எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 25 நவம்பர், 2023

‘இந்து இளைஞன்-இஸ்லாம் பெண் திருமணம்’... இஸ்லாமியரின் எதிர்வினை?!

மேற்கண்டது போன்ற கேள்வி[இடுகைத் தலைப்பு] 'கோரா’[ta.quora.com]வில் இடம்பெற்ற ஒன்று. பதில்கள் பின்வருமாறு:

 Trigger Girl இன் தற்குறிப்பு போட்டோ

Trigger Girl -நவ. 6

பெரும்பாலான இந்து - இஸ்லாமியக் காதல் திருமணங்களில் பாதுகாப்புக் கொடுக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் வருவதில்லை.

என் உறவு வட்டத்திலேயே இந்து-இஸ்லாமியத் திருமணம் 5 ஜோடிகளுக்கு நடந்துள்ளது.

அதில், ஒரு தூரத்துச் சொந்தமான ஒரு பெண்ணின் திருமணம் சென்ற மாதத்தில் நடந்தது.

இதுவரை அந்த 5 ஜோடிகளில் யாருக்கும் யாராலும் ஆபத்து வரவில்லை.

இந்து மதத்தில் அதிகம் காணப்படும் ஆணவக் கொலைகள் இஸ்லாமியர்களிடம் காண்பது மிக அரிது[‘அறவே இல்லை’ என்பது இல்லை].

4 நாட்களுக்கு முன்பு, ஒரே மதத்தில் ஒரே ஜாதியில் திருமணம் செய்த ஜோடிகளை, திருமணம் முடிந்து மூன்றே நாளில் கொலை செய்த சம்பவம் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ஒரே மதமாக இருந்தால் ஜாதியைப் பார்த்து‌க் கொலை செய்வதும், ஒரே ஜாதியாக இருந்தால் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொலை செய்வதும் அவ்வப்போதைய நிகழ்வுகளாக உள்ளன.

இதுல காமெடி என்னன்னா சங்கிகள், முஸ்லிம் கிறிஸ்த்தவர்களை மதவெறியர்கள்னு சொல்றதுதான்!😂

பதில் 2:

Aravind Sammy இன் தற்குறிப்பு போட்டோ

Aravind Sammy · 

நான் பணி புரியும் வங்கிக் கிளையில் அமீதாபேகம் ரமேஷின் மனைவியாகப் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டு வருகிறார்.

ஷகீரா, வெங்கடேஷின் மனைவியாக அதே போல் வருகிறார்.

யாரும் எதிர்த்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை.

https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

பகுத்தறிவைச் சிதைக்கும் திராவிடக் கட்சிகளும் புத்தி பேதலித்த சித்தராமையாவும்!!!

ட்டுமானப் பணிகளின்போது, பூமியைப் பெண் தெய்வமாக்கிப் பூஜை செய்தார்கள் நம் முன்னோர்கள். சிந்திக்கும் அறிவு போதிய வளர்ச்சி பெற்றிடாத காலம் அது. நெருப்புக் குழம்பும், நீரோட்டமும், பிறவும் உள்ளடங்கிய மண்ணாலான பெரியதொரு உருண்டை இது என்று மெய்ப்பிக்கப்பட்ட இந்த நூற்றாண்டில் இதற்குப் பூஜை செய்து பணியைத் தொடங்குவது முட்டாள்தனம்.

நம்மில் முட்டாள்களே பெரும்பலோர் என்பதால், மிகப் பெரும்பாலான கட்டுமானப் பணிகளைப் பூமி பூஜையுடன்தான் தொடங்குகிறார்கள்.

பகுத்தறிவாளர்களின் வழி வந்தவர்களாகக் கருதப்படும் திராவிடக் கட்சியினரும்[அதிமுக & திமுக] இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, அண்மை நிகழ்வொன்று[சாலைப் பணிக்குப் பூமி பூஜை] உறுதிப்படுத்துகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே திட்டப்பணிக்கு இருதரப்பாரும் பூமி பூஜை செய்திருக்கிறார்கள் என்பது.

தங்களுக்குள் ‘நம்பர் 1’ முட்டாள் யார் என்பதை அறியச் செய்வதற்கான  போட்டியோ இது?!

இம்மாதிரியான, பகுத்தறிவை முடக்கும் ஒரு நிகழ்வு நம் அண்டை மாநிலமான ‘கர்னாடகா’விலும் நிகழ்ந்துள்ளது.

சாமிகளுக்குக் காணிக்கை செலுத்துவது வழக்கமான ஒன்றுதான். கர்னாடகா அரசு, காணிக்கை செலுத்தியதோடு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதாந்தர ஊக்கத்தொகை ரூ2000//[கடந்த தேர்தலில் காங்கிரசை வெற்றிபெறச் செய்ததற்கு] அளிப்பதற்கும் ஆணை பிறப்பித்துள்ளது என்பதே அது.

சாமுண்டி சாமி, மனிதர்களின் போலியான பக்தி, செய்யும் படுமூடத்தனமான சடங்குகள் போன்றவற்றால் சோர்வுக்கு உள்ளாகி, பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுகிறாரோ? அம்மனை உற்சாகப்படுத்த இந்த ஊக்கத்தொகையோ?!

மற்றச் சாமிகளெல்லாம் கோபித்துக்கொள்ளுமே! அவைகளுக்கும் ஊக்கத் தொகை அளிக்குமா கர்னாடக அரசு?

உலகெங்கிலும் நடந்திராத அதிசய நிகழ்வு இது.

நிகழ்த்தியவர்[அமைச்சர் சிவக்குமாரின் தூண்டுதல்?] 100% தூய பகுத்தறிவாளர் என்று நம்பப்பட்ட கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.