ஆற்றங்கரை.
பித்ருதோஷம்[!!!] உள்ள ஒருவருக்கு வைதிகக் கருமம்[தர்ப்பணம்] செய்விக்கும் புரோகிதர்.....
வழக்கமான சடங்குகளுக்கிடையே, கிழக்கு முகமாக நின்று, புரியாத மொழியில் எதையோ முணுமுணுத்தவாறு, தன் இரு கைகளாலும் ஆற்று நீரை அள்ளி அள்ளி இறைத்தவாறிருந்தார்.
வழக்கமான சடங்குகளுக்கிடையே, கிழக்கு முகமாக நின்று, புரியாத மொழியில் எதையோ முணுமுணுத்தவாறு, தன் இரு கைகளாலும் ஆற்று நீரை அள்ளி அள்ளி இறைத்தவாறிருந்தார்.
அவருக்கு மிக அருகிலேயே விவசாயி ஒருவர் மேற்கு முகமாக நின்று, தமிழில் எதையோ முணுமுணுத்தவாறு தன் இரு கைகளாலும் நீரை வாரி வாரி இறைத்துக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த புரோகிதர், “என்ன இது? தர்ப்பணம் செய்யும்போது கிழக்கு முகமாகப் பார்த்து நீரை இறைத்தால்தான், அந்த நீர் மேல் உலகத்திலுள்ள நம் பித்ருக்கள்[முன்னோர்] மீது பட்டு அவர்களைப் பரிசுத்தம் ஆக்கும். நீ மேற்கு முகமாகப் பார்த்து இறைக்கிறாயே ?” என்று நக்கலாகக் கேட்டார்.
விவசாயி சொன்னார்: “நான் இறைப்பது மேற்குத் திசையிலுள்ள என் காய்கறித் தோட்டத்துக்கு.”
“தோட்டத்தைக் காணோமே” -இது புரோகிதர்.
“கொஞ்ச தூரத்தில் இருக்கிறது.”
“நீ இறைக்கிற நீர் அங்கே எப்படிப் போகும்?” என்று நகைத்தார் புரோகிதர்.
“நீர் இறைக்கிற நீர் எங்கோ இருக்கிற மேல் உலகத்துக்குப் போகும்னா பக்கத்தில் இருக்கிற தோட்டத்துக்கு ஏன் போகாது?” என்று மடக்கினார் விவசாயி.
அதிர்ச்சியடைந்த புரோகிதர் மறுமொழி சொல்லும் வகையறியாமல், “இதைப் பிரச்சாரம் பண்ணிடாதீர். என் வரும்படி போய்விடும்” என்றார் குரலில் பரிதாபம் பொங்க!
===============================================================================
குடியரசு 26.07.1925 இல் இடம்பெற்ற கதை. உதவிய நண்பர்: முனைவர் அ.ஆறுமுகம்[திருமழபாடி] அவர்கள்.
குடியரசு 26.07.1925 இல் இடம்பெற்ற கதை. உதவிய நண்பர்: முனைவர் அ.ஆறுமுகம்[திருமழபாடி] அவர்கள்.

