தனக்குத்தானே ‘சத்குரு’[கடவுளின் குரு]என்று பட்டம் கொடுத்து, உலகை நம்பச் செய்த மோசடிப் பேர்வழி ஜக்கி வாசுதேவன்.
தன்னைத் தேடிவரும் அப்பாவிகளிடம் லட்சங்களில் பணம் வசூலித்துக் கோடிகளில் புரள்பவர் இந்த நபர்.
சொகுசுக் கார்கள் என்றில்லாமல் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் உல்லாசப் பேர்வழியும்கூட.
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி இந்த ஆசாமியின் சீடர்கள் 80 பேர் காணாமல் போயிருந்தால், ஹெலிகாப்டரில் அங்குச் சென்று, வானத்தில் வட்டமிட்டபடி மந்திரம் ஓதியிருந்தால், வெள்ளம் வடிந்து அத்தனைப் பேரும் மீண்டு வந்திருப்பார்களே, ஏன் செய்யவில்லை?[வெள்ளியங்கிரியிலிருந்தும் இதைச் செய்திருக்கலாம்.]
“கடவுளின் குரு என்று சொல்லிக்கொண்டு கண்ணீர் வடிப்பது போல் காணொலி வெளியிட வெட்கமாக இல்லையா ஜக்கி? இப்படியொரு காணொலி[பொய்யான செய்தி?] வெளியிட்டது, காணாமல்போயிருந்த உம்மை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கான உத்தியா சத்துக்குருவே?”
இந்த ஆளின் நீலிக் கன்ணீர் குறித்து ஏராளமான வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துரைகள் அவசியம் வாசிக்கத்தக்கவை. குறிப்பிடத்தக்கனவற்றை மட்டும் இங்கு இணைத்திருக்கிறேன்[திருத்தங்கள் செய்யப்படவில்லை]. வாசியுங்கள்.



@Pubtag-dy6kq
22 hours ago