எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஒரு பதிவிரதை ‘பத்ரகாளி’ ஆன கதை!!!

போதையிலிருந்தான் பொன்னுச்சாமி. மனதில் ‘அந்த’ ஆசையும் இருந்தது. ஆனால், கையில் காசு இல்லை. எங்கெல்லாமோ அலைந்துவிட்டுக் குடிசைக்குத் திரும்பியபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்த அவன் ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். ‘ரேட்’ கொஞ்சம் அதிகம். ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான்.

பிள்ளையார் கோயில் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டதால் கையில் சிங்கிள் பைசா இல்லாததை நினைத்து வருந்தினான் பொன்னுச்சாமி.

அவனால் இச்சையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இன்னிக்கி ஒரு நாள் சரசுவிடம் கடன் சொல்லலாம்” என்று முணுமுணுத்துக்கொண்டே காந்திநகர் போனான்; கதவு தட்டி, வெளியே வந்த சரசுவிடம் பல்லிளித்தான்.

“பணம் வெச்சிருக்கியா?”என்றாள் அவள்.

‘ஹி...ஹி...வந்து...அது வந்து...அப்புறமா...” என்று அசட்டுச் சிரிப்புடன் குழைந்தான் பொன்னுச்சாமி.

“போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ” என்று அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அந்த’ நினைப்பிலிருந்து விடுபட முடியாத பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் அவன்.

அவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவளின் ஜாக்கெட்டுக்குள் படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“என்னடி மிரட்டுறே? உன் புருசன் சொல்றேன், கம்முனு படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவும் ஆசையில் இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தான்.

“விலகிப் போயிடு” -அவனை எட்டி உதைத்த சிவகாமி, எழுந்து போய் எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்தாள்.

“கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

ஓசைப்படாமல் குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



நான் பைத்தியக்காரன்! நீங்கள்?!

எந்தவொரு பயனுமில்லை என்பது தெரிந்திருந்தும், பிடிவாதமாய் ஒரு செயலைச் செய்துகொண் டிருப்பவன் பைத்தியக்காரன். இதற்கு உதாரணம் நானே! நீங்களும் என்னைப் போன்றவர்தானா? பதிவைப் படியுங்கள்.

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற் குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான[?] அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............மிக மிக மிக[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த மூளை கடவுளுக்கும் உள்ளதா?
உண்டெனில், அதற்கும் ‘உருவம்’ உண்டல்லவா? இல்லையெனில் அது அருவமானதா?

அருவமான ஒன்றின் மூலம் சிந்தித்துச் செயல்பட முடியுமா?

மூளையைத் தவிர்த்து, மூளை போன்ற ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?

அந்த ‘ஏதோ’ ஒன்று எப்படியிருக்கும்?!

இந்தக் கேள்வியால் எனக்கோ பிறருக்கோ பயனேதும் இல்லை[?] என்பது தெரிந்திருந்தும், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கண்ட கண்ட நேரங்களில் கேட்டுக் கொள்கிறேன்!!!


பயனற்ற இந்தச் செயலைச் செய்கிற நான் பைத்தியக்காரனா?

“ஆம்” என்பது உங்கள் பதிலானால்..... நீங்கள் எப்படி!?


=============================================================================================