சனி, 18 மே, 2024

இத்தனை அப்பாவியா அமித்ஷா?!

யாரேனும் தென் மாநிலங்களைத் தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை[இந்து தமிழ்].

பிரிவினை பற்றி ஒருவர் பேசியிருப்பது நம்மைப் போன்ற பரந்துபட்ட பொது அறிவுள்ள அறிவுஜீவிகளுக்கே[ஹி... ஹி... ஹி!!!] தெரியாது. இந்தியக் குடிமக்கள் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் தெரியாது.

ஊடகப் பேட்டி ஒன்றில் அமித்ஷு இப்படிப் போட்டு உடைக்காமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினைப் பேச்சு காற்றோடு கலந்திருக்கும்.

இதற்கு முன்பு[ஆங்கிலேயரால் ‘ஏக இந்தியா உருவாக்கப்பட்ட நிலையில்] இந்தியாவை யாரோ பிரித்தார்கள் என்று எண்ணும் வகையில், “இனியும் இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது” என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

“இத்தனை அப்பாவியாக இருக்கிறாரே உள்துறை அமைச்சரான இந்த அமித்ஷா என்பதை நினைத்தால், நம் மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது!


* * * * *

https://www.hindutamil.in/news/india/1249171-considering-south-as-separate-country-highly-objectionable-shah-counters-ktr.html