிர்த்துப் புளகாங்கிதப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துவார்கள்.

செய்வார்களா நம் அரசியல்வாதிகள்? 

திங்கள், 11 மே, 2026

புதிய முதல்வரை(விஜய்)ப் பாராட்டியது பெரும் தவறு!!!(மாற்றப்பட்ட தலைப்பு)

னக்கு ஆதரவளித்த அத்தனைக் கட்சித் தலைவர்களுக்கும் தவறாமல் நன்றி தெரிவித்த முதல்வர் விஜய் கட்சிப் பாகுபாடின்றி, தமிழ்நாட்டின் முன்னோடி அரசியல் தலைவர்களான முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ போன்றவர்களை[ஏற்கனவே தி.க. தலைவர் வீரமணியிடம் வாழ்த்துப் பெற்றார்; ‘பாமக’ அன்புமணியையும், ‘நாம் தமிழர்’ சீமானையும் சந்திக்கவுள்ளார்]த் தேடிச் சென்று வாழ்த்துப்பெறுவது அவருக்குள்ள உயர் பண்பின் அடையாளமாகும்.

தமிழ்நாட்டின் முதல்வராக அடுத்தடுத்துச் சாதனைகள் நிகழ்த்துகிறாரோ அல்லவோ[நிகழ்த்திட நம் மனப்பூர்வமான வாழ்த்துகள்], இந்த அரிய செயல் மூலம் அரசியல்வாதிகள் அத்தனைப்பேருக்கும் மனிதப் பண்பைக் கற்றுக்கொடுத்துள்ளார் அவர்;  வரலாற்றில் நிரந்தரமானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்.

சாமானியர்களான நாமும் அவரின் முதல்வர் பணி சிறக்க மனதார வாழ்த்துவோம்.

***மனதை உறுத்தும் கேள்விகள்: பதவி ஏற்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வணங்கியபோது விஜய் ஏன் பதிலுக்கு மரியாதை செலுத்தவில்லை? 

இதை முன்கூட்டியே அறிந்திராத நிலையில் இவரைப் பாராட்டிப் பதிவு எழுதியது தவறோ?

தவறுதான்! பெரும் தவறு!! 


தோல்வியைச் சந்தித்த பிறகும் பாடம் கற்கவில்லையா மு.க.ஸ்டாலின்?

தமிழ்நாடு சட்டமன்றத்தின்[2026] ‘திமுக’ கட்சித் தலைவராக, மு.க. ஸ்டாலினால்[கட்சி தேர்வு செய்தது என்பது பொய்யுரை] தேர்வு செய்யப்பட்ட அவரின் மகன் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.

பொதுமக்கள் என்றில்லை, 'திமுக’ கட்சிக்காரர்களே தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி.....

“ஸ்டாலின் நடத்திய குடும்ப அரசியல்தான் ‘திமுக’ தோற்றதற்கான மிக முக்கியக் காரணம்[விளைந்த நன்மைகளுக்கிடையே] ஆகும். எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகும், செய்த தவற்றையே அவர் மீண்டும் செய்தது ஏன்?” என்பதுதான்.

இதை மறுக்கும் விதமாக, ‘துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். 2.சட்டமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள். 3.திமுக இளைஞரணிச் செயலாளராகத் தொண்டர்களிடையே இருக்கும் செல்வாக்கு. 4.செய்தியாளர் சந்திப்புகளை எளிதாக ஹேண்டில் செய்யும் பக்குவம்.....’ ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்குக் கைவந்துள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாகச் சொல்லப்படுகிறது*

கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கோ, ஆக்கபூர்வமாகச் செயல்படும் வேறு இளைஞர்களுக்கோ வாய்ப்புத் தராமல், தன் மகனுக்கே முக்கியத்துவம்[உதவி முதல்வர்+] தந்துகொண்டிருக்கும் நிலையில், வேறு எவரும் தம் தகுதியை/திறமையை வெளிப்படுத்துவது சாத்தியமே இல்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இத்தனைத் தகுதிகளை உதயநிதி பெற்றிருந்தும் ‘திமுக’ தோல்வியைத் தழுவியதும் கவனிக்கத்தக்கது.

இந்த உண்மையை அறியாதவரல்ல ஸ்டாலின். 

அறிந்திருந்தும் தன் மகனையே எதிர்க்கட்சித் தலைவராக்கியிருக்கிறார்.

முன்னோடி அரசியல்வாதியான அவர் இது போன்ற விசயங்களில் நன்கு சிந்தித்துச் செயல்படுவது வரவேற்கத்தக்கதாக அமையும்.

*https://tamil.oneindia.com/news/chennai/why-did-dmk-hand-over-the-opposition-leader-post-to-udhayanidhi-stalin-798473.html#google_vignette].

