திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சுட்டெடுத்த அதிரடி சிறு குறு ‘குபீர்’ சிரிப்புக் கதை!

                                                              நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை, வழக்கமாக நான் ‘விரதம்’ இருக்கும் நாள்.”
**********
***சுட்டுக்கொள்ள அனுமதித்தவர் பெயர், கதை[பழசு] இடம்பெற்ற இதழ் போன்ற விவரங்களைக் குறித்துவைக்கவில்லை. ஹி... ஹி... ஹி!!!