எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 27 அக்டோபர், 2023

தமிழர் மனநலமும் ‘திமுக’ அரசு பதவி விலகலும்!!

மிழ்நாட்டின் ஆளுநர் பெயர் ஆர்.என்.ரவி. ‘தான் எல்லாம் தெரிந்தவன்’ என்னும் இறுமாப்பு இவரின் குருதியில் இரண்டறக் கலந்துள்ளது.

காவல்துறையில் அதிகாரியாக இருந்தபோது மேடை ஏறிப் பேசுவதற்கான வாய்ப்பே அமையாத இவர், தனக்கான பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தபோதெல்லாம் மேடை ஏறத் தவறுவதே இல்லை.

//தமிழக அரசியல் வரலாற்றில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி உருவெடுத்திருக்கிறார். ஆளுநராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், கால்டுவெல், திராவிடம் என அவர் பேசிய சர்ச்சைப் பேச்சுகள் ஏராளம். தற்போதும்கூட ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம், மசோதா நிலுவை பற்றியெல்லாம் சர்ச்சையாகப் பேசியிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைச் சட்டைசெய்யவதில்லை. கன்னித்தீவு தொடர்கதை போன்றது அவருடைய நடவடிக்கை// [https://www.vikatan.com/government-and-politics/politics/unruly-governor-ravis-outrageous-controversial-speeches-full-collection].

உரிய ஆதாரங்களே இல்லாமல் மனம்போன போக்கில் பொய்ச் செய்திகளைப்[பெரும்பாலும்] பரப்பும் இவரின் போக்கு கண்டிக்கத்தக்கது. ஆயினும், நம்மால் கண்டிக்க இயலாத பரிதாப நிலையில் உள்ளோம்.

தமிழர்தம் இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றை அழித்தொழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ‘பாஜக’வின் கைக்கூலியான இவரை, தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் நம்மவர் விருப்பம். அதிகாரப் பலம் மிக்க ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளை இவர் என்பதால் அது சாத்தியப்படவில்லை.

தமிழர்களின் நலனுக்கான தமிழ்நாடு அரசின் நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே முழு நேரப் பணியாகக் கொண்டுள்ள இவரை, நாம் அறிந்துள்ள அத்தனைக் கெட்ட் வார்த்தைகளாலும் வசை பாட வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. நாம் ஆளப்படுகிற இனத்தவர் என்பதால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு இவர் அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது. கண்ணிருந்தும் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம், சும்மா இருப்பதைத் தவிரச் சுயமாகச் செயல்படும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதால்.

ஆக, தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் இவரை எதிர்த்துச் செயல்பட நினைத்தும் அது இயலவில்லை என்பதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.

இதன் விளைவாக, நம் இதயப் படபடப்பும் துடி துடிப்பும் நாளும் அதிகரிக்கிறது. இதயம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதனால், நம்மில் மிகப் பெரும்பாலோர் மன அழுத்த நோயாலும் இதய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இதை[நோய்] உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘திமுக’ அரசு உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவது[ராஜினாமா] நல்லது என்று தோன்றுகிறது.

விலகினால், இந்த மாநில நிர்வாகத்தை ஆர்.என். ரவி என்பவர் ஏற்பார்.

தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பெற்ற பிறகு, இவர் பதவி சுகத்தில் மூழ்கிவிட் வாய்ப்புள்ளதால், இவரால் நம் தமிழினம் இழிவுபடுத்தப்படுவது குறையலாம்.

அதன் விளைவாக, நம்மில் பெரும்பாலோரைத் தாக்கியுள்ள மன அழுத்த நோய்[+இதய நோய்] மேலும் அதிகரிக்காது என்று நம்பலாம்.

‘பாலஸ்தீனக் கொடி’... இன்று கோவையில்! நாளை சென்னைக் கோட்டையில்!?!?

பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், அதற்கு முழு ஆதரவை வழங்கி வரும் அமெரிக்க அரசைக் கண்டித்தும், கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் & அரசியல் கட்சிகள்[?] சார்பில் கடந்த 24ஆம் தேதி உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தின் மீது தடையை மீறி ஏறிய சிலர், பாலஸ்தீனத்தின் கொடியைக் கட்டினர். இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் பரவியது.

கொடி கட்டிய 3 பேர் மீது, சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில், மதம் சார்ந்த பல அமைப்புகள் இடம்பெற்றிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பெரும் மதக் கலவரங்கள் ஏதும் இங்கு நடைபெற்றதில்லை.

பெரும்பாலான தமிழர்கள், அமைதியில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.

பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டதைப் பார்க்கும்போது, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டத் திட்டமிட்டிருக்கிறார்களா இஸ்லாம் அமைப்பினர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று இவர்களின் பாலஸ்தீனக் கொடி ஏற்றம். நாளை.....

இஸ்ரேலை ஆதரித்துக் கிறித்தவர்களும் இந்துக்களும்[இந்தியா இஸ்ரேலை ஆதரிப்பது அறியத்தக்கது] யூதர்களின் கொடியைப் பறக்கவிடுவதும், இஸ்லாமியருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதும் நடைபெறலாம்.

அதன் விளைவாக இங்கு மதக்கலவரம் மூளவும் வாய்ப்பு உள்ளது.

பாலஸ்தீனியர் - யூதர் கலவரம்[போர்] காரணமாக அந்த நாடுகள் பிணக் காடுகளாக ஆகி, அங்கெல்லாம் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

அந்த அவல நிலைக்குத் தமிழ்நாடு உள்ளாக வேண்டும் என்று விரும்புகிறார்களா இஸ்லாம் குடிமக்கள்?

இன்று கோவையில் பாலஸ்தீனக் கொடியைப் பறக்கவிட்டவர்கள் அதைச் சென்னைக் கோட்டையிலும் தில்லிச் செங்கோட்டையிலும் பறக்கவிடுவதும் நடைபெறக்கூடும்.

ஒன்றுகூடிப் பாலஸ்தீன ஆதரவு முழக்கமிட்டவர்களில் மூவரை மட்டும் கைது செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, உரிய மரியாதையுடன் அவர்களை இஸ்ரேலுக்கு நாடுகடத்தலாம் என்பது நம் பரிந்துரை.

கடத்தினால்.....

அங்கும் பாலஸ்தீனக் கொடியைப் பறக்கவிட்டு, பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பி, இஸ்ரேல் அரசைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள் அவர்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

வாழ்க இஸ்லாம்! வளர்க உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர் ஒற்றுமை!!