ஞாயிறு, 10 மே, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு... அனுமதித்தவர் விஜய்?!

பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளித் தமிழை அவமதித்தது முதல்வராகியுள்ள ‘விஜய்’யின் விருப்பத்தின் பேரில் நடந்ததா?

இன்று காலையிலிருந்தே தமிழினத் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விஜய் மக்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தியும், சற்று முன்னர்வரை புதிய முதல்வர் மௌனம் சாதிப்பது மேற்கண்டவாறு சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிர்தமர் மோடியைத் திருப்திப்படுத்தி, எந்தவொரு சூழலிலும் தன் ஆட்சி கலைக்கப்படுதல் கூடாது என்பதற்காகவே தமிழை[மூன்றாம் இடத்துக்குத் தள்ளி] அவமதிக்க அனுமதித்தாரா இவர்?.

தமிழினத் தலைவர்கள் கலந்தாலோசித்து உரிய முறையில் செயல்படுவது உடனடித் தேவையாகும். 

‘விஜய்’யின் ‘சிங்கப்பெண்’ சி.அ.படை! ‘புலிப்பெண்’ புரட்சிப் படை எப்போது?!

'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை': பதவியேற்பு மேடையிலேயே முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்து!spotlightmedia_tamil செய்தி. 3 h முன்பு.

‘காட்டு ராஜா’ என்று அழைக்கப்படும் சிங்கம் அதீத ஆற்றல் வாய்ந்த விலங்குகளில்[புலி, யானை...] ஒன்று. வேறு எந்தவொரு விலங்கின் துணையும் இல்லாமல், தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை படைத்தது.

‘சிங்கப்பெண்’ என்றால் சிங்கத்தைப் போலவே தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவள் என்று பொருள்.

அவளுக்கு[பெண்களுக்கு] எதற்குச் சிறப்புப் படை, அதிரடிப் படை எல்லாம்?[‘சிங்கப்பெண்’ படையில் சிங்கம் போன்ற பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது].

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பினால், தனியாக ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி, அதற்குப் ‘பெண்கள் பாதுகாப்புப் படை’ என்று பெயர் சூட்டினாலே போதும்.

‘சிங்கப்பெண்’  பாதுகாப்புப் படை, ‘புலிப்பெண்’ புரட்சிப் படை என்றெல்லாம் ஒரு புதிய அமைப்பிற்குப் பெயர் சூட்டுவது மக்களைக் கவர்வதற்காகவே, திரைப்படத்தில் கதாநாயகன் & நாயகிகளுக்குக் கவர்ச்சிகூட்ட ஒப்பனை செய்வது போல.

புதியத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதற்கு முன்னால்[எளிதாகப் புரியும் வகையில்] முதல்வர் விஜய் கொஞ்சமேனும் சிந்திப்பது நல்லது; கவர்ச்சி காட்டி மக்களைக் கவரும் தந்திரத்தைக் கைவிடுவது அவருக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

நடிகன் முதல்வனானதும் நம் ‘தமிழ்த்தாய்’க்கு நேர்ந்த அவமானம்!!!

நடிகன் ‘விஜய்’ முதலமைச்சராக[+அமைச்சர்கள்]ப் பதவி ஏற்ற விழாவில், வழக்கமாக, தமிழ்நாடு அரசு விழாக்களில் முதலாவதாகப் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட ‘பரிதாபம்’ அரங்கேறியுள்ளது.

பெண்ணினத்தைப் போற்றினாலும், நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயையே அனைவரினும் மேலானவராக[“தெய்வத்துக்கு இணையாக...” என்பாரும் உளர்] மதிக்கிறோம்.

நம் தாய்மொழியாம் தமிழையும் அந்தத் தாய்க்குச் சமமாகத்தான் போற்றி வணங்குகிறோம்.

தமிழக வரலாற்றில் நேற்றுவரை[ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை] இதுதான் நடைமுறையாக இருந்தது. தேசியக் கீதத்துக்கு முதலிடம் தரவேண்டும் என்னும் நடுவணரசின் ஆணை பொருட்படுத்தப்படவில்லை. அது விழாவின் இறுதியில் பாடப்பட்டது. நடுவணரசும் கண்டுகொள்ளவில்லை.

நடிகன் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் நம் தாய்மொழி தமிழ் அவமதிக்கப்பட்டுள்ளது[தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருந்தால் பதவி ஏற்பு விழாவை ஆளுநர் ரத்து செய்திருப்பாரா? வாய்ப்பே இல்லை].

