எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 27 மார்ச், 2025

உதயகுமாரு, அமித்ஷாவைத் தெரியும்! யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

//இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய்ப் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா இருப்பதாக[காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததில் மோடியின் பங்கு என்ன? அவரென்ன களிமண் மனிதரா?]ப் புகழாரம் சூட்டினார் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்//[tamil.news18.com]

உதயகுமாரு,

அமித்ஷா ‘இந்தி’யர். ‘இந்தி’யர் அல்லாத இந்தியர் மீது இந்தியையும் இந்துத்துவாவையும் திணிப்பதோடு, அனைத்து இந்தியர் மீதும் ‘மூடநம்பிக்கைகளைத் திணியோ திணி என்று திணிப்பவர் என்பதும், இதன் மூலம் தேர்தலில், ‘இந்தி’யரின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளியெடுத்து அமைச்சரானவர் என்பதும்,    இந்தியையும் மூடநம்பிக்கைகளையும் திணிப்பதைத் தவிர ஒரு தலைவருக்குத் தேவையான எந்தவொரு தகுதியும் இல்லாதவர் என்பதும் நமக்குத் தெரியும்.

இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய்ப் படேலுடன் ஒப்பிட்டிருக்கிறீர்களே, யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க உதயகுமாரு[சொன்னால்தானே அவருடன் இவரை ஒப்பிட்டது சரியா என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும்?].

https://tamil.news18.com/national/tamil-live-breaking-news-weather-updates-tn-assembly-and-latest-updates-on-march-27-nw-rkr-1766467.html