எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 3 டிசம்பர், 2022

கன்னியின் கழுத்தில் சுட்டு, வன்புணர்வு செய்து, கொன்று தின்ற காமக் கிறுக்கன்!!!

அவர் பெயர் ‘சாகாவா’; ஜப்பான்காரர்.

அவர் பாரிஸில் படித்துக்கொண்டிருந்தபோது, ’ரெனி ஹர்ட்வெல்ட்’ என்னும் பெயருடைய பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். என்ன காரணம் சொல்லி அழைத்துவந்தாரோ தெரியவில்லை.

தன் வீட்டிற்கு வந்த அந்தப் பெண்ணைக் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டார்; பாலியல் பலாதாரம் செய்தார்; கொலை செய்தார். 

அப்புறம் நடந்ததுதான் விவரிப்புக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சித் தகவல். அது…..

கொல்லப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகளில் சிலவற்றைத் தின்றாராம்[அழகான குமரிப் பெண்களின் மாமிசம் வெகு சுவையாக இருக்கும் என்று நினத்திருப்பாரோ?].

சடலத்தை ஒரு பூங்காப் பக்கம் அப்புறப்படுத்த முயன்றபோது, பாரீஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டார்; தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அடுத்து நிகழ்ந்தது மேற்கண்டதைவிடவும் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சி. 

கொஞ்ச நாட்கள் மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர்[பைத்தியம்?] என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க, 1984இல் சொந்த நாடானா ஜப்பானுக்கு அனுப்பப் பட்டார்.

அங்கு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து போதிய ஆதாரக் கோப்புகளைப் பெற முடியாததால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.


அவர் தன் 73ஆம் வயதில் நிமோனியாவால் இறந்தார்.

இதன் பிறகு நடந்தது மேலும் பல மடங்கு அதிர்ச்சி தரும் அதிசய நிகழ்வாகும்.

‘இவரின் வாழ்க்கை நிகழ்வை மையக் கருவாக வைத்து, ஜப்பானிய நாவலாசிரியர் ஜூரோ காரா’ என்பவர் எழுதிய  "லெட்டர் ஃப்ரம் சாகவா-குன்" என்னும் நூல் 1982இல் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இலக்கியப் பரிசை வென்றது’ என்பதே அது!

* * * * *

மேற்கண்டது நேற்றைய ஊடக[zee news]ச் செய்தி.

மனித வாழ்க்கை பெரும் விபரீதங்கள் கொண்டதாக மாறிவருகிறது என்ப தற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

இந்தப் பொல்லாத உலகில் இதையும் மிஞ்சுகிற விபரிதங்கள் நிறையவே நடக்கக்கூடும். பாவம் வருங்காலச் சந்ததியர்!!!

==========================================================================

மனிதத் ‘தலைமாற்று அறுவை’ சாத்தியமா? எப்போது? விளைவுகள்?!?!

'மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளிக்கு உடலின் மற்ற அனைத்து பகுதிகளும் நன்றாகச் செயல்படும் பட்சத்தில், அவரின் தலையை நீக்கிவிட்டு, மூளை நல்ல நிலையிலுள்ள வேறொருவரின்[உடம்பு பெருமளவு செயலற்ற நிலையில் உள்ளவர்] தலையைப் பொருத்தினால் அவரை உயிர் பிழைக்கச் செய்யலாம்' என்பது இத்தாலியைச் சேர்ந்த ‘செர்ஜியோ கனாவெரோ’ என்னும் விஞ்ஞானியின் நம்பிக்கை.