‘பாஜக’வுடன் நட்புக்கொண்டுள்ள ‘அதிமுக’ தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றிருந்தாலும்[‘திமுக’வுடன் இணைந்து] தமிழுக்கு இப்படியொரு அவமதிப்பு நேர்ந்திருக்காது என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்கென்றே ‘விஜய்’யை ஆதரித்த ‘விசிக’ தலைவர் திருமாவளவன்[என்றும் குறையாத தமிழ்ப் பற்றுடன் 100% தமிழனாக வாழ்பவர்] அவர்கள்  விழிப்புணர்வு பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்டாலினுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள இந்தியத் தேசிய முஸ்லிம் லீக் கட்சியினருடன் இணைந்து, மே 13 அன்று[‘தவெக’  அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாள்] செயல்பட்டால், தமிழினத் துரோகி ‘விஜய்’ தமிழை அவமானப்படுத்துவது இனியும் நிகழவே நிகழாது[பதவி பறிபோவதால்].

என்ன செய்யப்போகிறார் தமிழன் திருமாவளவன்?

சனி, 9 மே, 2026

தனிப்பெரும் தலைவர் ‘திருமா’வுக்குத் ‘திருஷ்டி’ சுத்திப்போடுங்கப்பா!!!

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, ‘தவெக’ விஜய் கட்சி பெரும்பான்மை பெறுவதற்கான பேரத்தில் அயாராமல் ஈடுபட்டிருக்கும் சூழலில்.....

‘விசிக’ தலைவர் திருமாவளவன் தன் நிலைப்பாட்டைச் சற்று நேரத்தில் அறிவிப்பார் என்று, இவருக்கு அடுத்த கத்துக்குட்டித் தலைவர்கள் சொல்லுவதாக, இன்று காலையிலிருந்தே ஊடகங்கள் செய்தி வெளியிட்டவாறு உள்ளன.

பல மணி நேரம் கழிந்தும் திருமா திருவாய் மலர்ந்தருளவில்லை.

‘சிறிது நேரம்’ என்பது சில நிமிடங்களா, பல மணி நேரமா? ‘விசிக’வின் க.கு.தலைவர்கள் விளக்கம் அளிப்பார்களா?

இவருடைய[திருமாவளவன்] முடிவை ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் பதற்றத்துடன் எதிர்பார்ப்பதை வைத்து, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மேல் மட்டத் தலைவராக இவர் உயர்ந்துவிட்டார் என்று சொல்லாம்.

இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை[‘திமுக’வுடன் கூட்டணி சேர்ந்து பெற்றவை]க் கைவசம் வைத்துள்ள இவர் பெற்றுள்ள உயர் அந்தஸ்து நம்மை வியக்க வைக்கிறது.

திருமா மாபெரும் அதிர்ஷ்டசாலி.

இதற்காக நாம் இவர் மீது பொறாமைப்படவில்லை. மாறாக.....

‘தவெக’ அமைச்சரவையில் பங்கு, உதவி முதல்வர் பதவி, முதல்வர் பதவி[+வைட்டமின் ‘ப’] என்றிவற்றில் எது வேண்டும் என்று விஜய்யிடம் சொல்லிப் பேரத்தை முடிக்கலாமே[ஆதரவு இல்லை என்றும் அறிவிக்கலாம்]? ஏன் நாட்கணக்கில் எதிர்பார்க்க வைத்து மக்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கிறார்?

தன் முடிவை எதிர்பார்த்து நாடே காத்திருப்பதில் பெறும் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் நாட்கணக்கில் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா?

தனிப்பெரும் தலைவர் திருமாவளவனுக்கே வெளிச்சம்!

வெள்ளி, 8 மே, 2026

பொறுக்கிகளின் புகலிடம் ஆனது தமிழ்நாடு அரசியல் களம்!!!

2026 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில்,  ‘அதிமுக’, ‘தவெக.’ ஆகிய இரு அணிகளுக்கிடையே, பற்றாக்குறை[தேவை 118 உறுப்பினர்கள்] ஆதரவாளர்களைப் பெறுவதில் மிக மிக மிகக் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘தவெக’க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

மார்க்ஸ் கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் அதற்குக் கிடைத்துள்ளது. 

திருமாவளவனின் ‘விசிக’வின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே நடிகர் ‘விஜய்’யால் ஆட்சியமைக்க இயலும்.

அதைத் தடுக்கும் வகையில், ஆட்சியமைக்க முயலும் ‘அதிமுக’ அணி திருமாவளவனின் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக ஆசை காட்டியுள்ளது.

அந்தப் பதவிக்குத் திருமாவளவன் ஆசைப்படுவதைத் தடுத்துத் தங்களின் ஆதரவாளராக்க, அவருக்குத் துணை முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்திருக்கிறது ‘தவெக.’ கட்சி.

