மேற்கண்ட காணொலியை வெளியிட்டது ‘பாலிமர்’ என்னும் பெயருடைய தொலைக்காட்சி.
நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில், ஒரு முதல்வராக ஜோசப் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். கோட்டு அணியாமல் வெகு இயல்பாகக் காட்சியளிக்கிறார்; சிக்கனமாகச் சிரித்து[முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியவெல்லாம் இல்லை] அவையில் உள்ளவர்களைக் கும்பிட்டு வணக்கம் சொல்கிறார்; அவைத் தலைவருக்குத் தனியாக ஒரு கும்பிடு போடுகிறார்; தனக்கே தனக்கான இருக்கையில் அமர்கிறார்; பின்னிருக்கையில் உள்ளவர்களைப் பார்த்துக் கொஞ்சம் பற்கள் தெரிய மீண்டும் சிரிக்கிறார்.
இவை அவரின் வழக்கமான செயல்பாடுகள்தான். குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.
ஆனால் பாலிமரோ, அவர் மகிழ்ச்சியுடன் ‘மாஸ் என்ட்ரி’ தந்ததாகக் குட்டித் தலைப்பில் குறிப்பிட்டுக் குதூகலிக்கிறது.
எதற்கு?
அவரைக் ‘குஷி’ப்படுத்தவா?
படுத்தாவிட்டால் அடுத்தடுத்து ‘அன்பளிப்புகள்’ பெறுவது தடைப்படுமா?
இன்றைய ஊடகங்கள்[தமிழ்] பாலிமர் போலவே ‘அண்டிப் பிழைக்கும்’ அசிங்கத் தொழில்தான் செய்கின்றன. அதாவது, நடுநிலை உணர்வுடன் இயங்கும் ஊடகம் இல்லை என்றே சொல்லலாம்!