எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 10 மே, 2018

இது என் சொந்தக் கதை!!!

நம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை! இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்!
து நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.

விடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.

“பரமு.....” - அப்பா அழைத்தார்.

“சொல்லுங்கப்பா.”

“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.

அப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த, அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.

அவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........

“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க? சாமியா செலவு பண்ணுது?”

அப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.

நான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.

அவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

நான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை! என் பகுத்தறிவு போட விடவில்லை.

பணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்!

அதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.

கடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

எதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.

பூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.

நான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.

அப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார். 

அதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.

அவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.

அவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான்  காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.
*************************************************************












நேற்று கும்பாபிஷேகம்! இன்று இடி விழுந்து சிதறிய கோபுரம்!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் செல்லும் சாலையில் 'மல்லசமுத்திரம்' என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து சிறிது தொலைவில்  உள்ளது 'கருமானூர்' கிராமம்.

பல ஆண்டுகள் ஊர் மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கூத்தாண்டேஸ்வரருக்குக் கோபுரத்துடனான கோயில் எழுப்பப்பட்டது.

இரண்டு நாட்கள் முன்பு, வேதமந்திரங்கள் எல்லாம் ஓதப்பட்டுக் குடமுழுக்கு[மகா கும்பாபிஷேகம்] நடத்தி, கூத்தாண்டேஸ்வரர் சிலைக்கு உயிர் கொடுத்து, கோயிலைப் புனிதப்படுத்தினார்கள் அர்ச்சகர்கள். 

இந்நிகழ்வுக்கு மறு நாள் கருமானூரில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. கனமானதொரு இடி இறங்கியதால் கோபுரத்திலிருந்த சில குட்டிச் சாமிகளின் சிலைகள் சேதம் அடைந்தன.

பயங்கர இடிமின்னலுடனான மழையின்போது இடி விழுவது இயற்கை. அது எங்கு விழுகிறதோ அங்குள்ள பொருள் சிதைவுறும் என்பதும் இயற்கை நிகழ்வே. கருமானூர் கோயில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் அந்த ஊர் மக்களுக்குத் தீங்கு விளைவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதை நம்புவது ஆறறிவின் பயனாகும்.

ஆறறிவு வாய்த்திருந்தும், கோயிலின்மீது இடி விழுந்ததால் பெரும் தீங்கு விளையும் என்று நம்புகிற பலவீனம் கருமானூர் மக்களைப் போலவே நம் எல்லோருக்கும் உள்ளது. காரணம், ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருப்பதுதான்.

இப்போதைக்குத் தகர்க்கவே இயலாத சில மூடநம்பிக்கைகள் நம்மவர்களிடம் உள்ளன. அவற்றில், சாமி கும்பிடுவதும் ஒன்று.

கடவுளைக் கண்முன் நிறுத்துவதாக நம்பிச் சிலை வைக்கிறோம். கோயில் கட்டிக் கோபுரமும் எழுப்புகிறோம். அப்புறம் என்ன, மூத்தோர்களை முன் நிறுத்தித்  தமிழில் பக்திப் பாடல்கள் பாடி வழிபாட்டைத் தொடங்கலாம்.  ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ ஒருங்கிணைந்து பண்டிகை கொண்டாடலாம். அதற்கு மாறாக.....

கடவுளுக்குப் புரியுமோ என்னவோ, நமக்குப் புரியாத, அவர்களுக்கு மட்டுமே புரிகிற மொழியில் அவர்களால் கற்பிக்கப்பட்ட மந்திரங்களை ஓதச் சொல்லி 'மகா...மகா...மகா...கும்பாபிஷேகம்' நடத்தச் செய்தோமே அப்போதே நாம் மூடர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்.

கிடைத்ததைத் தின்று, கழித்து, மூத்திரம் பெய்து நம்மைப் போல் வாழ்கிற அவர்கள் சொல்லும் மந்திரங்களால் சிலையானது கடவுளாக மாறும் என்று நம்பினோமே, அப்போதே அவர்கள் நம்மைப் படு மூடர்கள் ஆக்கிவிட்டார்கள்.
நாம் முறையிட்டால் கடவுள் கேட்க மாட்டார் என்று நினைத்து, அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகள் ஆக்கினோமே அப்போதே நாம் படு படு மூடர்கள் ஆகிவிட்டோம்.

இத்தனை கனத்த மூடநம்பிக்கைகளை ஏற்கனவே நாம் சுமந்துகொண்டிருப்பதால்தான் குறைந்தபட்சம் சிந்திக்கும் ஆற்றலைக்கூட நம்மால் பெற்றிட இயலவில்லை.

மழைக்காலங்களில் எங்கெல்லாமோ தற்செயலாக விழுகிற இடி, ஒரு கோயில் கோபுரத்தின் மீது விழுந்ததை எண்ணி அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிற[இன்று ஊடகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இம்மாதிரி நிகழ்வுகள் மிக எளிதாக மக்களைச் சென்றடைகின்றன.  இதற்கு முன்பும் அவ்வப்போது கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்திருக்க வாய்ப்புள்ளது] நாம்,  சிந்திக்கக் கற்றல் வேண்டும்; இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஆனால், இந்நாள்வரை அது சாத்தியப்படவில்லை.

