எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஒரு நாத்திகரின் ஆத்திக வேடம்!

மூட நம்பிக்கை கூடாதுதான். ஆனாலும் அது, சில நேரங்களில் சிலருக்கு நன்மை பயப்பதும் உண்டு!

கதை:                                    கடவுள் துணை

”டாக்டர் கூப்பிடுறாருங்க.” செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன்.

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் எழிலரசு.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி, அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுளை வேண்டிக்கோங்க. அவர் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் எழிலரசு.

வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“ஏம்ப்பா, நீதான் நாத்திகனாச்சே. அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னே?” டாக்டரைப் பார்க்க வந்திருந்த அவரின் நண்பர் கேட்டார்.

“அதுவா.....?” சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் டாக்டர் எழிலரசு:

“சில நேரங்களில் டாக்டர் கணிப்பையும் மீறி, நோயாளிகள் பிழைச்சுடறது உண்டு. அந்த மாதிரி நேரங்களில், 'இவரெல்லாம் ஒரு டாக்டரா?'ன்னு சம்பந்தப்பட்ட டாக்டரைப் பழிப்பாங்க. கடவுளைக் கைகாட்டி விட்டுட்டா, 'கடவுள் கருணை காட்டினா உண்டுன்னுதான் டாக்டரும் சொன்னாரு. கடவுளும் கண் திறந்துட்டார்'னு சொல்லுவாங்களே தவிர டாக்டரைக் குறை சொல்ல மாட்டாங்க.”

“மக்கள் மனசை நல்லாவே படிச்சி வெச்சிருக்கே. புத்திசாலியப்பா நீ? என்று பாராட்டினார் நண்பர்.

#########################################################################################################

பல நேரங்களில் பல ஆண்கள்! [இது ஆண்களுக்கான ஒ.ப.கதை]

தோழர்களே, இந்தக் கதையைப் படியுங்கள். புரிந்தால்...நீங்கள் மகா புத்திசாலி! புரியாவிட்டால்...சாரி, உங்கள் 'IQ' வை மேம்படுத்த முயலுங்கள்!!

கதைத் தலைப்பு:                ஆண் புத்தி

க்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டு தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான்.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசாணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“”நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி என் வீட்டுக் வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு