எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 27 மார்ச், 2025

சுடச் சுடச் சுடச் சுடச் சூடானதொரு உடலுறவு அசிங்கக் கதை!!!

முக்காடும் கழுத்தில் மாலையுமாக அவள் அவனின் நெற்றியில் பொட்டு வைக்கும்போது, திறந்த வாய் மூடாமல், முகத்தில் கவலை ததும்பக் காட்சியளிக்கும் அந்தப் பிஞ்சு அவளின் மகள் என்பதை அறியும்போது நம் நெஞ்சு செந்தழலாய்க் கொதிக்கிறது.

ஆம், 

ஏற்கனவே திருமணம் ஆன அவளின் மகள்தான்[அவளுக்கு இன்னொரு குழந்தையும் உண்டு] அந்தச் சிறுமி.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் உடலுறவு இச்சை சற்றும் தணியாதால், அதைத் தணிக்க ஒரு கள்ளக் காமுகனுடன் உடலுறவு கொள்கிறாள் அவள். தகாத உறவு நீடிக்கிறது.

கணவனுக்கு இந்த அசிங்கம் தெரிந்தபோது அவளைக் கண்டிக்கிறான். அந்தக் காமுகியோ திருந்தவில்லை.

திருந்தாத பெண்டாட்டியைத் தீர்த்துக்கட்டுகிற ஆண்களே அதிகம் உள்ள நிலையில், அவளின் கள்ளக் காமுகனுக்கே அவளை மணம் முடிக்கிறான் அந்த உத்தமன்; பெற்ற இரு செல்வங்களைத் தானே வளர்க்க முடிவெடுக்கிறான்.

காமம் வலிமையானதுதான். அதை அடக்கி ஆளத் தவறுவோர் என்ணிக்கை அதிகரிக்கிறது. வெகு விரைவில் மனித இனம் சீரழிந்து சிதைந்து அழியும் என்பது உறுதி!

                                   *   *   *   *   *

***தலைப்பில் நேர்ந்த பிழை[சுடான] ஏறத்தாழ 3 மணி நேரம் கழித்தே திருத்தம்[சூடான] செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

                                   *   *   *   *   * 

#2 குழந்தைகளைப் பெற்றும் காதலனை மறக்க முடியாததால் மனைவியைக் காதலனுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஒரு கணவர்![தினத்தந்தி மார்ச் 27, 4:11 pm]https://www.dailythanthi.com/news/india/up-man-gets-wife-married-to-her-lover-ill-take-care-of-our-children-1149971?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations#

உதயகுமாரு, அமித்ஷாவைத் தெரியும்! யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

//இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய்ப் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா இருப்பதாக[காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததில் மோடியின் பங்கு என்ன? அவரென்ன களிமண் மனிதரா?]ப் புகழாரம் சூட்டினார் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்//[tamil.news18.com]

உதயகுமாரு,

அமித்ஷா ‘இந்தி’யர். ‘இந்தி’யர் அல்லாத இந்தியர் மீது இந்தியையும் இந்துத்துவாவையும் திணிப்பதோடு, அனைத்து இந்தியர் மீதும் ‘மூடநம்பிக்கைகளைத் திணியோ திணி என்று திணிப்பவர் என்பதும், இதன் மூலம் தேர்தலில், ‘இந்தி’யரின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளியெடுத்து அமைச்சரானவர் என்பதும்,    இந்தியையும் மூடநம்பிக்கைகளையும் திணிப்பதைத் தவிர ஒரு தலைவருக்குத் தேவையான எந்தவொரு தகுதியும் இல்லாதவர் என்பதும் நமக்குத் தெரியும்.

இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய்ப் படேலுடன் ஒப்பிட்டிருக்கிறீர்களே, யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க உதயகுமாரு[சொன்னால்தானே அவருடன் இவரை ஒப்பிட்டது சரியா என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும்?].

https://tamil.news18.com/national/tamil-live-breaking-news-weather-updates-tn-assembly-and-latest-updates-on-march-27-nw-rkr-1766467.html