234 உறுப்பினர் அடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ள திருமாவளவனுக்கு[வேறு யாராக இருந்தாலும்] இத்தனை முக்கியத்துவமா?

இப்படியொரு கேள்வியை எழுப்பி விடை தேடுவது நம் நோக்கமல்ல.

‘எத்தனை எத்தனையோ உயர் பண்பாளர்களும் நேர்மையாளர்களும் கடமையுணர்வு படைத்தவர்களும் நிறைந்திருந்த தமிழ்நாட்டு அரசியலில், பதவிக்காக எப்படியெல்லாமோ பேரம் பேசும் கழிசடைகள் வந்து புகுந்துவிட்டார்களே’ என்னும் நம் வேதனையை வெளிப்படுத்தவே இந்தப் பதிவு.

தமிழ் மக்களைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை[இருந்தால்] வேண்டுகிறோம்!

அறிவுமணியான ஜோதிமணி[காங்கிரஸ்] கொஞ்சம் சிந்திப்பாரா?

‘அதிமுக’வும் ‘திமுக’வும் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக உலவும் வதந்தியைக் கருத்தில்கொண்டு, “எதிரியின் எதிரி நண்பன்; எதிரியும் எதிரியும் நண்பர்கள் ஆவது எப்படி?” என்று பக்கா காங்கிரஸ்காரி[ரர்?] ஆன ஜோதிமணி[காங்கிரஸ் கட்சியில் நடுநிலை உணர்வுடன் செயல்படுகிற ஒரே ஒரு புத்திசாலி]  அசத்தலான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சம் யோசித்திருந்தால்.....

‘எதிரிகளான இருவரையும் அழிக்க மூன்றாவதான ஒரு பொது எதிரி உருவாகும்போது இவர்கள் இருவரும்[எதிரியும் எதிரியும்] இணைவதைத் தவிர வேறு வழியில்லை’ என்பது அறிவுமணியான ஜோதிமணிக்குப் புரிந்திருக்கும்.

புரிந்துகொண்டிருந்தால் முன்வைத்த கேள்வியைத் திருப்பப் பெறுவார் என்று நம்புகிறோம்.


வியாழன், 7 மே, 2026

பெண்களால் சீர்குலைந்து சிதைந்த தமிழ்நாடு அரசியல் களம்!!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெண்களின் பாதுகாப்புக் குறித்தும், அவர்களின் மேம்பாடு குறித்தும் ‘தவெக’ தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நம்பி, பெண்கள் பெருமளவில் அவருக்கு வாக்கு அளித்ததே அவரின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது என்பதை ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் மூலம் அறிய இயலுகிறது.*

நம் குடும்பப் பெண்களில் பெரும்பாலோருக்கு[வீட்டிலேயே அடைந்து கிடப்பதால்] நாட்டு நடப்பையும் மனிதர் இயல்புகளையும் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவு; சினிமா நடிகர்கள் மீதான நம்பிக்கை மிக அதிகம்[“பெண்கள் தங்களின் கணவர்கள் சொன்னாலும் பொருட்படுத்தாமல் எனக்கே வாக்களிப்பார்கள்” என்று முன்னாள் முதல்வரான ‘எம்.ஜி.ஆர்’ பகிரங்கமாகப் பேசியது இங்கு நினைவுகூரத்தக்கது].

இந்தக் குறைபாடுதான் நடிகர் விஜய் பேச்சை முழுமையாக நம்பி அவர்கள் அவருக்கு வாக்களித்ததற்கான காரணம் ஆகும்.

விளைவு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் நிலையானதொரு ஆட்சி அமைக்க இயலாத அவலம் நிலவுகிறது.

இனியேனும் பெண்கள், தொலைக்காட்சித் தொடர்களை மட்டுமே[+ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்] பார்ப்பதோடு அமையாமல், வெளியாகும் பலதரப்பட்ட செய்திகளையும் வாசித்துத் தங்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது.

*//தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றம் இன்று 2026 மே 4 அன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பொதுவாகத் தமிழகத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். ஆனால், 2026 தேர்தல் களம் மொத்தமாக மாறிப்போயுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

எந்தக் கருத்துக் கணிப்புகளும் கணிக்காத இந்த அதிரடித் திருப்பத்திற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது 'பெண்கள் வாக்கு' மட்டுமே. விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது "பெண்களின் பாதுகாப்பு" என்பதையே தனது பிரதான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தார்//

புதன், 6 மே, 2026

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ‘வடக்கன் ராகுல் காந்தி’யின் ஆதிக்கம்!!!

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் முயற்சியில் ‘தவெக’ தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

கூடுதலாகத் தேவைப்படும் 11 உறுப்பினர்களைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும்[இது குறித்த கவலை நமக்கில்லை] என்பது குறித்துப் பலதரப்பட்ட அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துவரும் நிலையில்.....

விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து, கிரிஸ் சோடங்கர்[வடக்கன்] அறிவிப்பார்’ என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சொல்லிக்கொண்டிருக்கிறார்[செய்தி].

தமிழ்நாடு ‘பாஜக’வைப் பொருத்தவரை வடக்கன்களே[மோடி, அமித்ஷா.....] ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகையை[“ராகுலின் முடிவே எங்கள் முடிவு”> அடிமை செல்வப் பெருந்தகை] முற்றிலுமாய் ஓரங்கட்டி, கிரிஸ் சோடங்கர், மல்லிகார்ஜுன் கார்கே போன்றவர்கள் மூலம் வடக்கன்  ராகுல்காந்தி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது தமிழராய்ப் பிறந்த அத்தனைப் பேருக்கும் தலைக் குனிவை ஏற்படுத்துகிறது.

‘பாஜக’வோ காங்கிரஸ்ஸோ கட்சி எதுவாயினும், தலைமை வகிக்கும் தமிழினத் தலைவர்கள் வடக்கன்களின் அடிமைகள் என்னும் அவல நிலையிலிருந்து மீள்வது எப்போது?

எப்போது? எப்போது? எப்போது?

செவ்வாய், 5 மே, 2026

“விஜய், பக்தி போதும்; பகுத்தறிவாளன் என்பதை உறுதிப்படுத்துங்கள்”!

“நான் மதச் சார்பற்றவன்” என்று அறிவித்து, கோயில் கோயிலாகச் சென்று சாமிகளைத் துதி பாடாமல் இருந்திருந்தால், விஜய் எம்மதத்தவர் என்னும் கேள்வியே எழுந்திக்காது. இன்றளவும் இவரின் மதம் குறித்த தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து நிகழ்கிறது.

கீழே இடம்பெற்றுள்ள இரு படப் பதிவுகளில், ஒன்றில் இவர் ‘இந்து’ என்றும் மற்றொன்றில் ‘கிறித்தவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.


இவர் கிறித்தவர்தான் என்று திட்டவட்டமாக மக்கள் முடிவெடுத்துத் தன்னைப் புறக்கணித்துவிடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, இந்து, இஸ்லாம் கோயில்களுக்கெல்லாம் சென்று, அனைத்து மதச் சாமிகளையும் வழிபடுகிறவன் என்று தன்னை அடையாளப்படுத்தினார்; படுத்துவார்.

இனியேனும், கோயில்களுக்குச் சென்று வழிபடும்போதெல்லாம், அதைப் படம் எடுத்து ஊடகங்களில் காட்சிப்படுத்தாமலிருப்பது வரவேற்கத்தக்கது[தனிப்பட்ட முறையில் நாட்டிலுள்ள அத்தனைக் கோயில்களுக்கும் இவர் போகலாம். தடுப்பாரில்லை].

காட்சிப்படுத்தினால்.....

இவரைப் போலவே இவரின் பக்தர்களும் பக்திப் பித்தர்களாகி, சுயமாகச் சிந்திக்கும் திறனை முற்றிலுமாய் இழப்பார்கள்.

மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள விஜய் தன்னை அதி தீவிரப் பக்தனாக அல்லாமல்,  ஆழ்ந்து சிந்திக்கும் பகுத்தறிவாளனாக காட்சிப்படுத்துவது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்.

‘விஜய்’யின் ‘தவெக.’கட்சி ஆட்சியின் ஆயுட்காலம் வெகு அற்பம்!!!

தமிழ்நாடு தேர்தலில் விஜய் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 108. எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு, தனிப்பெரும் கட்சி என்னும் சாதனையை இவர் நிகழ்த்தியிருந்தாலும், ஆட்சியமைக்க மேலும் 11[108 -1 = 107. இவர் வென்ற ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வதால்] றுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆதரிக்க வேண்டிய 11 பேருமே இவரின் கொள்கைகளையும், ஆட்சி அமைத்தால் நடைமுறைப்படுத்துவதாக இவர் அறிவித்தத் திட்டங்களையும் எதிர்த்துப் பரப்புரை செய்தவர்கள்.

சுருங்கச் சொன்னால், அவர்கள் இவரின் நிரந்தர அரசியல் எதிரிகள்.

அந்த எதிரிகளில் 11 பேரின் ஆதரவில்தான் இவர் ஆட்சி நடத்த வேண்டியுள்ளது.