கருமானூரில் நிகழ்ந்தது போல, தமிழகமெங்கும் ஆங்காங்கே கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்தால்தான், வேதமந்திரம் ஓதி, குடமுழுக்குச் செய்வதால் பயன் ஏதுமில்லை  என்பதை நம்மால் உணர முடியுமோ என்னவோ!?

காலம் பதில் சொல்லும்.

இடிமேல் இடி விழுந்தால்தான் திருந்துவோமா?!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் செல்லும் சாலையில் 'மல்லசமுத்திரம்' என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து சிறிது தொலைவில்  உள்ளது 'கருமானூர்' கிராமம்.

பல ஆண்டுகள் ஊர் மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, 'கூத்தாண்டேஸ்வரருக்குக் கோபுரத்துடனான கோயில் எழுப்பப்பட்டது.

இரண்டு நாட்கள் முன்பு, வேதமந்திரங்கள் எல்லாம் ஓதப்பட்டுக் குடமுழுக்கு[மகா கும்பாபிஷேகம்] நடத்தி, கூத்தாண்டேஸ்வரர் சிலைக்கு உயிர் கொடுத்து, கோயிலைப் புனிதப்படுத்தினார்கள் அர்ச்சகர்கள். 

இந்நிகழ்வுக்கு மறு நாள் கருமானூரில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. கனமானதொரு இடி இறங்கியதால் கோபுரத்திலிருந்த சில குட்டிச் சாமிகளின் சிலைகள் சேதம் அடைந்தன.

பயங்கர இடிமின்னலுடனான மழையின்போது இடி விழுவது இயற்கை. அது எங்கு விழுகிறதோ அங்குள்ள பொருள் சிதைவுறும் என்பதும் இயற்கை நிகழ்வே. கருமானூர் கோயில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் அந்த ஊர் மக்களுக்குத் தீங்கு விளைவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதை நம்புவது ஆறறிவின் பயனாகும்.

ஆறறிவு வாய்த்திருந்தும், கோயிலின்மீது இடி விழுந்ததால் பெரும் தீங்கு விளையும் என்று நம்புகிற பலவீனம் கருமானூர் மக்களைப் போலவே நம் எல்லோருக்கும் உள்ளது. காரணம், ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருப்பதுதான்.

இப்போதைக்குத் தகர்க்கவே இயலாத சில மூடநம்பிக்கைகள் நம்மவர்களிடம் உள்ளன. அவற்றில், சாமி கும்பிடுவதும் ஒன்று.

கடவுளைக் கண்முன் நிறுத்துவதாக நம்பிச் சிலை வைக்கிறோம். கோயில் கட்டிக் கோபுரமும் எழுப்புகிறோம். அப்புறம் என்ன, மூத்தோர்களை முன் நிறுத்தித்  தமிழில் பக்திப் பாடல்கள் பாடி வழிபாட்டைத் தொடங்கலாம்.  ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ ஒருங்கிணைந்து பண்டிகை கொண்டாடலாம். அதற்கு மாறாக.....

கடவுளுக்குப் புரியுமோ என்னவோ, நமக்குப் புரியாத, அவர்களுக்கு மட்டுமே புரிகிற மொழியில் அவர்களால் கற்பிக்கப்பட்ட மந்திரங்களை ஓதச் சொல்லி 'மகா...மகா...மகா...கும்பாபிஷேகம்' நடத்தச் செய்தோமே அப்போதே நாம் மூடர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்.

கிடைத்ததைத் தின்று, கழித்து, மூத்திரம் பெய்து நம்மைப் போல் வாழ்கிற அவர்கள் சொல்லும் மந்திரங்களால் சிலையானது கடவுளாக மாறும் என்று நம்பினோமே, அப்போதே அவர்கள் நம்மைப் படு மூடர்கள் ஆக்கிவிட்டார்கள்.
நாம் முறையிட்டால் கடவுள் கேட்க மாட்டார் என்று நினைத்து, அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகள் ஆக்கினோமே அப்போதே நாம் படு படு மூடர்கள் ஆகிவிட்டோம்.

இத்தனை கனத்த மூடநம்பிக்கைகளை ஏற்கனவே நாம் சுமந்துகொண்டிருப்பதால்தான் குறைந்தபட்சம் சிந்திக்கும் ஆற்றலைக்கூட நம்மால் பெற்றிட இயலவில்லை.

மழைக்காலங்களில் எங்கெல்லாமோ தற்செயலாக விழுகிற இடி, ஒரு கோயில் கோபுரத்தின் மீது விழுந்ததை எண்ணி அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிற[இன்று ஊடகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இம்மாதிரி நிகழ்வுகள் மிக எளிதாக மக்களைச் சென்றடைகின்றன.  இதற்கு முன்பும் அவ்வப்போது கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்திருக்க வாய்ப்புள்ளது] நாம்,  சிந்திக்கக் கற்றல் வேண்டும்; இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஆனால், இந்நாள்வரை அது சாத்தியப்படவில்லை.

கருமானூரில் நிகழ்ந்தது போல, தமிழகமெங்கும் ஆங்காங்கே கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்தால்தான், வேதமந்திரம் ஓதி, குடமுழுக்குச் செய்வதால் பயன் ஏதுமில்லை  என்பதை நம்மால் உணர முடியுமோ என்னவோ!?

காலம் பதில் சொல்லும்.