மரணத்தைத் தழுவ இருப்பவர்களில் மிகப் பெரும்பாலோர்[விபத்து, கொலை போன்ற அசம்பாதங்களில் இறப்போர் நீங்கலாக] முதலில் எதிர்கொள்ளும் இழப்பு ‘பசியின்மை’[1] ஆகும்[ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்புப் பராமரிப்பு நிபுணரான ஜேம்ஸ் ஹாலன்பெக்கின் கூற்றுப்படி].
பசியின்மையால், உடம்புக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் போன்றவற்றைப் பெறுதல் இயலாமல்போகிறது. இந்நிலையில் மரணம் நிகழ்வது உறுதியாகிறது.
அடுத்து, பேசும் திறன்[2] குறையத் தொடங்குவதால், பிறருடன் உரையாடுவது மிகவும் கடினமாகிறது.
பேசுவதற்கான சக்தி முற்றிலுமாய்த் தடைப்படும்போது மரணத்தை எதிர்கொள்பவர் மயக்கமடைகிறார்; சுவாசிப்பதில் சிரமம்[3] ஏற்படுகிறது.
மரணத்துடன் போராடுபவர் அடுத்தகாக இழப்பது பார்வைத் திறன்[4]. மிக அருகில் இருப்பனவற்றையே அவரால் பார்க்க இயலும்.
இந்நிலைக்கு உள்ளாகும்போது அவரின் இமைகள் பாதி திறந்தோ முற்றிலுமாய் மூடியோ இருக்கலாம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிதல்{அறிவு}[5] அவருக்கு எளிதானதல்ல; அது சாத்தியம் இல்லாமலும் போகலாம்.
செல்லப் பிராணிகளையோ, உறவினர்களையோ, உற்ற நண்பர்களையோ பார்ப்பது போன்ற மாயத் தோற்றங்கள்[6] இறந்துகொண்டிருப்பவரின் மூளையில் காட்சிப்படுத்தப்படலாம்.
சுயநினைவை இழப்பதும் பெறுவதுமான நிலைகளில் இருந்துகொண்டிருக்கும் அவர், மிச்சமிருந்த கொஞ்சம் தொடுதல் உணர்வு[7]யும் முற்றிலுமாய் இழக்கிறார்.
***மேற்கண்ட தகவல்கள், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகளால் ஏப்ரல் 2024இல் வெளியிடப்பட்டது.
* * * * *
Your senses will shut down in a specific order when you’re about to die[copy & paste]