ஆதரவு தருவதற்கு ஒத்த கருத்துள்ள கட்சிக்காரர்களே பிரதி பலனை எதிர்பார்க்கும் நிலையில், அந்த 11 ஆதரவாளர்களின் ‘எதிர்பார்ப்பு’ மிக மிக அதிகமாகவே இருக்கும். அவற்றை இப்போதைக்கு  நிறைவு செய்தாலும்.....

ஆட்சி தொடரும்போதும் அவர்களின் எதிர்பார்ப்பும் ‘தொடர் கதை’யாகத்தான் இருக்கும் என்பதால், ஐந்தாண்டுக் காலமும் அவர்களைத் திருப்திப்படுத்திக்கொண்டே ஆட்சி நடத்துவது அத்தனை எளிதல்ல.

ஆகவே,

‘தவெக’ விஜய் ஆட்சிப்பீடம் ஏறினாலும், அதன் ஆயுட்காலம் நீடிக்க வாய்ப்பில்லை; அது வெகு அற்பம்தான் என்று உறுதிபடச் சொல்லலாம்!

திங்கள், 4 மே, 2026

தமிழ்நாடு தேர்தல்... 100% வெற்றி மோடிக்கே!!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று[04.05.2026] பகல் 12.00 மணி நிலவரப்படி, ‘தி.மு.க.’ கூட்டணி படு தோல்வியைத் தழுவியுள்ளது[58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை].

69 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள ‘அதிமுக’ கூட்டணிக்கும் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பே இல்லை.

‘பிரபல நடிகரின் ‘தவெக’வும், 107[பகல் 12 மணி நிலவரம்] இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்றுவது அசாத்தியம்தான்.

தனிப் பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் ‘தவெக’வும் ‘அதிமுக’வும் இணைந்தால்[இரு கட்சிக்காரர்களும் மிகக் கடுமையாக மோதிக்கொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனாலும், சுயநலவாதிகளின் ஆதிக்கம் அரசியலில் மேலோங்கியுள்ள நிலையில் இதுவும் நடக்கலாம்] ஆட்சியமைக்கலாம்.

இவர்கள் இணைந்து ஆட்சியமைத்தாலும், நடிகர் தனித்து ஆட்சியமைத்தாலும், இவர்களால் தொடர்ந்து ஆள முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இந்த இருவரின் குடுமிகளும் ‘பாஜக’ அதிபதி மோடி கையில் உள்ளதால் நீடிக்க அனுமதிக்கமாட்டார். அனுமதித்தாலும், அவர் குரங்காட்டியாகவும் இவர்கள்[அதிமுக & தவெக] அவர் சொன்னபடியெல்லாம் ஆடும் குரங்குகளாகவும்தான் இருப்பார்கள் என்பது உறுதி.

ஆக,

தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ‘திமுக’வோ, ‘அதிமுக’வோ ‘தவெக’வோ அல்ல; ‘பாஜக’[மோடி] மட்டுமே.

இனி தமிழ்நாட்டின் ‘தலைவிதி’ மோடி கையில்!

ஞாயிறு, 3 மே, 2026

எங்கள் ஊர் ஆஞ்சநேயர் அழைக்கிறார்! வடை மாலை சாத்த வாருங்கள் விஜய்!!

 

23.4.2026இல் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் என்பது பிரபல நடிகர் ‘விஜய்’ அவர்களின் கனவாக உள்ளது.

மக்கள் பெருமளவில் வாக்களித்துத் தமிழ்நாட்டின் முதல்வராகத் தன்னை ஆக்குவார்கள் என்னும் நம்பிக்கை இல்லாததால், தன் பூர்வீகக் கடவுளான கர்த்தர் மட்டுமல்லாமல், இஸ்லாம் மசூதி, இந்துக் கோயில்கள், மனித அவதாரக் கடவுள் சாயி பாபா குடியிருக்கும் சீரடிக் கோயில் என்று அலைந்ததும் அலைவதும்[ஆதாரம்: மேற்காணும் செய்தி] விஜய் செய்த மாபெரும் தவறு.

காரணம், தன்னை மட்டுமே நம்பாமல் கண்ட கண்ட சாமிகளைத் தேடிப் போவதால், ஒவ்வொரு சாமியும் கடும் கோபத்திற்கு ஆட்பட்டு நடிகரைக் கண்டுகொள்ளாமல் இருந்திட வாய்ப்புள்ளது.

ஆகவே, 100% நம்பத்தக்க எங்கள் ஊர்க் கடவுளான[உலக அளவில் கோடானுகோடி மனிதர்களால் போற்றி வழிபடப்படுபவர்] ஆஞ்நேயர் எனப்படும் அனுமார் சாமியை வடை மாலை சாத்தி வழிபட்டால், விஜய் தமிழ்நாடு முதல்வர் ஆவது உறுதி.

குறைந்தபட்சம் ஒரு லட்சத்து எட்டு[1,00,008] வடைகளோ[மெதுவடை] அதற்கும் மேலேயோ கோத்த வடைமாலை சாத்தி வழிபடுகிறவர், கண்ட கண்ட சாமிகளைத் தேடிப்போகிற தவற்றைச் செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், அவரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறவர் வடைமாலைப் பிரியரான[வெறியர் என்றும் சொல்லலாம்] நாமக்கல் ஆஞ்சநேயர்.

இது உலகறிந்த உண்மை.

ஆகவே, நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருப்பதால், தலைவர் விஜய் அவர்களை, இன்றே நாமக்கல்லுக்கு வாடைமாலையுடன் வருகை புரிந்து[எவரும் அறியாமலிருக்க நடுநிசி வருகை மிகச் சிறந்தது]  ஆஞ்சநேயரை வழிபடுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

வாழ்க விஜய்! பல்லாண்டு பல்லாண்டு அவர் ஆட்சி நீடிக்க அகிலம் புகழ் ஆஞ்சநேயர் அருள்புரிவாராக!!

வெள்ளி, 1 மே, 2026

அடடா, அடிமை எடப்பாடி இத்தனைப் புத்திசாலியா?!

 “..... 'தோற்கப்போகிறோம்' என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, இப்படியான[திமுக ஆட்சியமைக்கும்] கருத்துக் கணிப்புகளைத் திட்டமிட்டு வெளியிடுவதன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதாவது, திமுக வெல்லப்போகிறது என்ற மாயப் பிம்பத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து[தில்லுமுல்லு சாத்தியம் இல்லையென்றால்] தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் திமுக-வினர் முயற்சி செய்வார்கள்....."[https://tamil.abplive.com/news/tamil-nadu/eps-releases-statement-says-dmk-s-fraud-drama-will-not-work-out-and-admk-will-surely-win-258015#google_vignette] என்பது செய்தி.

தமிழ்நாடு தேர்தலுக்குப் பின்னரான ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள்[‘தி.மு.க.’வுக்குச் சாதகமானவை] வடக்கன்களின் நிரந்தர அடிமையான எடப்பாடிப் பழனிச்சாமியைப் பீதிக்கு உள்ளாக்கிவிட்டன.

வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தேனும் ‘அதிமுக’ கூட்டணி வெல்ல வேண்டும் என்று தன் தலைவன் மோடியிடம் சொல்ல நினைத்தார்.

நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்துதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்.....

“தமிழ்நாடு தேர்தலில் எங்கள் பாஜக வேட்பாளர்களில் ஒரே ஒருவர் வென்றாலும் அவருக்கு உங்கள் அமைச்சரவையில் இடம் தர வேண்டும்” என்பதாக நிபந்தனை விதிப்பார் மோடி என்பதால்.....

வாக்கு எண்ணிக்கையில் ‘திமுக’ தில்லுமுல்லு செய்யும் என்று சொல்லி, ஓட்டுத் திருட்டில் கில்லாடியான நீங்கள் அதைச் செய்து[தேர்தல் ஆணையத்தைத் தன் வசம் வைத்துள்ள மோடிக்கு மட்டுமே அது சாத்தியம்] நம் கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மறைமுகமாக அறிவுறுத்தியிருக்கிறார் அதி புத்திசாலி எடப்பாடி.

தங்களுக்கான வெற்றிச் செய்தியைப் பேராவலுடன் எதிர்பார்க்கிறார் அவர்!

வியாழன், 30 ஏப்ரல், 2026

இதயத் துடிப்பு 'திடீர்’ நிறுத்தம்[Sudden Cardiac Arrest]?

க்கள் பெரும்பாலும் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஆகிய சொற்களை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்துகின்றனர். இந்த இதயச் சிக்கல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக இருந்தாலும், இவை மூன்றும் வேறு வேறானவை.

மாரடைப்பு[Heart Attack]: இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தக் கட்டிகள், தமனித் தடிப்பு, கொழுப்புப் படிவுகள் ஆகியவை தமனிகளை அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

மாரடைப்பின்போது, இதயம் தொடர்ந்து துடிக்கும். ஆனால், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் அந்த உறுப்பை அடைய முடியாது. ஒருவர் சிகிச்சை பெறாமல் எவ்வளவு காலம் இருக்கிறாரோ, அந்த அளவிற்கு இதயத்திற்குச் சேதம் அதிகமாகும்.

இதன் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடலாம். அறிகுறிகளில் மார்பு வலி, மூச்சுத் திணறல், குளிர் வியர்வை, குமட்டல், வாந்தி ஆகியவை அடங்கும்.

