எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 18 மே, 2024

இத்தனை அப்பாவியா அமித்ஷா?!

யாரேனும் தென் மாநிலங்களைத் தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை[இந்து தமிழ்].

பிரிவினை பற்றி ஒருவர் பேசியிருப்பது நம்மைப் போன்ற பரந்துபட்ட பொது அறிவுள்ள அறிவுஜீவிகளுக்கே[ஹி... ஹி... ஹி!!!] தெரியாது. இந்தியக் குடிமக்கள் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் தெரியாது.

ஊடகப் பேட்டி ஒன்றில் அமித்ஷு இப்படிப் போட்டு உடைக்காமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினைப் பேச்சு காற்றோடு கலந்திருக்கும்.

இதற்கு முன்பு[ஆங்கிலேயரால் ‘ஏக இந்தியா உருவாக்கப்பட்ட நிலையில்] இந்தியாவை யாரோ பிரித்தார்கள் என்று எண்ணும் வகையில், “இனியும் இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது” என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

“இத்தனை அப்பாவியாக இருக்கிறாரே உள்துறை அமைச்சரான இந்த அமித்ஷா என்பதை நினைத்தால், நம் மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது!


* * * * *

https://www.hindutamil.in/news/india/1249171-considering-south-as-separate-country-highly-objectionable-shah-counters-ktr.html

‘முஸ்லிம்’... தேர்தல் வெற்றிக்கு, ‘பாஜக’ கையாளும் மந்திரச் சொல்?!?!

“மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11ஆவது இடத்தில் இருந்து இன்று 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது[முதலாவது என்றே சொல்லியிருக்கலாமே?] பெரிய பொருளாதார நாடாக மாறும்” -நட்டா[இந்து தமிழ்]

நட்டாவின் கணக்குப்படி, 11ஆவது இடத்துக்கும் 5ஆவது இடத்துக்கும் இடையிலுள்ள 6 இடங்களைக் கடந்து முன்னேற இந்தியாவுக்கு[மோடி ஆட்சியில்]10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேற[பொருளாதார வளர்ச்சியில்] இடைப்பட்ட ஓர் இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. அதாவது ஓர் இடத்தைக் கடக்க 3 ஆண்டுகள் தேவை என்கிறார் ஜெ.பி. நட்டா.

6க்கு 10 என்றால், 1க்கு 3 தேவையா?

என்ன கணக்கு இதெல்லாம்?

இந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கு ஆதாரம் வைத்திருக்கிறாரா அவர்?

ஆதாரம் உள்ளதோ இல்லையோ, மோடியைப் புகழ்வதற்கு இப்படியெல்லாம் கணக்குக் காட்டியிருக்கிறார்.

அவரின் இந்தக் கணக்கை விமர்சிப்பது நம் நோக்கமல்ல.

உரையின் இறுதியில், கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கக் கர்னாடக அரசு முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்காவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாக நம்புகிறார்களா ‘பாஜக’ தலைவர்கள்?

“ஐயோ பாவம் மோடி கூட்டம்” என்று பரிதாப்படுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை!

                                   *   *   *   *   * 

https://www.hindutamil.in/news/india/1249639-if-modi-becomes-pm-india-will-become-world-s-3rd-largest-economy-in-3-years-jp-nadda.html


ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையாமலிருக்க.....[அனுபவப் பகிர்வு]