இவர் இந்த அறுவைக்கான தொழிநுட்பத்தைத் தான் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுவதற்குப் பலர் முன்வந்துள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்தவரும், தண்டுவட நோய், தசைச் செயலிழப்பு என உடம்பில் பல பாதிப்புகளுக்கு உள்ளானவருமான 30 வயதான கணினி விஞ்ஞானி ‘ஸ்பிரிடோனவ்’[மூளை நல்ல நிலையிலுள்ளவர்; நல்ல நிலையிலுள்ள உடம்பில் இவரின் தலையைப் பொருத்துவது விஞ்ஞானியின் திட்டம்]] தேர்வு செய்யப்பட்டார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று 150 பேர் இதற்குத் தயார்படுத்தப்பட்டனர்.

இந்த அறுவை மேற்கொள்ளப்பட்டால், ’ஸ்பிரிடோனவ்’ ஒருமாத காலம் கோமா நிலையில் வைக்கப்படுவார். அவருக்கு மருந்துகள் செலுத்தப்படும். புதிய உடலுக்கும் தலைக்கும் ஒத்திசைவு ஏற்படவேண்டும் என்பதே இவற்றிற்கான காரணம் என்றார் மேற்கண்ட விஞ்ஞானி.

ஆனால், மருத்துவ உலகம் இந்த அறுவைசிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது, ஒருவரை 4 வாரங்கள் கோமாவில் ஆழ்த்துவதன் மூலம், ஆரோக்கியமாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்று கலிபோர்னியா பல்கலைக் கழக நரம்பியல் பேராசிரியர் ‘ஹாரி கோல்டுஸ்மித்’ கூறினார்.

இந்நிலையில், 

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு எலியின் தலையைத் துண்டித்து எடுத்து அதனை மற்றொரு எலியின் தலையுடன் வெற்றிகரமாக இணைத்துள்ளனர். இதன் மூலம், அந்த எலியானது பல மணி நேரங்கள் இயல்பாக உயிர் வாழ்ந்ததையும் நிரூபித்து உலகை ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளனர்[https://www.dailythanthi.com/News/Districts/2017/05/10131700/Head-replacement-Rehearsal-operation.vpf] என்பது செய்தி.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இச்சிகிச்சையைச் செய்வது சாத்தியப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை, வெற்றிகரமாக, இந்த அறுவை செய்துமுடிக்கப்பட்டால்.....

சிகிச்சைக்கு உள்ளான உடம்புக்கும் மூளைக்கும் ‘ஒத்திசை’ சாத்தியமா?

புதிய தலை பொருத்தப்பட்டவர், அறுவைக்கு முன்பிருந்த குணங்களும் பண்புகளும் மாறாமல் இருப்பாரா?

ஓர் ஆணின் தலையை ஒரு பெண்ணுக்குப் பொருத்தினால் அவர் தனக்கிருந்த அதே குணங்களுடனும் பண்புகளுடனும் இருந்துகொண்டிருப்பாரா?

பெரியவர்களின் தலையைச் சிறுவர்களுக்குப் பொருத்தினால், சிறுவர்களின் உடம்பு ஏற்குமா?

என்றிவ்வாறான பல தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு விடை கண்டறிவது அத்தனை எளிதல்ல என்று மருத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், சிகிச்சைக்குச் சம்மதம் தெரிவித்துக் காத்திருந்த ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்பிரிடோனவ்’ திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தந்தையானார்; அறுவைக்கு இனி தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார்.

அவர் இல்லையென்றாலும், அறுவைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்வதற்குச் சில நபர்கள் தயாராக இருப்பதாகச் சொல்லும் விஞ்ஞானி ‘செர்ஜியோ கனாவெரோ’, சீன விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து குரங்குகளை வைத்து இந்தச் சிகிச்சையைச் செய்ததாகத் தெரிகிறது.

இதன் பிறகு, இது விசயத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இதை விவரிக்கும் ‘காணொலி’ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக......

மேற்கண்ட வேறு வேறு ஆய்வு நிலைகளைக் கூட்டிக் கழித்தால், தலைமாற்று அறுவை நடப்பதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்.

===========================================================================
***வேறு வேறு தளங்களில் சேகரித்த தகவல்களின் தொகுப்பு இப்பதிவு.