திங்கள், 1 மே, 2017

பெரியார் சொன்ன, புரோகிதரின் ‘பகீர்’க்’ கதை!!

ற்றங்கரை.

பித்ருதோஷம்[!!!] உள்ள ஒருவருக்கு வைதிகக் கருமம்[தர்ப்பணம்] செய்விக்கும் புரோகிதர்.....
வழக்கமான சடங்குகளுக்கிடையே, கிழக்கு முகமாக நின்று, புரியாத மொழியில் எதையோ முணுமுணுத்தவாறு, தன் இரு கைகளாலும் ஆற்று நீரை அள்ளி அள்ளி இறைத்தவாறிருந்தார்.

அவருக்கு மிக அருகிலேயே விவசாயி ஒருவர் மேற்கு முகமாக நின்று, தமிழில் எதையோ முணுமுணுத்தவாறு தன் இரு கைகளாலும் நீரை வாரி வாரி இறைத்துக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த புரோகிதர், “என்ன இது? தர்ப்பணம் செய்யும்போது கிழக்கு முகமாகப் பார்த்து நீரை இறைத்தால்தான், அந்த நீர் மேல் உலகத்திலுள்ள நம் பித்ருக்கள்[முன்னோர்]  மீது பட்டு அவர்களைப் பரிசுத்தம் ஆக்கும். நீ மேற்கு முகமாகப் பார்த்து இறைக்கிறாயே ?” என்று நக்கலாகக் கேட்டார்.

விவசாயி சொன்னார்: “நான் இறைப்பது மேற்குத் திசையிலுள்ள என் காய்கறித் தோட்டத்துக்கு.” 

“தோட்டத்தைக் காணோமே” -இது புரோகிதர்.

“கொஞ்ச தூரத்தில் இருக்கிறது.”

“நீ இறைக்கிற நீர் அங்கே எப்படிப் போகும்?” என்று நகைத்தார் புரோகிதர்.

“நீர் இறைக்கிற நீர் எங்கோ இருக்கிற மேல் உலகத்துக்குப் போகும்னா பக்கத்தில் இருக்கிற தோட்டத்துக்கு ஏன் போகாது?” என்று மடக்கினார் விவசாயி.

அதிர்ச்சியடைந்த புரோகிதர் மறுமொழி சொல்லும் வகையறியாமல், “இதைப் பிரச்சாரம் பண்ணிடாதீர். என் வரும்படி போய்விடும்” என்றார் குரலில் பரிதாபம் பொங்க!
===============================================================================
குடியரசு 26.07.1925 இல் இடம்பெற்ற கதை. உதவிய நண்பர்: முனைவர் அ.ஆறுமுகம்[திருமழபாடி] அவர்கள்.

9 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஹா.. சாதரண விடயம் இதனுள் எவ்வளவு பெரிய தத்துவம் அடங்கி உள்ளது

    இதுதான் பெரியார் அவரை புரிந்து கொள்ளாதோர் அனைவரும் சிறியார்.

    பதிலளிநீக்கு
  2. புரிந்துகொள்ளும் முயற்சி சிறிதும் இல்லாமல், இம்மாதிரி மூடத்தனத்தில் மூழ்கிக் கிடப்போர் பலராக இருக்கிறார்களே!

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. தண்ணீர் மண் வழியே கசிந்து போகும் ,ஆகாயம் வழியே மேலோகம் போக வாய்ப்பேயில்லையே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரோகிதரின் மந்திர சக்தியில் போகுமோ என்னவோ!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  4. இப்படிலாம் எடக்கு மடக்கா கேட்டா நீங்க டேஷ் துரோகி ஆகிடுவீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே ஒருதடவை இப்படிப் பயமுறுத்துனீங்க. மறுபடியுமா!?

      நன்றி ராஜி.

      நீக்கு
  5. விவசாயி அருமையான கேள்வி கேட்டார்.
    கடவுள் என்று இப்படியான விஷயங்களை நம்புவதை, தமிழர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்கள் என்று பெருமைபடுவோரும் உண்டு.

    பதிலளிநீக்கு
  6. நம்மவர்களிடம் போலி கவுரவம் அதிகம்.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு