எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 21 நவம்பர், 2021

'ஜெய் பீம்'... வன்னியர் சங்கப் போராட்டமும் பின்னி எடுக்கும் Dr.ஷர்மிளாவும்!!

*'இந்த வருடத்தின் மிக சிறந்த  நேர் காணல் இது.'

*'மிகத் தெளிவான நடு நிலையான ஒரு சமூகப் பிரதிநிதியாக இருந்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த சகோதரி Dr. ஷர்மி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்👏👏👏🙏💐🙏

*'இதைவிடத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.'

*'Doctor,  you are great.  You are aware of base level problems not addressed by politicians.'

*'100% உண்மை சகோதரி🙏. வாழ்த்துக்கள்.'

*'மரு.சர்மிளா... உங்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்...🙏🙏🙏🙏

*'ஷர்மிளா மேடம், இவ்வளவு தெளிவான உங்கள் கருத்துக்களுக்குத் தலைவணங்குகிறேன்.'

*'Dr.சர்மிளா போல, தெளிவான பேச்சை இதுவரை யாரும் பேசியதில்லை. கிளிட்சின் 28-04 மணிநேரலை நேரம் போனதே தெரியல. திரும்பத் திரும்பக் கேட்கும் அளவுக்கு இருந்தன சகோதரி சர்மிளாவின் எகிறி அடித்த பதில்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.'

*'டாக்டர் சர்மிளா! 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த சர்மிளாவா இவர்?. எத்தனை மெச்சுரிட்டி, எத்தனை சிந்தனை, எத்தனை  அறிவு! வாழ்க. வளர்க!'

*'Excellent excellent speech exactly 💯 percent true 👏👏👏👏👏👏👍

*'Greatly appreciate your bold clear knowledgeable and thoughtful talk.'

*'Great, bold and beautiful interview. Hats off doctor.'

*'No word's just Iron Lady'🔥

*'தமிழர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. காலண்டரைப் பார்த்தாலும் தெரிந்திருக்காது.'

*'அருமையான கருத்து. நான் என்ன நினைக்கிறேனோ  அதையே  mdm  ￰சொல்றாங்க .சூப்பர் மேடம்.'

*'வீரமங்கை! இதோடு ஓயாமல் நியாயமான விஷயங்களுக்கு உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!'

மேற்கண்ட ஆகச் சிறந்த பல பாராட்டுகளைப் பெற்றவர் டாக்டர் ஷர்மிளா அவர்கள். 

'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எதிரான வன்னியர் சங்கங்களின் போராட்டம் பற்றி இவர் தந்த பேட்டியின் 'காணொலி' வடிவம்:

==========================================================================

இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!


'ஜெய் பீம்' திரைப்படம் உண்மையில் வன்னியர் இனத்தை இழிவுபடுத்தியிருந்தால், அறவழிப் போராட்டங்கள் மூலம் அதைத் தடை செய்துவிட முடியும்.

அக்கினிக் கலசக் காலண்டர் இடம்பெற்றது தவறு என்றார்கள். அது படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. 'குருமூர்த்தி என்னும் வில்லன் பாத்திரம், தங்களின் ஜாதியைச் சேர்ந்த 'காடுவெட்டி' குருவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது; மன்னிப்புக் கேட்பதோடு அவர் தொடர்பான காட்சிகளையும் நீக்க வேண்டும்' என்கிறார்கள்.

காடுவெட்டி குரு மிகவும் நல்லவராம்; மாவீரனாம். இருக்கட்டும். மகிழ்ச்சி!

அந்த நல்லவருக்குரிய இயல்பான உருவ அமைப்பு, வாழ்விடம் போன்றவற்றின் பின்னணியில் அவரைப் படத்தில் நடமாடவிட்டு, பின்னர் அவரை வில்லனாக உருவகப்படுத்தியிருந்தால் வன்னியர் சங்கங்களின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக நம்பலாம்.

காடுவெட்டி குரு முழுக்க முழுக்க நல்லவர். 'ஜெய் பீம்' குரு முழுக்க முழுக்கக் கெட்டவர்[வில்லன்].

எந்த அடிப்படையில், இறந்துவிட்ட அந்தக் குருவும் படத்தில் வருகிற வில்லன் குருவும் ஒருவர்தான் என்று சாதிக்கிறார்கள்? 'குரு' என்னும் பெயருக்குக் 'காப்பிரைட்' உரிமையை இவர்கள் பெற்றிருக்கிறார்களா என்ன? 

காடுவெட்டி குரு நல்லவர் என்பதில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?!

இவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் மட்டுமல்லாமல், மிகச் சிறுபான்மையராக வாழும் ஊர்களில்கூட, சாலைச் சந்திப்புகளிலும் தெருக்களிலும் ஜாதிக்கொடி நட்டும், தலைவர்களின் படத்துடன் பெயர் பொறித்தும் தங்களைப் பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்வது இவர்களின் வழக்கம்.

இது தொடர் நிகழ்வாக இருக்கும்போது, இவர்களின் கொடியோ தலைவர்களின் படங்களோ இடம்பெறாமல் திரைப்படப் படப்பிடிப்பை நடத்துவது எப்படிச் சாத்தியமாகும்? சிந்தித்தார்களா?

இம்மாதிரியான நடவடிக்கைகளைக்கூட அலட்சியப்படுத்திவிடலாம். ஆனால்.....

ஏற்கனவே ஒரு நபர் 'சூர்யாவை எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசளிப்பேன்' என்று அடாவடித்தனமாகப் பேசிய நிலையில், காடுவெட்டி குருமூர்த்தியின் மகன், 'துப்பாக்கிப் போலீஸ் காவலுக்கிருந்தாலும் சூர்யாவைக் காப்பாற்ற முடியாது" என்று பேசியிருக்கிறார்.

'பொதுவெளியில் நடமாட அனுமதிக்க மாட்டோம்' என்று வன்னிய சங்கத்தவர் சிலர் எச்சரித்த நிலையில், யாரோ ஒரு படையாச்சியாம், 'சூர்யா வீட்டில் காவலுக்கிருக்கும் போலீசில் ஒருவர் வன்னியராக இருந்தால்.....' என்று கேள்வி எழுப்பி, 'இருந்தால் சூர்யாவை அவர் சுட்டுத்தள்ளுவார்' என்று கொலை வெறியைத் தூண்டும் விதமாகப் பேசியிருக்கிறார்.

ஊடகங்களில் சூர்யாவை ஆபாசமாகத் திட்டி அவர் மீதான தங்களின் தாக்குதல் வெறியைத் தணித்துக்கொண்டிருக்கிறார்கள் வன்னிய சங்கத்தவர்கள்.

'லட்சம் பரிசு' என்று அறிவித்தவர் மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. மேற்கொண்டு நடவடிக்கை ஏதுமில்லை.

சூர்யாவைத் தாக்கத் தூண்டும் இவர்களின் அப்பட்டமானதும் மிகவும் ஆபத்தானதுமான பேச்சுகளைக் கேட்டும் கேட்காதது போல மௌனம் சுமந்து நிற்கிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், நம் மனதில் தோன்றும் ஒரு கேள்வி.....

"இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!" 

                                               *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================