எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 29 அக்டோபர், 2025

‘அதிமுக’வைக் காப்பாற்றியவர்/காப்பாற்றுபவர் கடவுளா, கடவுளால் அனுப்பப்பட்டவரா?!

“மீண்டும் ‘தி.மு.க.’ ஆட்சிக்கு வந்தால் ‘த.வெ.க.’வை ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது” என்று ஒரு வாரத்திற்கு முன்பே, ‘அருள்வாக்கு’ச் சொன்னவர் ‘பாஜக’வின் உயர்மட்ட அடிமைகளில் ஒருவரான உதயகுமார்[அதிமுக]. 

“த.வெ.க. ‘அதிமுக’ கூட்டணியில் சேராது[ஒருபோதும் ‘பாஜக’வின் அடிமை ஆகாது] என்று ‘தவெக’ தலைவர் விஜய் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

அடிமை உதயகுமாரிடம் நாம் கேட்பது.....

தன்மானத்துடன் அரசியல் நடத்த நினைக்கும் தலைவனை, திமுக. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்றால், கடந்த பல ஆண்டுகளாக ‘திமுக’விடமிருந்து உங்களைக் காப்பாற்றியவர் கடவுள் அல்ல; ‘கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்[பகவான் மோடி]’ என்கிறீரா?

‘இந்தி’யர் அல்லாத மக்களின் இன&மொழி அடையாளங்களை அழித்து, அனைவரையும் ஆடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்க வெறிக் கூட்டத்திற்கு, மானம் சூடு சொரணை எல்லாம் இழந்து அடிமைச் சேவகம் செய்கிற நீங்கள்[அதிமுக] தவெக. தலைவனையும் அடிமை ஆக்க அயராது பாடுபடுகிறீர்களே, இதனால் நீங்கள் பெறும் ஆதாயம்தான் என்ன?

அவர்களின் ஆயுட்கால அடிமைகளாகவே நீங்கள் இருங்கள். கேட்பாரில்லை.

இனியும் விஜய் என்னும் தன்மானக் கட்சித் தலைவனைச் சீண்டாதீர். சீண்டினால், தமிழ்நாட்டில் உங்கள் கட்சி காணாமல்போகும் என்பதை மறவாதீர்!