//இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி ஆவார். அவரது ஸ்டூடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் அலங்கரிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.
சினிமாவுக்கு இசையமைத்தது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அவர்.
இந்நிலையில் ராஜா பேசியிருக்கும் காணொலி[வீடியோ] ஒன்று சமூக வலைதளங்களில்[சோஷியல் மீடியா] பெருமளவில் பகிரப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பைக் காட்டுபவன்தான் சத்குரு. ‘சத்குரு’னு சொல்லிக்கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது; சத்தியமாக ஆக முடியாது" என்றார்.
அவர் அப்படி சொன்னபோது அந்த அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. இந்தக் காணொலியை[வீடியோ] ரசித்த ரசிகர்களோ, 'ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவனை இசைஞானி போட்டுப் பொளந்துவிட்டார்' என்று அவரைப் பாராட்டுகிறார்கள்//[ஊடகச் செய்தி].
இசைஞானியை நாமும் பாராட்டுகிறோம்.
https://tamil.filmibeat.com/throw-back-stories/ilaiyaraaja-s-sadhguru-remark-goes-viral-music-maestro-s-spiritual-speech-sparks-debate-172249.html