எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 26 ஜூலை, 2023

உளறிக்கொட்டி மாட்டிக்கொண்ட கேரள சபாநாயகருக்கு ஒரு சீரிய பரிந்துரை!!!

கேரளாவின் சட்டப் பேரவைச் சபை நாயகர் ‘ஏஎன் ஷம்சீர்’ அவர்களுக்கு ஒரு கெட்ட நேரமோ என்னவோ, இந்துக்களின் மிகு பிரியத்திற்குரியவரும், பிரபலக் கடவுளும் ஆன ‘விநாயகப் பெருமான்’ பற்றிச் சர்ச்சைக்குரிய வகையில் பேசித் தொலைத்து, ‘பாஜக’விடமும் அதன் அல்லக்கைகளான ‘விஷ்வஹிந்து பரிசத்’, ‘இந்து ஐக்கிய வேதி’ ஆகிய கட்சிக்காரர்களிடமும் வசமாகச் சிக்கிகொண்டுள்ளார்.


“விநாயகப் பெருமான் ஒரு கட்டுக் கதை” என்பதுதான் ஷம்சீரின் சர்ச்சைக்குரிய பேச்சு.

‘ஷம்சீர்’[A. N. Shamseer was born to Shri Usman Komath and Smt. A. N. Sareena] அவர்களுக்கு எதிராக ‘பாஜக’  உடனடி நடவடிக்கை எடுக்கும்படிக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்தல் வேண்டும் என்று ‘விஷ்வ ஹிந்து பரிஷத்’ குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் மனு அனுப்பவுள்ளது.

‘இந்து ஐக்கிய வேதி’[இப்படியொரு கட்சி இருக்கிறதா?] போன்ற இந்து அமைப்புகள் சபைத் தலைவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

எதிர்பாராத இந்தச் சிக்கலிலிருந்து விடுபட ஷம்சீருக்கு வழியே இல்லை என்று தோன்றுகிறது.

மன்னிப்புக் கேட்பது அல்லது பதவியை ராஜினாமா செய்வது என்றிவை தவிர வேறு வழியே இல்லாத நிலையில்.....

சாமானியனான அடியேனின் சிற்றறிவுக்குள் உதித்த ஒரு வழியைச் சபாநாயகருக்குப் பரிந்துரைத்திட விரும்புகிறேன். இதைவிடவும் ஆகச் சிறந்த வழி வேறு எதுவுமில்லை என்பது உறுதி.

பரிந்துரை:

“விநாயகப் பெருமான் மட்டுமல்ல, அல்லா, கர்த்தர் என்று மக்களால் வழிபடப்படுகிற அத்தனைக் கடவுள்களுமே கற்பனைதான் என்று சொல்ல நினைத்திருந்தேன். விநாயகர் ஒரு கட்டுக்கதை என்று தொடங்கி எஞ்சிய கருத்துகளையும் சொல்லி முடிப்பதற்குள் கூடியிருந்த இந்து அபிமானிகள் இடைவிடாது எழுப்பிய கூச்சலில் அது இயலாமல்போனது” என்று அவசர அறிக்கை ஒன்றைச் சபாநாயகர் வெளியிடுவாரேயானால்.....

”கற்பனைக் கதையில் அல்லாவையும் சேர்த்துட்டார்தானே” என்று சமாதானம் ஆகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அத்தனைக் கட்சிகளும் ‘கப்சிப்’ ஆகிவிடும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

என் பரிந்துரைக்கு ஏஎன் சம்சீர் அவர்கள் செவிமடுப்பார் என்பது அடியேனின் அசைக்க இயலாத நம்பிக்கை!

                                   *   *   *   *   *

Kerala Speaker A N Shamseer in trouble for ridiculing Lord Ganesha and Hindu faith (msn.com)

'அஞ்சு’ என்னும் பெயரில் ஒரு ‘நஞ்சு’ மனத்தவள்; அடங்காத காமவெறியள்!!!

த்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவள் பெயர் மஞ்சு; அழகான பெயர். ஆனால், அவள் உடம்பெங்கும் நஞ்சு.

அடங்காத காம வெறி கொண்ட ஒரு பெண் மிருகம் அவள்.

அந்த வெறிதான், திருமணமாகி 15 வயதில் மகளும் 6 வயதில் ஒரு மகனும் இருக்க, முகநூல் வழி அறிமுகமான ஒரு பாகிஸ்தான் தறுதலையை[நஸ்ருல்லா]க் காதலிக்கத் தூண்டியது.

காதல் என்பதே பொய். அது உண்மை என்றாலும், ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு முறைதான் அது அரும்பும் என்பார்கள்.

எனவே.....

இவள் அவனைக் காதலித்தாள் என்பது பொய். ஒருவருக்கொருவர் இணையவழி, காட்டக்கூடாததையெல்லாம் காட்டி காம வெறியை வளர்த்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.

அவனுடையதைக் காட்டிலும் இவளுடைய காமம் கட்டுக்கடங்காததாக இருந்திருக்கிறது.

அது கட்டுடைந்த நிலையில், அன்பான கணவனையும், தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் துறந்து(கணவனைப் பிடிக்கவில்லை என்றால் குழந்தை பெறுவதற்கு முன்பே அவனை விவாகரத்துச் செய்திருக்கலாம்) பாகிஸ்தானில் அவனிருக்கும் கிராமத்துக்கு ஓட வைத்திருக்கிறது.

காமம் வலிமையானதுதான். அது எத்தனை இழிவானது என்பதையும் இவளின் செய்கை உலகறியச் செய்திருக்கிறது.

இந்துவான இவள் இஸ்லாம் மதத்துக்கு மாறி, பாத்திமாவாக ஆகி அவனைத் திருமணம் செய்துகொண்டு, அவனுடன் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் வசிக்கிறாளாம்[இனியும், முகநூல் மூலம் ஒரு கிறித்தவனுடன் பழக்கம் ஏற்பட்டால், அவனிருக்கும் நாட்டிற்கு ஓடிப்போய், கிறித்துவச்சியாக மதம் மாறி அவனை மணக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?]

கள்ளக் காமுகர்களுக்குத் திருமணம் ஒரு கேடா?

அவனுக்கு வயது 29. இவளுக்கு 34. 

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்பார்கள். அவனுக்கும் இவளுக்குமான அந்தரங்க உறவு ஆறு மாதம் நீடிக்குமா?

அப்புறம், அவன் இவளை அடித்து விரட்டினால், முன்னாள் கணவனைத் தேடி இந்தியா வருவாளோ?

வந்தால்.....

முதல் கணவனான அரவிந்த்[ராஜஸ்தான்] இவளை ஏற்பானோ அல்லவோ, இந்த நாடு இவளை ஏற்கக்கூடாது.

இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுதான் இந்த மாதிரியான ‘அடங்காப்பிடாரி’களுக்கு வழங்குதற்குரிய சரியான தண்டனை ஆகும்.

                                     *   *  *   *   *

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.dailythanthi.com/News/World/married-indian-woman-anju-becomes-fatima-weds-her-pak-facebook-friend-after-converting-to-islam-1015786