இதயச் செயலிழப்பு[Heart Failure]: இதயத்தால் உடல் முழுவதும் போதுமான இரத்தத்தைச் செலுத்த இயலாத நிலை 'இதயச் செயலிழப்பு' எனப்படுகிறது.

கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இதயச் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதயத்தின் ‘இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன்’ குறையும்போது, இரத்தமும் திரவமும் நுரையீரலுக்குள் பின்னோக்கிச் செல்லக்கூடும். இதன் விளைவு பாதங்கள், கணுக்கால்கள், கால்கள் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படலாம்.
இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம்[Sudden Cardiac Arrest]: இது இதயத்தின் மின் சமிக்ஞைகளில் ஏற்படும் குழப்பத்தால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக ஆகி, இதயம் ரத்தத்தைப் பம்ப் செய்யாமல் நடுங்கும் நிலையாகும்.

அரித்மியாஸ் எனப்படும் அசாதாரண இதயத் துடிப்புகள், இதயம் மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ துடிக்க அல்லது முற்றிலும் துடிப்பதை நிறுத்தக் காரணமாகலாம்.

அரித்மியாவால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, இதயம் முற்றிலும் துடிப்பதை நிறுத்தும்போது, அது இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்புடையவை: கரோனரி இதய நோய், உடல் ரீதியான மன அழுத்தம், பரம்பரைக் கோளாறுகள் ஆகியவை. அறியப்படாத காரணமின்றியும் இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஏற்படலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதயத் துடிப்பு நிறுத்தம் ஏற்பட்ட ஒருவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
இதயத் துடிப்பு நின்றதற்கான அறிகுறிகள்: சுயநினைவு இழப்பு, சுவாசிக்க இயலாமை. விரைவாகச் சிகிச்சை அளித்தால், நின்றுவிட்ட இதயத் துடிப்பைச் சரிசெய்ய இயலும்.

=====================

புதன், 29 ஏப்ரல், 2026

என் படைப்புகளைப் பிரபலப்படுத்தும் 'Quora' பதிவருக்கு நன்றி!

கந்தன் ஸ்ரீ [பல்சுவை கதம்பம்[https://kantan.quora.com/]

Innovave Goods-இல் Operation Manager20 ஏப்.

*கடவுள்*

ஆசிரியர்: 'பசி'பரமசிவம்

பகிர்வு: அ.கந்தன்

🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷

கேடுகெட்ட மானிடரே![&*கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!* &*கடவுளைக் காக்கும் தாய்க்குலம்!* ... போன்றவை] 

*பிறவி ஏன்? இன்ப துன்பங்கள் ஏன்? மரணம் ஏன்?*

மனிதனுக்குச் சிந்திக்கும் திறன் வாய்க்கப் பெற்ற அந்த நாள் முதல் இந்த நாள் வரை இக்கேள்விகளுக்கு விடையில்லை.

பஞ்ச பூதங்கள் ஏன்? பிரபஞ்சம் ஏன்? உலகங்கள் ஏன்? உயிர்கள் ஏன்?...... என்றிப்படி மனித அறிவால் விடை காண முடியாத ஏன்கள் எத்தனையோ உள்ளன.

நடுநிலை பிறழாமல், ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த அறிவியல் அறிஞர்கள் பலரும், சிந்தனையாளர்களும் தருகிற ஒரே பதில்.....

“தெரியவில்லை” என்பதுதான்.

மனித உருவில் பிறந்து வாழும் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான்; விதி விலக்கானவர் எவருமில்லை.

நாம் எல்லோருமே உண்பதும் உறங்குவதுமாய் வாழ்ந்து ஒரு நாள் மண்ணில் கலப்பவர்கள்தான்.

அதன் பிறகு என்ன ஆவோம் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே,

சிறு நீர் பெய்து மலம் கழித்து வாழ்ந்த மனித ஜென்மங்களை மகான்கள் என்றும், கடவுளின் அவதாரங்கள் என்றும் போற்றித் துதி பாடியவர்கள்... பாடுபவர்கள் மனித சமுதாயத்தின் விரோதிகள்.

அவர்கள் திருத்தப்படுதற்கு உரியவர்கள்.

*தொடரும்*

'Quora' பதிவர்:

கந்தன் ஸ்ரீ

கல்லிடைக்குறிச்சி

Innovave Goods-இல் Operation Manager

Govt her sec school-இல் படித்தார்; 1989 ஆண்டு பட்டம் பெற்றார்

வசிக்கும் இடம்: கோயம்புத்தூர் நகரம், தமிழ்நாடு, இந்தியா2024–தற்போது வரை

7.9மி உள்ளடக்கப் பார்வைகள். இந்த மாதம் 83.6ஆ

இவர் 41 களங்களில் செயல்படுகிறார்.