எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 5 ஜூலை, 2023

தமிழை வாழவிடுங்கள் ‘சத்குரு’ஜி!!!

‘குரு’ என்னும் சொல் இலக்கிய வழக்காகவும், பேச்சு வழக்காகவும் இருப்பதைப் பலரும் அறிவர்.

‘குர்’ - என்ற ஒலி மூலத்திலிருந்து உருவான சொல் குரவன். குரவன் / குரு - என்பன ஆசிரியரைக் குறிக்கும் அழகான தமிழ்ச்சொற்கள்(குறவன் என்பது வேறு)...’கோரா’

குரு என்னும் சொல் தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களைத் தரும்.

இந்த ஈரெழுத்துச் சொல்லை[குரு], கு+ரு என்று பிரித்து தமிழறிந்த எவரும் பொருள் சொன்னதில்லை.

சொல்ல முன்றாலும் அம்முயற்சி தோல்வியில்தான் முடியும். எப்படி?

கு+ரு... ‘கு’ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக ஒலி, நிறம், பூமி, குற்றம், சிறுமை ஆகிய பொருள்களைத் தரும்[https://ta.wiktionary.org/s/nxd]+[https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/oru-eluthu-oru-mozhi/]

'கு' என்னும் உகர உயிர்மெய்க்குறில் எழுத்து ஓரெழுத்து ஒருமொழியாகப் பயின்றிருக்கிறது. கு என்றால் பூமி, இகழ்ச்சி, இன்மை, நீக்கம், நிறம், சிறுமை, தடை போன்ற பல பொருள்கள் காணப்படுகின்றன. [https://www.nakkheeran.in/360-news/thodargal/poet-magudeswaran-writes-soller-uzhavu-part-26


‘ரு’ என்பது ‘ஓரெழுத்து ஒரு மொழி’யல்ல[உயிர்மெய் மட்டுமே]. அது எப்பொருளையும் குறிப்பதில்லை[’ரு’... No definitions found for this word. Help us improve the dictionary by adding one[agarathi.com dictionary]

ஆக,

‘குரு’ என்னும் சொல்லை, கு+ரு என்று பிரித்துப் பொருள் காணும் முயற்சி இந்நாள்வரை  மேற்கொள்ளப்படவில்லை என்பது அறியத்தக்கது.

இச்சொல் குறித்த ஆய்வு நிலை இதுவாக இருக்க, ஜக்கி என்னும் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டு ‘சத்குரு’ என்றே அழைக்கப்படுகிற வாசுதேவ், இச்சொல்லை, கு+ரு என்று பிரித்துப் பொருள் விளக்கம் தந்திருக்கிறார்.

அவர் தந்த விளக்கம்[குரு பூர்ணிமாவை முன்னிட்டு அருளிய ஆசியுரையில்]:

 "'கு' என்றால் இருள், 'ரு' என்றால் அகற்றுபவர். உங்கள் இருளை அகற்றுபவரே குருவானவர்." - சத்குரு https://isha.sadhguru.org/in/ta/guru-purnima

ஜக்கி அவர்களே.

‘ரு’வுக்கு நீங்கள் தந்திருக்கும் பொருள் தான்தோன்றித்தனமானது; எந்தவொரு அகராதியிலும் இடம்பெறாதது.

நீங்கள் சொல்லியிருப்பது போல், ‘கு’வுக்கும் ‘இருள்’ என்பது நேரடியான பொருள் அல்ல; குற்றம் சிறுமை போன்றவற்றிற்குக் காரணமாய்[இருள்>அறியாமை] இருப்பது அது என்று சொல்லி, சுற்றி வளைத்து ‘கு’விற்கு இருள் என்று விளக்கம் தரலாம்.

ஆங்கிலத்தில் தத்துவம் பேசும் நீங்கள், அவ்வப்போது கொ[ச்சை]ஞ்சு தமிழிலும் ஆன்மிக நெறி பரப்பி அயராது மக்கள் பணி ஆற்றுகிறீர்களே, அது போதுமய்யா..

இனியும் சொல்லாராய்ச்சி எல்லாம் வேண்டாம். தமிழை வாழவிடுங்கள் சத்குருஜி!