“மீண்டும் ‘தி.மு.க.’ ஆட்சிக்கு வந்தால் ‘த.வெ.க.’வை ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது” என்று ஒரு வாரத்திற்கு முன்பே, ‘அருள்வாக்கு’ச் சொன்னவர் ‘பாஜக’வின் உயர்மட்ட அடிமைகளில் ஒருவரான உதயகுமார்[அதிமுக].
“த.வெ.க. ‘அதிமுக’ கூட்டணியில் சேராது[ஒருபோதும் ‘பாஜக’வின் அடிமை ஆகாது] என்று ‘தவெக’ தலைவர் விஜய் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
அடிமை உதயகுமாரிடம் நாம் கேட்பது.....
‘இந்தி’யர் அல்லாத மக்களின் இன&மொழி அடையாளங்களை அழித்து, அனைவரையும் ஆடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்க வெறிக் கூட்டத்திற்கு, மானம் சூடு சொரணை எல்லாம் இழந்து அடிமைச் சேவகம் செய்கிற நீங்கள்[அதிமுக] தவெக. தலைவனையும் அடிமை ஆக்க அயராது பாடுபடுகிறீர்களே, இதனால் நீங்கள் பெறும் ஆதாயம்தான் என்ன?
அவர்களின் ஆயுட்கால அடிமைகளாகவே நீங்கள் இருங்கள். கேட்பாரில்லை.
இனியும் விஜய் என்னும் தன்மானக் கட்சித் தலைவனைச் சீண்டாதீர். சீண்டினால், தமிழ்நாட்டில் உங்கள் கட்சி காணாமல்போகும் என்பதை மறவாதீர்!

